SUNGAVIL FOUNDATION

SUNGAVIL FOUNDATION Education for all

சுங்காவில் கிராம மாணவர்களின் கல்வி, திறன், மனப்பாங்கு மற்றும் ஒழுக்கம் போன்ற விடயங்களை மேம்படுத்துதலை பிரதான நோக்காக கொண்டு செயற்படும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.

மரண அறிவித்தல் மற்றும் இரங்கல் செய்திசுங்காவில் பறனகம பகுதியை பிறப்பிடமாகக் கொண்டு, நெளும்புர பகுதியில் வசித்து வந்த சமூ...
03/05/2025

மரண அறிவித்தல் மற்றும் இரங்கல் செய்தி

சுங்காவில் பறனகம பகுதியை பிறப்பிடமாகக் கொண்டு, நெளும்புர பகுதியில் வசித்து வந்த சமூக ஆர்வலர் முஹம்மது சுல்தார் அப்துல் கபூர் அவர்கள் இன்று (03 மே 2025) அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுங்காவில் அறக்கட்டளையின் நீண்டகால பொருளாளராகவும், மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும், ஜாமியுல் பலாஹ் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும், பறனகம அபிவிருத்தி சங்க கணக்காய்வாளராகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராகவும் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தராகவும் இதுபோன்ற பல பொறுப்புகளை சிறப்பாக ஏற்று, சமூகத்திற்கு அர்ப்பணித்துவந்தவராவார்.

அன்னார் மிகவும் மென்மையான, பணிவான மனிதர் மட்டுமன்றி, சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆழமான சிந்தனையுடன் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்ட சமூக சேவகர் ஆவார்.

அன்னாரின் மறைவு, சுங்காவில் அறக்கட்டளைக்கு ஏன் சுங்காவில் மண்ணுக்கே பேரிழப்பாகும்.

اللّهُـمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ،
وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ،
وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ،
وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ

அல்லாஹ், அவரின் மன்னரை வாழ்க்கையை வெளிச்சமுள்ளதாக மாற்றி, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை அருள்வானாக!

அன்னாரின் குடும்பத்தினருக்கு அவரது இழப்பினை தாங்க கூடிய மனவலிமையை அல்லாஹ் ரப்புள் ஆலமீன் அளிப்பானாக!

அவரது ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இப்படிக்கு,
சுங்காவில் அறக்கட்டளை
சுங்காவில், பொலன்னறுவை.

22/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ.

பெற்றார் ஆசிரியர் சங்க (பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு - SDEC) பொதுக்குழுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ், நாளை (செவ்வாய்க்கிழமை - 23.07.2024) பி.ப 3.00 மணியளவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.

நமது பாடசாலையில் கல்வி கட்கும் மாணவர்களின் பெற்றார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

அதிபர்
பொ/ சுங்காவில் மு.ம.வி

20/07/2024

தமிழ் மொழித் தினம் (வலய மட்டம்) - 2024

பங்கு பற்றிய போட்டிகள் 25

முதலாமிடம் 09
இரண்டாமிடம் 06
மூன்றாமிடம் 03

மொத்தம் 18 இடங்கள்.
Alhamthulillah

வழி நடத்திய வித்தியாலய அதிபர் B.S. MAHUFEER SLPS 1 அவர்களுக்கும்

பயிற்சி தொடர்பில் அரும்பாடுபட்டு பணியாற்றிய

J. Nafeesha Tr
MSU. Fareedha Tr

மாணவர்கள் அழைப்பு,பாதுகாப்பு என்பவற்றில் உதவிய

S. Sakeeka banu Tr
ARP. Sasna Tr
MYF. Rifasha Tr

மற்றும் பாடசாலை நேரத்தில் பயிற்சி அளித்த தமிழ் மொழித் தினக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றார்களுக்கும்
விஷேடமாக நமது பாடசாலை நாமம் உயந்து விளங்க தமது திறமையை வெளிப்படுத்திய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் பாராட்டுக்கள்.
🤝🤝🤝
Jasakallah hu hairan.

தகவல்
அதிபர் ஊடாக
பொறுப்பாசிரியர்.
Sm. Majeed sir
2024.07.20.

PL / Sungavila MMV

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ.SF அமைப்பின் 7 வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு சாதனையாளர்களுடன் ஓர் அமர்வுசுங்காவில் பவுண்டேசன் 201...
12/05/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வ. வ.

SF அமைப்பின் 7 வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு சாதனையாளர்களுடன் ஓர் அமர்வு

சுங்காவில் பவுண்டேசன் 2017 தொடக்கம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை அல்லாஹ்வின் அருளால் செய்துகொண்டு வருகின்றது . அல்ஹம்து லில்லாஹ்

அந்தவகையில் 7 வருட ஆண்டு நிறைவை முன்னிட்டு நண்கொடையாளர்கள், சந்தாதாரர்கள், முன்னாள் சங்க உறுப்பினர்கள், தற்போதைய நிருவாக உறுப்பினர்கள் ஒன்று கூடும் சினேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (10.05.2024) இரவு 8.00 மணியளவில் ஜாசிம் திருமண மண்டபதில் (நெளும்புற, சுங்காவில்) நிறைவாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிகளாக பொ/சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் B.S மஹுபீர் அவர்களும் மற்றும் பொ/ அல் - இக்ராஹ் ஆரம்ப பாடசாலையின் அதிபர் A.S பரிஸானா அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு மௌலவி AJM ரிப்கான் (இஹ்ஷானி) அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமானது. வரவேற்புரையை சுங்காவில் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ASM அரபா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுங்காவில் பவுண்டேசன் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் அமைப்பின் முன்னர் தலைவரும் மற்றும் முபீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான மௌலவி JM ரிஹான் (ஸஹ்வி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. அடுத்ததாக அமைப்பின் ஊடாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் பற்றி அமைப்பின் பொருளாளர் MSA கபூர் அவர்களால் உரையாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரதம அதிதியாக வருகைதந்த பொ/சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் BS மஹூபீர் அவர்கள் தனது உரையில் எமது ஊரில் கல்வி அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களில் எமது சமூகத்தின் நிலைப்பாடும் யதார்த்த தன்மையும் பற்றி தெளிவுப்படுத்தினார். அடுத்ததாக அதிதியாக வந்திருந்த அல்- இக்ராஹ் பாடசாலையின் அதிபர் AS. அவர்களினால் எமது அமைப்பினால் நடத்தப்பட்ட வேலைத்திட்டங்களை நினைவு கூர்ந்ததுடன் சில தேவைகளையும் முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் ஆலோசனை சபைத் தலைவருமான மௌலவி AS அஸ்மி (யூசூபி) அவர்களினால் அமைப்பின் நோக்கம் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றி தெளிவூட்டப்பட்டது. அடுத்தாக அமைப்பின் செயலாளர் NM பாரிஸ் அவர்களினால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது. இறுதியாக அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் ஆலோசனை சபைத் தலைவருமான மௌலவி AS அஸ்மி (யூசூபி) அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்து நிகழ்வுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

#சுங்காவில்_பவுண்டேசன்

11/04/2024
03/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் நாளையதினம் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ,மாணவிகள் அனைவரும் உறுதியான ஈமானும்,ஆழமான அறிவும் நிறையப்பெற்ற வர்களாக மிளிர வேண்டுமென இறைவனை இரைஞ்சுவோம்.

அவர்களுக்காக மனமாரப் பிரார்த்திப்போம். அவர்களது வெற்றியின் பங்காளிகளாகி அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்.

யா அல்லாஹ்! நாளைய தினம் பரீட்சை எழுதும் சகோதர,சகோதரிகளுக்கு அருள்பாலிப்பாயாக!

அவர்களுக்கு பரீட்சையை இலகு படுத்துவாயாக!!
யா அல்லாஹ்! அவர்களது உள்ளங்களைப் பலப்படுத்துவாயாக!!உன்னுடைய ரஹ்மத்தையும் பரக்கத்தையும் அவர்கள்மீது சொரிவாயாக!!

நீயே அவர்களது பொறுப்பாளி;நீயே அவர்களது உதவியாளன்.அவர்கள் சரியாகவும் தெளிவாகவும் பரீட்சை எழுதி,பூரண வெற்றியடைந்து,அவர்களது உன்னத இலட்சியங்களை அடைவதற்கு கிருபை செய்வாயாக!!அதன் மூலம் அவர்களது பெற்றோருக்கும் முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும் கண் குளிர்ச்சியைக் கொடுப்பாயாக!!

அவர்கள் ஒவ்வொருவரையும் சிறந்த கல்விமான்களாக, தலைசிறந்த புத்திஜீவிகளாக, இஸ்லாமிய விழுமியங்கள் கொண்ட முன்மாதிரிமிக்க அறிஞர்களாக மிளிரச் செய்வாயாக!!!🤲🤲🤲 ஆமீன்

றியான் (ஸஹ்வி)

14/01/2022

பொ/சுங்காவில் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்திற்கு தெரிவாகியுள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சுங்காவில் பவுண்டேசன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

சில வருடங்களாக செயல்படாத இந்த அமைப்பினை மீண்டும் உருவாக்க துணைநின்ற அதிபர், பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், நலன்விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகும்.

பழைய மாணவர் சங்கம் திறன்பட இயங்க சுங்காவில் பவுண்டேசன் என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம், இன்ஷா அல்லாஹ்!!

சுங்காவில் பவுண்டேஷன.

சுங்காவில் பவுன்டேசன்  நிருவாகத்தில் இனைவதற்கான விண்ணப்பம் கோரல்.சுங்காவில் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக...
21/02/2021

சுங்காவில் பவுன்டேசன் நிருவாகத்தில் இனைவதற்கான விண்ணப்பம் கோரல்.

சுங்காவில் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் சுங்காவில் பவுண்டேஷன் அமைப்பின் புதிய நிறுவாகத்திற்கான உறுப்பினர் தெரிவு இடம்பெறுகின்றது. சுங்காவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கிராமத்துடன் நெருங்கிய தொடர்புடைய நலன்விரும்பிகள் எமது அமைப்பில் உறுப்பினராக இணைந்து கல்வி மேம்பாட்டிற்காக செயற்பட இது ஒரு அரிய வாய்ப்பு.

கீழுள்ள லிங்கை (link) கிளிக் (click) செய்து உங்கள் தகவகளை உள்ளீடு செய்யவும்.

Sungavila, Polonnaruwa, Sri Lanka

பல சவால்களுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து...
11/10/2020

பல சவால்களுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

අපොස උසස් පෙළ විභාගය සඳහා පෙනී සිටින සියළුම සිසුන්ට අපෙන් සුබ පැතුම්!!

HAPPY CHILDREN'S DAY!Children are the world's most valuable resources and is the best hope for the future!
01/10/2020

HAPPY CHILDREN'S DAY!

Children are the world's most valuable resources and is the best hope for the future!

30/09/2020

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ிவிருத்திச்சங்க இலவச பகுதி நேர பாட வகுப்புக்களுக்கான விண்ணப்பபடிவம் சம்பந்தமானது*

#சுங்காவில் ிவிருத்திச்_சங்கம் தரம் 9 இல் கல்வி கற்கும் ஆண் பெண் இரு பாலாருக்கும் இலவச பாட நேர வகுப்புகள் நடாத்த திட்டமிட்டுள்ளது.அந்த வகையில் அதற்கான விண்ணப்ப வழங்கல் நடவடிக்கை 2020.09.26 ஆம் திகதியிலிருந்து அஸரிலிருந்து இஷா வரை M.I.M.மபாஸ் (0782977778) அவர்களின் வீட்டில் பெற முடியும்.

ஆர்வம் கொண்ட மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்.

இப்படிக்கு,

பரணகம அபிவிருத்திச் சங்கத் தலைவர்
U.இர்ஷாத்

மேலதிக தொடர்புகளுக்கு...

+97 430606140 / 0766888656 / 0782977778

Address

Polonnaruwa

Alerts

Be the first to know and let us send you an email when SUNGAVIL FOUNDATION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share