03/04/2026
“58-ஆம் ஆண்டு சித்திரை நிறைமதி பெருவிழா"
("சித்திரை பௌர்ணமி மஹோற்சவ திருவிழா")
03.05.2026 (ஞாயிற்றுக்கிழமை / SUNDAY)
அன்புடையீர், வணக்கம்.
மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமுமாக விளங்கும் மலேசியா என்னும் தீபகற்பத்தின் கிழக்கு பகுதி பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள கம்போங் ஆவா, அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் தன்னை நாடி வரும் பத்த அடியார்களின் துன்பங்களை களைந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் குறிஞ்சி நிலக்கடவுளாக விளங்கும் குன்றிற குமரன் அருள்மிகு பாலசுப்பிரமணியர் முருகப்பெருமானுக்கு,
திருவள்ளுவர் ஆண்டு 2057 சித்திரை திங்கள் 28-ஆம் நாள் (03.05.2026 ஞாயிற்றுக்கிழமை) நன்னாளில் "சித்திரை நிறைமதி பெருவிழா" மிக நேர்த்தியாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. அவ்வண்ணம் கம்போங் ஆவாவில் வீற்றிருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் ஆண்டுதோறும் நிகழ்கின்ற "சித்திரை நிறைமதி திருவிழா" 23/04/2026 தொடங்கி 04/05/2026 வரை 12- நாட்களாக பின்வரும் நிகழ்ச்சி நிரலின்படி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. பத்தர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து முருகப்பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு என மனமுவந்து அழைக்கின்றோம்.