02/04/2026
தளத்தின் தோட்டம்
எதிர்கால உலகிற்கு இளையோரை தயார்ப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வரும் "தளம்" அமைப்பு, இளையோரின் தொழில்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில், "தளம்" அமைப்பின் தளம் நோவா வளாகத்தில் இளையோரின் பங்கேற்புடன் இயற்கை முறையில் தோட்டம் அமைக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இம்முறையும் கீற்றுக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் இணைந்து மிளகாய், பாகற்காய், வல்லாரை, கத்தரிக்காய் போன்ற பல்வேறு மரக்கறிப் பயிர்களை விதைத்து, சீரான பராமரிப்பின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள தோட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த முயற்சி இளையோருக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, தன்னிறைவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் ஊக்குவிக்கிறது.
மேலும், தளம் அமைப்பின் அங்கத்தவர்கள் மட்டுமின்றி திருக்கோணமலை வாழ் சிறியோர் முதல் பெரியார் வரை தமது உடல் ஆரோக்கியத்தை பேணும், தன்னிறைவு இயற்கை முறை விவசாயம் பற்றி தெரிந்து தம்மை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வைத்தலை நோக்காக்கொண்டு "தளம்" அமைப்பின் அனுசரனையுடன் இயற்கை விவசாயம் கற்கை நெறியானது முன்னெடுக்கப்படவுள்ளது.
4 மாத இயற்கை வேளாண்மை பகுதி நேர பயிற்சி நெறியில் இணைந்து எம்மோடு பயணிக்க ஆர்வம் உள்ள அனைவரும் கீழுள்ள வாட்ஸாப்ப் குழுவில் இணைந்திடுங்கள். குழுவில் இணைய,
Link in Comment
🌱 எதிர்காலம் நாங்களே! 📍 Trincomalee
#தளம் #இளையோர் #விவசாயம் #இயற்கை #வீட்டுத்தோட்டம்