03/05/2025
மரண அறிவித்தல் மற்றும் இரங்கல் செய்தி
சுங்காவில் பறனகம பகுதியை பிறப்பிடமாகக் கொண்டு, நெளும்புர பகுதியில் வசித்து வந்த சமூக ஆர்வலர் முஹம்மது சுல்தார் அப்துல் கபூர் அவர்கள் இன்று (03 மே 2025) அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுங்காவில் அறக்கட்டளையின் நீண்டகால பொருளாளராகவும், மொகிதீன் ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும், ஜாமியுல் பலாஹ் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும், பறனகம அபிவிருத்தி சங்க கணக்காய்வாளராகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராகவும் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தராகவும் இதுபோன்ற பல பொறுப்புகளை சிறப்பாக ஏற்று, சமூகத்திற்கு அர்ப்பணித்துவந்தவராவார்.
அன்னார் மிகவும் மென்மையான, பணிவான மனிதர் மட்டுமன்றி, சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆழமான சிந்தனையுடன் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்பட்ட சமூக சேவகர் ஆவார்.
அன்னாரின் மறைவு, சுங்காவில் அறக்கட்டளைக்கு ஏன் சுங்காவில் மண்ணுக்கே பேரிழப்பாகும்.
اللّهُـمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ،
وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ،
وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ،
وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ
அல்லாஹ், அவரின் மன்னரை வாழ்க்கையை வெளிச்சமுள்ளதாக மாற்றி, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை அருள்வானாக!
அன்னாரின் குடும்பத்தினருக்கு அவரது இழப்பினை தாங்க கூடிய மனவலிமையை அல்லாஹ் ரப்புள் ஆலமீன் அளிப்பானாக!
அவரது ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
இப்படிக்கு,
சுங்காவில் அறக்கட்டளை
சுங்காவில், பொலன்னறுவை.