28/12/2025
ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கண்ணீர் பதிவு 👇
ஒரு இளம் பல்கலைக்கழக மாணவன்,
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் மேலாண்மை பதவிக்கான நேர்காணலுக்கு சென்றான்.
அவனுடைய கல்வித் தகுதிகள் மிக உயர்ந்தவை.
எல்லா சுற்றுகளையும் வெற்றிகரமாக கடந்து,
இறுதி சுற்றில் அவனை நேர்காணல் செய்தது
அந்த நிறுவனத்தின் இயக்குனர் தான்.
இயக்குனர் அவனுடைய சான்றிதழ்களை கவனமாக பார்த்துவிட்டு கேட்டார்:
“மகனே, உனக்கு இந்தப் படிப்புக்காக ஏதேனும் உதவித்தொகை (Scholarship) கிடைத்ததா?”
அந்த இளைஞன் அமைதியாக பதிலளித்தான்:
“இல்லை சேர்…
என் உம்மாதான் என் படிப்புக்காக எல்லாவற்றையும் செய்தார்கள்.”
இயக்குனர் மீண்டும் கேட்டார்:
“உன் உம்மா என்ன வேலை செய்கிறார்கள்?”
அவன் சற்றே நெகிழ்ந்து சொன்னான்:
“என் உம்மா …
வீடுகளில் உடுப்பு கழுவும் வேலை செய்கிறார்கள்.
பிறர் உடைகளை துவைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.”
இயக்குனரின் பார்வை, அவன் கைகளில் நின்றது.
அந்த கைகள்…
மிக மென்மையானவை, சினுங்கியவை.
அவர் கேட்டார்:
“நீ ஒருநாளாவது உன் உம்மிக்கு உடை துவைக்க உதவி செய்ததுண்டா?”
அவன் தலை குனிந்து பதிலளித்தான்:
“இல்ல சேர்…
உம்மாக்கு நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆசை.
மேலும், என்னைவிட அவர்கள் வேகமாகவும் நன்றாகவும் துவைப்பார்கள்.”
இயக்குனர் சில நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.
பின்னர் மெதுவாகச் சொன்னார்:
“சரி…
இன்று வீட்டுக்கு போய்,
உன் உம்மாவின் இரண்டு கைகளையும் நீயே கழுவு.
கழுவிவிட்டு, நாளை காலை என்னை வந்து சந்தி.”
இளைஞனுக்கு இது பெரும் ஆச்சரியம்.
“இது வேலை கிடைக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரு சின்ன சோதனையோ?”
என்று எண்ணிக்கொண்டான்.
அன்று மாலை அவன் வீட்டுக்குச் சென்றான்.
உம்மாவிடம் மெதுவாகச் சொன்னான்:
“உம்மா…
இண்டெகி நான் ஒங்கட கைகளை கழுவணும்.”
உம்மா ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால் மகனின் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்து,
அமைதியாக தன் கைகளை நீட்டினார்கள்.
மகன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து,
உம்மாவின் கைகளை கழுவத் தொடங்கினான்…
மெல்ல…
மெல்ல…
அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அந்த நாள்தான்…
அவன் முதன்முறையாக,
தன் தாயின் கைகளை
உண்மையாகப் பார்த்தான்.
அந்த கைகள் —
சுருக்கம் நிறைந்தவை…
நீரில் கரைந்தது போல மெல்லியவை…
சவக்கார தூள், நீரும் அடிக்கடி பட்டதால்
பல இடங்களில் புண்கள்… கீறல்கள்… கைகள் இரண்டும் பவுடர் போட்டது போல்... காயிந்து, வறண்டு...
"எப்பாலும் இல்லாத மாதிரி ஏன் இண்டைக்கு என் கைகளை கழுவுகிறாய்"...
அவன் தாய் சிரித்தவாறு கேட்டார்கள்...
அவன் கைகளைத் தேய்க்கும் போது,
அந்த புண்கள் வலியால்
உம்மா மெதுவாக உளறினார்கள்.
அந்த நொடியில்தான்,
அந்த இளைஞனின் உள்ளம் உடைந்தது…
“இந்த கைகளில் இருக்கும் ஒவ்வொரு புண்ணும்,
என் படிப்புக்காக, பல்கலைக்கழக கட்டணத்திற்காக
உம்மா கொடுத்த விலையே…
இந்த சுருங்கிய தோல்தான்
என் நாளைய வாழ்க்கையை
அழகாக்கிய அடித்தளம்…”
அந்த இரவு அவன் தூங்கவே இல்லை. பாவம் என் உம்மா...
எனக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கா...
கண்ணீரைத் துடைத்து துடைத்தே அவன் கைகள் வலித்தன...
உம்மா துவைக்காமல் வைத்திருந்த
முழு உடை மூட்டையையும்
அவனே துவைத்து முடித்தான் அந்த இரவில்.
---
அடுத்த நாள் காலை,
அவன் இயக்குனரை சந்திக்க சென்றான்.
அவன் கண்கள் சிவந்திருந்தன…
அழுததின் சாட்சி.
இயக்குனர் கேட்டார்:
“என்ன மகனே…
நேற்று என்ன நடந்தது?”
அவன் தரையைப் பார்த்தபடி சொன்னான்:
"சேர்…
இன்றுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தது —
என் திறமையால், என் புத்தியால் தான் இந்தப் பட்டம் எல்லாம் பெற்றேன்,
இங்கே வந்தேன் என்று.
ஆனால் நேற்று தான் உணர்ந்தேன்…
என் உம்மாவின் அந்த கரைந்த கைகள் இல்லையென்றால்,
இன்று ‘நான்’ என்று ஒருவன்
இருந்திருக்கவே மாட்டேன்.
நான் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடத்தை
கற்றுக்கொண்டேன்.”
இயக்குனர் புன்னகைத்தார்.
“ஒரு மேலாளருக்கு இருக்க வேண்டிய
மிக முக்கியமான தகுதி இதுதான்.
மற்றவர்களின் வலியை உணரும் மனம்…
தன் உயர்வுக்குப் பின்னால் இருக்கும்
தியாகத்தை மதிக்கும் குணம்.
அப்படிப்பட்ட ஒருவரைத்தான்
நான் தேடினேன்.
முபாரக்!
உனக்கு இந்த வேலை கிடைத்துவிட்டது.”
🤝
---
நாம் அழகான வீடுகளில் வாழும்போது…
அழகான உடைகள் அணியும்போது…
வாகனங்களில் பயணம் செய்யும்போது…
“இது என் திறமை”
என்று நினைக்கிறோம்.
ஆனால் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்…
அந்த திறமையின் பின்னால்,
திரை மறைவில் நின்று,
தன் முழு வாழ்க்கையையும் கரைத்து
உங்களை உயர்த்திய
இருவர் இருக்கிறார்கள்.
அவர்கள் —
உங்கள் உம்மா …
உங்கள் வாப்பா…
நீங்கள் இன்று எந்த உயரத்தில் நிற்கிறீர்களோ,
அது அவர்கள் நேற்று சுமந்த
வலியின் விளைவு.
உங்கள் பிள்ளைகளுக்கு
பெரிய வீடுகள் கொடுப்பதைவிட,
"இஸ்லாமிய பண்புகள் "
“வலி என்றால் என்ன?”
“முயற்சி என்றால் என்ன?”
என்பதை கற்றுக்கொடுங்கள்.
ஏனெனில் —
ஒரு பட்டத்தால் கற்றுக்கொள்ள முடியாத
“அன்பு, கருணை,மனிதநேயம்”
அங்கேதான் பிறக்கிறது. 💚
Anbiya page ஜை follow பண்ணி என்றும் இணைதிருங்கள். ஜஸாக்கல்லாஹ் 🙂