10/02/2025
பாடசாலை மைதானம் மாணவர்களுக்கா, மாடுகளுக்கா?
நம் பாடசாலையில் மாணவர்கள் விளையாட வேண்டிய மைதானம் தற்போது மாடுகளின் மேச்சல் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் பெரும் இடையூறாக உள்ளது.விளையாட்டு என்பது மாணவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. ஆனால், பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல், அவர்களின் விளையாட்டு வெளிக்கே மாடுகளை அனுமதிக்கிறது. இதன் காரணமாக, மாணவர்கள் ஒழுங்காக விளையாட முடியாத பிரச்சனைகளும் உருவாகின்றன.பாடசாலை என்பது மாணவர்களுக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாடுகள் மேயும் இடமாக இருக்கக் கூடாது! இது பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி துறையினர் அனைவரும் இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாடசாலை நிர்வாகம் உடனடியாக மைதானத்தை சுத்தமாக வைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்!இந்த நிலையில் உங்கள் கருத்து என்ன? பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்! #கல்விக்கு_நீதி #மாணவர்களின்_உரிமை / MMM VID (Nation school )