வள்ளலார் அன்பு நிலையம் ஈப்போ 1993-ம் ஆண்டு அமரர் தமிழ்க்குயிலார் டாக்டர் கா.கலியபெருமாள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக லிம் கார்டனில் (ஈப்போ நகரம், மலேசியா) இயங்கி வந்தது.
நன்கொடையாளர்களின் பங்களிப்பைக் கொண்டு அன்பு நிலையத்திற்கு குடும்ப கொடையாக நிலம் வாங்கினார். 30.06.2010-ல் மண்டபம் கட்டி, 18.07.2010-ல் திறப்பு விழா நடைபெற்றது.
வள்ளலார் அன்பு நிலையப்பணிகளில் சில [வள்ளலார் அன்ப
ு நிலையம் கையேடு, முதல் பதிப்பு ஜனவரி 2002]:
1. குறட்பா நெறி - அருட்பா நெறி - சித்தாந்த நெறிகளின் அடிப்படை உண்மைகளைத் தக்கார்களைக் கொண்டு போதித்தல்.
2. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு ஆகிய வாழ்வியல் நெறிகளை வகுப்புகள் நடத்திப் போதித்தல்.
3. யோகாசனம், பிராணாயாமம் ஆகிய உடல் மனம் பேணும் பயிற்சிகளை வழங்குதல்.
4. இறப்பு பிறப்பு, திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளைத் தமிழர் பண்பாட்டு முறைப்படித் தமிழில் நடத்த ஊக்குவித்தல்.
5. குடும்பங்களிலும் சமுதாயத்திலும் ஏற்படுகின்ற பிரச்சனைகளை எளிதாகத் தீர்த்துக் கொள்ள ஆலோசனை கூறும் மதிவழிச் சேவைகளை வழங்குதல்.
6. தனிமனித வாழ்விலும், சமுதாய அமைப்பிலும், தேசிய ஒருமைப்பாடும், குடிமைப்பண்பும், நல்லிணக்கமும், புரிந்துணர்வும், கட்டொழுங்கும், ஏற்படுவதற்கேற்ற பயிற்சி வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்துதல். Activities at Vallalar Anbu Nilayam, Ipoh [based on the Vallalar Anbu Nilayam Kaiyedu, First Edition Jan 2002]:
1. Conducting classes by qualified teachers to promote the ethics of Thirukural, Thiruvarutpa and Saiva Sithantha.
2. Conduct religious, cultural, ethics and Tamil language classes.
3. Inculcate the practise of Yoga, proper breathing exercises and meditation which is a boost to one's physical and spiritual health.
4. Conduct birth and death ceremonies, weddings, birthdays and such occasions in the Tamil language, according to Tamil culture.
5. Counseling and advisory centre with professional help to settle family and community conflicts.
6. Promote national unity and citizenship, tolerance and discipline, at an individual and community level.