27/12/2025
"பகுத்தறிந்து பேசுவோம்-5" நிகழ்வு 21/12/25 அன்று காலை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
நிகழ்ச்சி, திட்டமிட்டபடி வரவேற்புரை, சிறப்புரைகள் என மிக நேர்த்தியாக அமைந்தது. குறிப்பாக, திருக்குறளை ஒட்டி மாணவர்கள் வழங்கிய கதை சொல்லுதல் நிகழ்வும், பெரியாரின் பொன்மொழிகளை எடுத்துரைத்து அவற்றை விளக்கிய விதமும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. மாணவமணிகளின் தெளிவான பேச்சும், ஆழமான கருத்துகளும் அவையினருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.
தங்கள் குழந்தைகளை இவ்வளவு சிறப்பாகத் தயார் செய்து அழைத்து வந்த பெற்றோர்களுக்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, "தமிழும் செயற்கை நுண்ணறிவும்" (Tamil and AI) என்ற தலைப்பில் திரு. க. நரசிம்மன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை, நவீனத் தொழில்நுட்ப உலகில் தமிழை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த புதிய பார்வையை வழங்கியது.
மேலும், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. சு. முத்து மாணிக்கம் அவர்களின் உரை, அறிவு செறிந்த கருத்துக்களுடன் முத்தாய்ப்பாக அமைந்தது மிகவும் சிறப்பு.
இந்த நிகழ்ச்சியைச் செம்மையாக ஒருங்கிணைத்த மன்றத்தின் உறுப்பினர் குடிலரசி அவர்களுக்கும், ஆதரவு வழங்கிய தேசிய நூலக வாரியத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.