19/06/2026
கல்வி ஊக்குவிப்பு.
நெதர்லாந்து, றோர்மொண்ட் நகரைச் சேர்ந்த, திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன் அவர்கள் இன்று (19.06.2026) தனது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, பலாச்சோலைக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நிதி அன்பளித்து இருந்தார். திருமதி. கவிதா கோடீஸ்வரநாதன் அவர்கள் நோய் நொடியின்றி நிறை செல்வத்தோடு, நீடுழீ வாழ வாழ்த்துவதோடு, அனுசரணை வழங்கிய நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
-என்றான் பாரதி.