01/12/2024
மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் நிதி அனுசரணையுடன் இமயம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சத்துருகொண்டானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் நேற்றைய தினம், சனிக்கிழமை(30.12.2024) வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது இந்து மகளிர் மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்களும் இமயம் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். கிராம சேவகர் உத்தியோகத்தரின் உதவியின் கீழ் உலர் உணவுப் பொதிகள் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Gayathri Uthayakumar
Imayam Youth Club