10/01/2026
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர அனைவரும் பிரச்சாரம் செய்வோம். 10.01.2026தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களின் வெற்றி சாதனைகளை எழுத்தாளர்கள்,தமிழ் ஊடகங்கள் சுட்டிக் காட்டவேண்டும். தமிழ்த் தாத்தா முனைவர் சு.வை.லிங்கம் வேண்டுகோள்.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லப்படுவதில் பல காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.மலாய், சீனப்பள்ளிகளுக்கு நமது மாணவர்கள் சென்று விடுகிறார்கள் என்பது ஒரு பெரும் காரணம் சொல்லப்படுகிறது. அந்த பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகளின் போதனை தர்ம் குறைந்து விட்டதா என்பதை ஒரு கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விக்கு தீர்வு காண தலைமையாசிரியர்கள், வாரியமும் ஆய்வு செய்யவேண்டுமென்பது வேண்டு கோளாகும் என மலேசியத் தமிழ் மணி மன்றம், மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தேசியத் தலைவர் தமிழ்த் தாத்தா முனைவர் சு.வை.லிங்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பள்ளிகளின் கல்வித்திட்டம் மற்ற பள்ளிகளுக்கு சமமாக இருக்கிறது. நமது ஆசிரியர்களும் போதனையில் சளித்தவர்கள் இல்லை. நம் பள்ளியின் போதனையின் சிறப்புகளை தலைமையாசிரியர்களும் பெறோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் வாரிய உறுப்பினர்களும் தமிழர்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பது நமது கோரிக்கையாகும். அவரவர் பள்ளியில் படித்தவர்கள் நாட்டில் எப்படிப்பட்ட பணி ஆற்றுகிறார்கள் என்று விவரங்களை வெளிப்படுத்தவேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம், உயர் பதவில் இருக்கின்ற அப்பள்ளியின் மூத்தமாணவர்களை கௌர விக்கவேண்டும் . அப்படி செய்வது நம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும்.
ஆறாம் வகுப்பு இறுதி ஆண்டு பள்ளி தேர்வு கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டது. அந்த தேர்வு தமிழ் ஊடகங்களில் வெளி வந்தபோது மாணவர்களின் திறமை வெளியிடப்பட்டது , தேர்வு முடிவு முடிவுகளை தமிழர் தெரிந்து கொண்டு தமிழ்பள்ளிகளின் போதனை உயர்வாக இருப்பதாக தெரிந்து கொண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளியில் படிக்க வைப்பதில் ஆர்வம் கொண்டார்கள். கல்வி அமைச்சு யூபி எஸ் ஆர் ,தேர்வை நிறுத்தி தமிழ் பள்ளிகளின் போதனை சாதனைகளை நிறுத்தி வைத்தது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
மலாய், சீன பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படாத நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முன் உரிமை கொடுத்து மாணவர்களுக்கு பயிற்சிய ளிக்கவேண்டும். நமது பாரம்பரிய கலைகள் சொல்லிக் கொடுக்கப்படு வதையும் தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களின் வெற்றி சாதனை களையும் எழுத்தாளர்கள்,தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டவேண்டும்.