Organization of Tamil Cultural Activities and Charity Centre

Organization of Tamil Cultural Activities and Charity Centre Organization of Tamil Cultural Activities and Charity Centre, Roermond, The Netherlands
Stichting Tamil Cultureel Activiteits en Hulp Centrum
13-12-2001

கல்வி ஊக்குவிப்பு. நெதர்லாந்து, றோர்மொண்ட் நகரைச்  சேர்ந்த, திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன் அவர்கள் இன்று (19.06.2026) தனது...
19/06/2026

கல்வி ஊக்குவிப்பு.

நெதர்லாந்து, றோர்மொண்ட் நகரைச் சேர்ந்த, திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன் அவர்கள் இன்று (19.06.2026) தனது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, பலாச்சோலைக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நிதி அன்பளித்து இருந்தார். திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன் அவர்கள் நோய் நொடியின்றி நிறை செல்வத்தோடு, நீடுழீ வாழ வாழ்த்துவதோடு, அனுசரணை வழங்கிய நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
-என்றான் பாரதி.

திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன், தலைவர், தமிழ்க்  கலாச்சார உதவி நற்பணி மன்றம் ஆசிரியர்,றோர்மொண்ட் தமிழ்ப் பாடசாலை.
18/06/2026

திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன்,
தலைவர்,
தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம்
ஆசிரியர்,
றோர்மொண்ட் தமிழ்ப் பாடசாலை.

16/06/2026
திலகவதியார் மகளிர் இல்லம்,THILAKAVADIYAR GIRLS HOME,Thiruppalugamam,Batticaloa, Srilanka.14-06-2026திருமதி சாந்ததாரணி கப...
15/06/2026

திலகவதியார் மகளிர் இல்லம்,
THILAKAVADIYAR GIRLS HOME,
Thiruppalugamam,
Batticaloa,
Srilanka.
14-06-2026
திருமதி சாந்ததாரணி கபிலன் ,
றோர்மொண்ட்,
நெதர்லாந்து.
ஊடாக
திருமதி.கவிதா கோடீஸ்வரநாதன்,
தலைவர்,
தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம், றோர்மொண்ட்,
நெதர்லாந்து .

அன்புள்ளம் கொண்ட ஐயா / அம்மணி !
நன்றியும், நல்வாழ்த்தும்.
எமது பராமரிப்பிலுள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தாங்கள் திருமதி சாந்ததாரணி கபிலன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 14.06.2026 ஆம் திகதி விசேட உணவு வழங்கியமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இல்லத்திலுள்ள குழந்தைகள் அனைவரும் இன்றையதினம் ஒன்றினைந்து திருமதி சாந்ததாரணி கபிலன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் சீரும் சிறப்புடனும் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டுமெனவும் பிரார்த்தனை செய்ததுடன் இவ் விசேட உணவினை வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமெனவும் விஷேட பிரார்த்தனை செய்தார்கள்.
பெற்றோரை இழந்த ஏழைக் குழந்தைகளுக்கான சேவைகள் தடையின்றி நடைபெற தாங்கள் செய்கின்ற உதவி ஒத்தாசைகளை நினைக்கும்போது எமது இதயம் நன்றிப் பெருக்கால் பூரிப்படைகின்றது.
தங்களைப் போன்ற தர்ம சிந்தனை கொண்ட அன்பர்களின் தன்னலமற்ற உதவிகள் மூலமே எமது சமுதாயத்தில் தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு எம்மால் பணிசெய்யக் கூடியதாக உள்ளது.
இக் குழந்தைகள் கல்வி பெற்று ஒழுக்க சீலராக எதிர்காலத்தில் சமுதாயத்தில் நற்குடி மக்களாக வாழ்வதற்கு தங்களின் அன்பும், அனுதாபமும், உதவியும், ஒத்துழைப்பும் என்றும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
மிகுந்த புண்ணியம் தரவல்ல இப் புனித பணிக்கு தாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என மனப்பூர்வமாக நம்புகின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
சமூகப் பணியில்,
திருமதி.சிவசுந்தரி பிரபாகரன்,
இணைப்பாளர்.

யாழ். தினக்குரல் - 31-05-2026
05/06/2026

யாழ். தினக்குரல் - 31-05-2026

02/06/2026
31/05/2026

- திருமதி கல்பனா பகீரதன் - பிறந்த நாள் - 31-05-2026 -

கல்வி ஊக்குவிப்பு.கனடா, (Windsor) வின்சர் நகரைச் சேர்ந்த, திருமதி கல்பனா பகீரதன் அவர்கள் இன்று (31.06.2026) தனது பிறந்த ...
31/05/2026

கல்வி ஊக்குவிப்பு.

கனடா, (Windsor) வின்சர் நகரைச் சேர்ந்த, திருமதி கல்பனா பகீரதன் அவர்கள் இன்று (31.06.2026) தனது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, கோறளங்கேணி கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நிதி அன்பளித்து இருந்தார். திருமதி கல்பனா பகீரதன் அவர்கள் நோய்நொடியின்றி நிறை செல்வத்தோடு, நீடுழீ வாழ வாழ்த்துவதோடு, அனுசரணை வழங்கிய நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
-என்றான் பாரதி.

Adres

Karel Doormanstraat 3
Roermond
6045EA

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Organization of Tamil Cultural Activities and Charity Centre nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact De Organisatie

Stuur een bericht naar Organization of Tamil Cultural Activities and Charity Centre:

Delen