10/19/2024
அமைதிக்கான மக்கள் இயக்கம் - தமிழ்நாடு சார்பாக பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை நிறுத்து என்ற தலைப்பில் 2024 அக்டோபர் 18 சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை எம் எல் ஏ, மனித நேய மக்கள் கட்சி தலைவர் முனைவர் MH ஜவாஹிருல்லா எம்எல்ஏ, முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவர் நவாஸ் கனி எம்பி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை தாங்கள் எழுப்புவோமென சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு வணிகர் சங்கங்கள் ஒத்துழைக்கும் என்றும் உறுதியளித்தார்.
அரங்கம் நிறைந்த மக்களாலும் உணர்ச்சி பூர்வ உரைகளாலும் நிகழ்ச்சி இது சிறப்பாக அமைந்தது.
மூத்த பத்திரிக்கையாளர் டி எஸ் எஸ் மணி, வெல்ஃபேர் கட்சி மாநிலத் துணைத் தலைவர் முகமது கவுஸ், பேராசிரியர் கிளாக்சன் அடங்கிய குழு நிகழ்ச்சியை சிறப்பாக வடிவமைத்து வழி நடத்தியது.
இந்நிகழ்வில் பேர் வெல்ஃபேர் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் முகமது இஸ்மாயில், வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் Adv ஷாஜகான் தலைமையில் வெல்ஃபேர் கட்சி செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.