Mutur JMI

Mutur JMI 𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝 Since in 2016. (NGO, Publication, Tesla Institute, Muththithal, OML)

முதூர் ஜே.எம்.ஐ நிறுவனத்தின்10 ஆண்டு நிறைவையொட்டி பிரமாண்ட  "விண்ணப்பங்களை இன்றே பெற்று மதிப்பளிப்பை உறுதி செய்யுங்கள்"ம...
22/07/2026

முதூர் ஜே.எம்.ஐ நிறுவனத்தின்
10 ஆண்டு நிறைவையொட்டி பிரமாண்ட


"விண்ணப்பங்களை இன்றே பெற்று மதிப்பளிப்பை உறுதி செய்யுங்கள்"

மேலதிக தொடர்புகளிற்கு
*𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝*
Address : *Bazar Mosque Road, Mutur*
Contact : *𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎*
Website : www.muturjmi.com
Mail : [email protected]

WhatsApp Channel Link 👇🏻
https://whatsapp.com/channel/0029VbCZM2j1NCrWBbIfpO2X

மூதூர் பிரதேசத்தில் TIN Registration உதவி தேவைப்படுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளமுடியும். Details More Mutur JMI Pvt LtdBa...
20/06/2026

மூதூர் பிரதேசத்தில் TIN Registration உதவி தேவைப்படுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளமுடியும்.

Details More
Mutur JMI Pvt Ltd
Bazar Mosque Road, Mutur
0771020030 | 0717891887

Mutur JMI நிறுவன ஏற்பாட்டில் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான கல்விசார் பொது அறிவு வழிகாட்டல் இலவச...
21/05/2026

Mutur JMI நிறுவன ஏற்பாட்டில் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான கல்விசார் பொது அறிவு வழிகாட்டல் இலவசக் கருத்தரங்கு கடந்த 10.05.2026 மூதூர் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதோடு முன்னாள் அதிபர் ஜே.எம்.மாஹிர் sir அவர்கள் இந்நிகழ்வின் வளவாளராகவும் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ரம்.ரமீம் அவர்களும், தற்போதைய பாடசாலை அதிபர் எஸ்.எம்.சுக்ரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இக்கருத்தரங்கில் 100 க்கு மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு சிற்றுண்டி அன்பளிப்பு செய்த மௌஸூன் பவுண்டேஷன் மற்றும் ஊடக அனுசரணை அளித்த Deen Studio நிறுவனங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 82   #தோற்றுப்_போனவர்கள் வகை - சிறுகதைத் தொகுப்பு  ஆசிரியர் - புத்தளம் ஸாலிஹ் அஸீம்வ...
22/04/2026

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 82


#தோற்றுப்_போனவர்கள்
வகை - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் - புத்தளம் ஸாலிஹ் அஸீம்
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 97
விலை - 700.00
தொடர்பிலக்கம் - 0710400717

#நூல்_பற்றி
கதாசிரியரின் கற்பனையில் இருந்து எழும் கதைகள்கூட மனித வாழ்க்கையின் யதார்த்தங்க ளுடன் பின்னிப் பிணைந்து வாழ்க்கை நடைமுறைகளைப் படம் பிடித்து காட்டுவதாகவே அமைய வேண்டும். அந்தவகையில் இந்தத் தொகுதியில் வெளிவருகின்ற ஒவ்வொரு கதைகளும் எல்லோரும் வாசிக்க வேண்டிய சிறந்த கதைகளாக அமைந்துள்ளன.

ஸாலிஹ் அஸீமின் படைப்புகளை நோக்கும் போது பெரும்பாலான சிறுகதைகளில் சமூக அவலங்கள் பிரதிபலிக்கும். அத்துடன் சாதாரண மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துயரங் கள், வாழ்வியல் பாடுகள், வாழ்வியல் நடப்புகள், பல்வேறு வகை யான பிரச்சினைகள் போன்றவை கதைகளில் அழகாக வெளிப் படுத்தப்பட்டிருக்கும். நடைமுறை வாழ்க்கையின் சமகால விடயங் களை மிகவும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுவதாகவே ஸாலிஹ் அஸீமின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் அமைந்துள்ளன என்று பொதுவாகக் குறிப்பிடலாம்.

கதாசிரியர் சிறப்பான முறையில் கதையை நகர்த்திச் சென்றுள்ளமையைப் பாராட்டத்தான் வேண்டும். இவருடைய பெரும் பாலான கதைகள் நடைமுறையில் நிகழ்கின்ற சம்பவங்களையும், யதார்த்தமாக இடம்பெறுகின்ற அவலங்களையும் வெளிப்படுத்தும் வகையிலமைந்த பேச்சு வழக்கு, கலாசார விழுமியங்களை மிகவும் தெளிவாகப் படம்போட்டுக் காட்டுவதாவே அமைந்துள்ளன.

சிறு கதைக்கான கரு, களம், பிரதேச மொழி போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறுகதையை சீராக வெளிப்ப டுத்தும் பாத்திரப் படைப்பு, சம்பவக் கோர்வை, கதையின் மூலம் சமூகத்துக்கு முன்வைக்கப்படுகின்ற தீர்வு போன்றவற்றுக்கு முக்கி யத்துவம் வழங்கப்பட்டு எழுதப்படுகின்ற கதைகள் தனித்துவமா னவை என்பதை மறுப்பதற்கில்லை. முற்றும் முழுவதுமாக கற்பனை களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்வியலை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டக்கூடிய யதார்த்தமான படைப்புகளே மக்களின் மனதில் பதிந்து நிற்கின்றன.

இந்தத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை பொதுவாக நோக்கும்போது அந்தந்தப் பிரதேச மண்வாசனை, சந்தோசங்கள், பிரச்சினைகள், வேதனைகள், சோதனைகள், மனப் போராட்டங் கள், துன்ப துயரங்கள் போன்ற எல்லாவற்றுக்கும் அப்பால் மனித உணர்வுகளின் வெளிப்படுத்தல்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

சில சிறுகதைகளை நோக்கும் போது அதில் வருகின்ற சம்பவங்கள், நாம் கண்டு களித்த விடயமாகவோ அல்லது கேள் விப்பட்ட விடயமாகவோ அன்றாட வாழ்வியல் விடயங்களை இயல் பாகக் காட்டுவதாக அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 81   #நனைந்த_காகிதங்கள்    வகை - கவிதைத் தொகுப்பு  ஆசிரியர் - செய்யத்துக்கனி அப்துல்...
22/04/2026

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 81


#நனைந்த_காகிதங்கள்
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - செய்யத்துக்கனி அப்துல்லாஹ்
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 118
விலை - 700.00
தொடர்பிலக்கம் - 0756748299

#நூல்_பற்றி
ஜாமியா நளீமியா கல்வியல் பீடத்தில் கற்றுக்கொண்டிருக்கும் நூலாசிரியர் வாழையூர் இளவரன் என்ற புனைப்பெயர் கொண்ட செய்யத்துக்கனி அப்துல்லாஹ் அவர்கள் ஓட்டமாவடியை பிறப்பிடமாகக்கொண்ட வளர்ந்துவரும் இளம் கவிஞர் ஆவார்.

இவரின் கன்னி நூலாக வெளிவந்துள்ள நனைந்த காகிதங்கள் நூல் பற்றி...
இலக்கியப் படைப்புகளின் தொடக்கமும் கவிதையாக அல்லது கவிதை வழியாக குறைந்தபட்சம் கவிதையின் சாயல்கொண்டதாகவே வளர்ந்து வந்திருக்கிறது. தமிழில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, நவீனம் கடந்த கவிதை போன்ற சொற்களைக் கொண்டு கவிதையை வகைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

கவிதை கலையின் மொழியாக, இலக்கிய வடிவமாக பரிணமித்து இன்றுவரை அதன் செழுமையான இருப்பு தொடர்வதற்கு அதன் உள்ளடக்கமும் மிக முக்கிய காரணமாக ஆயிற்று.

அதீத கற்பனையுடன் மானுட வாழ்விலிருந்தும், அதன் எளிய யதார்த்தங்களிலிருந்தும் கவிதை விலகி நின்ற ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால் நவீன கவிதை அந்தப் போக்கிலிருந்து விலகி மனித வாழ்வின் பல்வேறு சாரங்களை அழகியல் பார்வையுடனும், தத்துவார்த்த நோக்குடனும் முன்வைக்கத் தொடங்கிய போது அதன் யதார்த்தமும், சமகாலத் தன்மையும் உறுதிப்படுத்தப் பட்டது. அது கவிதையை இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்றது. இலக்கியம் செழுமையோடு மதிக் கப்பட்ட, புழங்கப்பட்ட எல்லா மொழிகளுக்கும் இது ஒரு பொதுவான உண்மையாக இருந்தது.

கவிதை குறித்த இந்தப் புரிதலோடு இளைய கவி செ.அப்துல்லாஹ்வின் நனைந்த காகிதங்கள் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். கிழக்கு வானில் மேலும் ஒரு சிறந்த கவிஞன் உதயமாவதற்கான சமிக்ஞையாக இந்தத் தொகுதி எனக்கு வெளிச்சம் காட்டுகிறது. அவரது கவிதையின் மொழியும், கற்பனைச் செறிவும் எனக்கு இந்த நம்பிக்கையைத் தருகின்றன.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 80   #தாய்_மாமன்   வகை - கவிதைத் தொகுப்பு  ஆசிரியர் -  குகதாவெளியீடு - அன்பின்பாதை எ...
20/04/2026

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 80


#தாய்_மாமன்
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - குகதா
வெளியீடு - அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 128
விலை - 750.00
தொடர்பிலக்கம் - 0772747298

#நூல்_பற்றி
பாடசாலைக் காலங்களில் சாதாரணமாக கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பங்கேற்று சிறுகச்சிறுகச் சேகரித்த வெற்றிகளுக்கு அமோக வரவேற்பளித்து தட்டிக்கொடுத்து எனக்கான புதுப்பாதையை அமைத்துக் கொடுத்ததுடன், தரம் 11ல் கற்றுக் கொண்டிருந்த போது “இலங்கை நீரிழிவு சம் மேளனத்தினால்” நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற வுடன் சாற்றிதழையும் பரிசிலையும் பார்த்து விட்டு மகிழ்ந்து ஆசீர்வதித்தார் "புத்தகமாக வெளியிட வேண்டும் எல்லாத்தையும் கவனமா கச் சேர்த்துவை நிறைய வாசி நினைய எழுதலாம்” இந்த ஆசீர்வாதம் இன்றும் என்னை ஆசீர் வதித்து நிற்பதாய் உணர்ந்து பேருவகையடை கின்றேன்.

இவ்வாறு தொடர்ந்த எனது எழுத்துப் பயணம் நாளடைவில் பல களங்கள், வெற்றிகள், விருதுகள், பரிசில்கள் எனப்பலவற்றைப் பரிசளித்தது. தினகரன், மித்திரன், தமிழ்மிரர், தமிழருவி, காலைக்கதிர், தீம்புனல் போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், தொகுப்பு நூலகளிலும் எனது கவிதைகள் இன்றும் வெளிவந்த வண்ணமுள்ளன.

பல்வேறுபட்ட உணர்வுகள், கலாச்சாரம், பண் பாடுகள், மறந்தவை, மறந்து கொண்டிருப்பவை, நாட்டு நடப்புகள், விழிப்புணர்வுகள் எனப் பல் வேறுபட்ட கவிதைகளின் சங்கமாய் “தாய்மாமன்” நூல் வெளிவருகின்றது.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 79   #தில்லைமலர்   வகை - மாணிக்க விழா சிறப்பு மலர் ஆசிரியர் -  எஸ்.எம்.அரூஸ்வெளியீடு...
20/04/2026

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 79


#தில்லைமலர்
வகை - மாணிக்க விழா சிறப்பு மலர்
ஆசிரியர் - எஸ்.எம்.அரூஸ்
வெளியீடு - தில்லையூர் அ.மு.க வித்தியாலயம்
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 98
விலை - 700.00
தொடர்பிலக்கம் - 0763656914

#நூல்_பற்றி
இதழாசிரியரின் உரையிலிருந்து...

தில்லை மலர் எனும் இந்த ஆவணப் பொக்கிஷம், தில்லையடியினதும் தில்லையூர் பாடசா லையினதும் எமது கற்பிட்டி நகரெனும் பெரும் சாகரத்தில் இருந்தும் ஒரு சிறு மணியளவு நீரெடுத்து கோர்க்கப்பட்டிருக்கும் சிறு ஆரம்.

இந்நூலை வெளியிடுவதற்கு பல காரணங்கள் உள்ளன:-

01.கற்பிட்டியில் தில்லையடி என்னும் கிராமத்தில் கல்வியிலும் கலையிலும் சிறந்து விளங்கும் ஓர் அழகிய பாடசாலை இருக்கின்றது. ஆனால், கற்பிட்டியில் வாழ்கின்ற அதிகமான மனிதர்களின் சிந்தனையில் நிறைந்திருக்கும் கல்விக்கான ஒற்றைப் பாடசாலை என்ற குறுகிய சிந்தனைக்கு அப்பால், இல்லை கற்பிட்டியின் கல்வி மாற்றத்திற்கும் கல்வி மறுமலர்ச்சிக்கும் இன்னும் பல பாடசாலைகள் இருக்கின்றன, என்ற விரிந்த சிந்தனையை உருவாக்குதல்.

02.எமது தில்லையூர் பாடசாலை உருவாக்கத்திற்கும் இதன் நாற்பத்து மூன்று வருட கால பயணத்திற்கும் இறை பொருத்தம் கருதி செயற்பட்ட அனைத்து நல்ல மனிதர்களின் சிறு செயல்களைக் கூட நினைவு கூர்ந்து, அவர்களை எதிர்கால சந்ததி யினர் அறிந்து கொள்வதற்கு வழி அமைப்பதும் இன்றைய இளைய தலைமுறையி னரை சமூக சிந்தனை மிக்கவர்களாகவும் சமூக அர்ப்பணிப்பு மிக்கவரகளாகவும் உருவாக்குதல்.

03.எமது கற்பிட்டி பிரதேச கல்வி மற்றும் கலை, கலாச்சார வளர்ச்சிக்காக அர்பணிப் புடன் செயற்பட்டு எமது மண்ணின் வரலாற்று புத்தகத்தின் எந்தப் பக்கங்களும் வெறுமையானவையல்ல, என உலகறிய செய்த அறிஞர்கள், கலைஞர்கள், சான் றோர்கள், உத்தமர்களை நினைவு கூறுதல்.

04.எமது தில்லையூர் பாடசாலை எதிர் காலத்தில் கற்பிட்டியின் கல்வி முன்னேற்றத் திற்காக அனைத்து வளங்களையும் கொண்ட பரிபூரண பாடசாலையாக மாற்றுதலுக் கான முயற்சிகளை உறுதி செய்தல், எனும் நான்கு உயரிய நோக்கங்களை நிறை வேற்ற எடுத்த மிக சிறிய முயற்சி இந்நூலாக்கமாகும்.

இந்நூலைத் தொடர்ந்து எம் மண்சார்ந்த இன்னும் பல வரலாற்று நூல்கள் வெளிவர வேண் டும் என்பது எமது எதிர்பார்ப்பு...

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 78   #கடல்_கொண்ட_காவியம்  வகை - கவிதைத் தொகுப்பு  ஆசிரியர் - பேராசிரியர் பால சுகுமார...
20/04/2026

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 78


#கடல்_கொண்ட_காவியம்
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - பேராசிரியர் பால சுகுமார்
வெளியீடு - அனாமிகா பதிப்பகம்
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 60
விலை - 300.00
தொடர்பிலக்கம் - 447380536668

#நூல்_பற்றி
முன்னுரையில் ஒரு குறிப்பு...

அனாமிகா பற்றிய இரண்டாவது கவிதை நூல் இது. ஒரு தேவதையின் சிறகசைப்பு இரண்டு பதிப்புகளைக் கண்டது. ஏஞ்சல் அனாமிகா ஒரு காவியமாய் என்னுள் நிலைத்திருக்கிறாள். இருபத்தியொரு ஆண்டுகள் கடந்து போயிற்று ஆனாலும் வற்றாத பெருங் கடலாய் அவள் நினைவு என்னுள் கலந்து கிடக்கிறது.

தோற்ற மயக்கம் இல்லாத பெரும் நினைவு அவள். இருபத்தி யொரு ஆண்டுகளில் இந்த உலகில் என்னவெல்லாமோ நடந்து போயிற்று. 2004 அவள் இறக்கும்போது என் கையில் முதன் முதல் வந்த நோக்கியா அலைபேசி என் கையில் இருந் தது அவள் அதை கையில் வைத்து அழகு பார்த்த அந்த நால் என் கண்ணில் கிடக்கிறது இன்று உலகம் அலைபேசிக்குள் ளேயே உலகத்தை அடக்கி வைத்திருக்கிறது.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மாற்றங்களை நமக்கானதாக சமூகத்துக்கானதாக நாம் மாற்ற வேண்டும். அரசியல் சமூக மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இலங்கையிலும் ஏற்பட்ட புதிய மாற்றம் நம்பிக்கை தருவதாக நம்மை முன் நகர்த்துகிறது.

என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் மகள் நினைவில் எந்த மாற்றமும் இல்லாமலேயே என் காலம் நகர்ந்து கொண்டிருக் கிறது அவள் இருந்திருந்தால் இப்போது 35 வயது எனக்கு 70 வயது. அவள் இருக்கிற காலத்தில் சொல்வாள் எனக்கு 25 வயதாகும் போது உனக்கு 50 ஆகும் என்று.இன்று அவள் இல்லை ஆனாலும் அவள் நினைவுகள் நெஞ்சம் நிறைய ஊறிக் கிடக்கின்றன...

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

Mutur JMI நிறுவன ஏற்பாட்டில் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான கல்விசார் பொது அறிவு வழிகாட்டல் இலவச...
19/04/2026

Mutur JMI நிறுவன ஏற்பாட்டில் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான கல்விசார் பொது அறிவு வழிகாட்டல் இலவசக் கருத்தரங்கு நேற்று மூதூர் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதோடு முன்னாள் அதிபர் ஜே.எம்.மாஹிர் sir அவர்கள் இந்நிகழ்வின் வளவாளராக கலந்து சிறப்பித்தார்.

இக்கருத்தரங்கில் 80 க்கு மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதுபோன்றதொரு இலவச நுண்ணறிவு கருத்தரங்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 77   #நிலவோடு_பேசுவோம்  வகை - கவிதைத் தொகுப்பு  ஆசிரியர் - முஸ்தபா சஹாப்தீன் வெளியீட...
16/04/2026

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 77


#நிலவோடு_பேசுவோம்
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - முஸ்தபா சஹாப்தீன்
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 118
விலை - 700.00
தொடர்பிலக்கம் - 0756873858

#நூல்_பற்றி
கந்தளாய் முஸ்தபா சகாப்தீன் இவர் திருகோணமலை மாவட்டம் பேராற்றுவெளிக் கிராமத்தில் பிறந்தவர். இவரது ஆரம்பக் கல்வியை கந்தளாய் பேராற்றுவெளி மகா வித்தி யாலயத்திலும் உயர் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றவர்.

இவரது பாடசாலைக் காலங்களில் எழுத்து, நாடகத் துறை களிலும் ஈடுபாடாக இருந்த போதும் 1974 ஆம் ஆண்டிலி ருந்து தினபதி, சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார். 1978 ஆம் ஆண்டு அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் கவியரங் கின் மூலம் கவியுலகில் பிரவேசித்தார்.

கவிதைத்துறையில் மரபுக்கவி, புதுக்கவி. கிராமியக் கவி நயங்கள் எனவும் சிறுகதைகளையும் எழுதி வருகின்றார். தனது ஓய்வு நிலையிலும் எழுத்துப் பணிக்கு ஓய்வு கொடுக் காமல் தொடர்ச்சியாக நாட்டார் பாடல்களை தொகுத்து நூல் வெளியிட ஒழுங்கு செய்து வருகின்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழா நூலில் இவரது "அருகி வரும் கிராமியப் பண்பாடுகள்" பற்றிய ஆக்கம் இடம் பெற்றுள்ளது. பத்திரிகைகளுக்கு எழுதிய ஆக்கங்களைத் தெரிந்தெடுத்து "நிலவோடு பேசுவோம்” என்ற கவிதை நூலை 2019 இல் வெளியிட இருந்தார்.

கொவிட்-19 பாதிப்பினால் நிகழ்வை நடாத்த முடியாமல் போனது. இருந்தும் இவரது கிராமியக் கலைப் பணி சம்பந் தமான பல ஆய்வுக் கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் என்பன வெளிவர கந்தளாய்க் கலை இலக்கிய மன்றம் முன்னின்று உழைத்து வருகின்றது.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

Address

Mutur Jmi
Mutur

Alerts

Be the first to know and let us send you an email when Mutur JMI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mutur JMI:

Shortcuts

Share