Mutur JMI

Mutur JMI 𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝 Since in 2016. (NGO, Publication, Tesla Institute, Muththithal, OML)

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 65   #வினைத்திறன்_மிக்க_ஆசிரியர் வகை - கல்விசார் தொகுப்பு ஆசிரியர் - எம்.எல்.எம்.முப...
05/11/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 65


#வினைத்திறன்_மிக்க_ஆசிரியர்
வகை - கல்விசார் தொகுப்பு
ஆசிரியர் - எம்.எல்.எம்.முபாறக்
வெளியீடு - லத்தீப் பௌண்டேஷன்
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.ஒக்டோபர்
பக்கங்கள் - 130
விலை - 800.00
தொடர்பிலக்கம் - 077 054 8384

#நூல்_பற்றி
அதிபர் M.L.M. முபாறக் அவர்களால் ஆக்கப்பட்டுள்ள "வினைத்திறன் மிக்க ஆசிரியர்” எனும் நூல் கல்விப்புலத்தின் வினைத்திறன் மிக்க புதிய வரவு எனலாம். 21ஆம் நூற்றாண்டின் கல்விப்புலத்தில் யதார்த்தத்தைக் கோடிட்டு காட்டும் முன்மாதிரி மிக்க ஒரு முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது. கல்வியின் நவீன செல்நெறியின் தொடர்புடைய பதினொரு உப தலைப்புக்களில் இந்நூல் ஆய்வு செய்கின்றன. ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் குணாம்சங்கள், வகுப்பறை மாதிரிகள், கற்றல் கற்பித்தல் முன்னெடுப்பு மற்றும் சமகாலத்தில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் என்பன தொடர்பில் இவை அமைந்துள்ளது.

21 ஆம் நூற்றாண்டின் ஆசிரியர் பெறுமானத்தை வினைத்திறன் மிக்கதாக ஆற்றுலகம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு திறவுகோலாகும்.

ஆசிரியர் பணி, வகுப்பறை முகாமைத்துவம், நல்லாசிரியரின் பண்புகள், புரட்டப்பட்ட வகுப்பறை, கற்றல் - கற்பித்தல், மனப்பாங்கு, வாசிப்பு, சுய முகாமைத்துவம், நிர்வாக காலனித்துவம், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும், ஆசிரியர் இடமாற்றம் போன்ற முக்கிய தலைப்புகள் இந்நூலில் பேசப்படுகின்றன.

#நூலாசிரியர்_பற்றி
எம்.எல்.முகம்மது முபாறக் அதிபர் 1990 ஆண்டு விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் மூதூர் மாணவர்களின் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றினார். 2002 ஆண்டில் மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நினைவாக அஷ்ரப் வித்தியாலையத்தை நிறுவிய ஸ்தாபகர் களில் ஒருவராக தொழிற்பட்டு அப்பாடசாலையின் முதல் அதிபராக சுமார் 13 வருடங்கள் சேவையாற்றினார்.

இதேவேளை அதிபராக தி/மூ/அஷரப் வித்தியால யம். தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி ஆகியவற் றிலும் பணியாற்றி தற்போது தி/கிண்/குறிஞ்சாக் கேணி அறபா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகிறார்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமானிப் பட்டமும் (BA). தேசியகல்வி நிறுவகத்தில் B.Ed. PGDEM (Merit) பட்டத்தினையும், யாழ் பல்கலைக் கழகத்தில் M.Ed பட்டத்தினையும் நிறைவு செய்ததுடன் தேசிய கல்வி நிறுவனத்தில் M.Sc (Edu Mgt) பட்டத்தினையும் பூர்த்தி செய்தார். கிழக்கு மாகாணத்தில் M.Sc பட்டத்தினை பெற்றுக் கொண்ட முதல் முஸ்லிம் அதிபர் என்ற பெருமை யையும் தனதாக்கிக் கொண்டார்.

இவர் 2011 ஆண்டில் சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருதினையும், 2012 ஆண்டில் மூதூர் வலய பாடசாலைகளில் சிறந்த முகாமைத்துவத்திற்கான விருதினையும் பெற்றுக் கொண்டதுடன், மூதூர் வலயப் பாடசாலை அதிபர் சங்கத்தின் தலைவராக வும் சிறப்பாக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 64   #தாய்மையின்_உலகம்   வகை - கவிதைத் தொகுப்புஆசிரியர் - எச்.ஐ.சித்தி ருவைசா வெளியீ...
31/10/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 64


#தாய்மையின்_உலகம்
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - எச்.ஐ.சித்தி ருவைசா
வெளியீடு - லக்ஸ்டோ மீடியா நெட்வொர்க்
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.ஒக்டோபர்
பக்கங்கள் - 103
விலை - 600.00
தொடர்பிலக்கம் - +94 77 118 0287

#நூல்_பற்றி
தாய்மையின் உலகம் கவிதைத் தொகுப்பானது பெண்ணியத்தின் விழிப்பாக வெளிவந்துள்ள தொகுப்பாக எம்மால் வகையீடு செய்ய முடியும். 42 கவிதைகளை உள்ளடக்கிய இந்நூலானது நூலாசிரியர் எச்.ஐ.சித்தி ருவைசா அவர்களின் கடந்த 20 ஆண்டுகளின் இலக்கியப் பயணத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

தாய்மையின் உலகம் என்ற இரட்டை சொல்லின் பின்னால் உள்ள பெண் ஒருவர் இந்த பிரபஞ்சத்தில் எடுத்துக்கொள்ளும் வகிபாத்திரம் குறித்து இந்நூல் மிகத்தெளிவாக விபரிக்கின்றது. எளிமையான சொல்லாடல், நயமிக்க வரிகள் மற்றும் பொருள் செறிவான பத்திகள் என்று இந்நூலுக்கு பல வகையிலும் வலுசேர்க்கின்றது.

#நூலாசிரியர்_பற்றி
தாய்மையின் உலகம் நூலானது சித்தி ருவைசா அவர்களின் கன்னி நூலாக வெளிவந்துள்ளது. உலக இஸ்லாமிய மாநாட்டின் கலை, கலாசார நிகழ்வின் பல்வேறு வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக இந்நூலும் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்றுக் கொண்டிருக்கும் போது, 'அந்நூர்' என்ற பெயரில் நூலாசிரியராக இருந்து கையெழுத்துப் பிரதியில் சஞ்சிகையொன்றையும் வெளியீடு செய்துள்ளார். பதிவாளர் நிணைக்களத்தில் 6 வருடங்கள் பணியாற்றிய இவர் திருமணத்திற்குப் பின் சேவையிலிருந்து விலகி கடந்த 10 வருடங்களாக பரீரா முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரியில் பாடசாலைப் பாடங்களுக்கான ஆசிரியையாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லஷ்டோ மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் முக்கிய உறுப்பினராக இருப்பதும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள இந்நூல் சிறப்பம்சமாகும்.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 63   #மனிதனுக்கு_விருந்து  வகை - கவிதைத் தொகுப்புஆசிரியர் - ஏ.எல்.முஹைமினா மூஸா வெளி...
18/09/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 63


#மனிதனுக்கு_விருந்து
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - ஏ.எல்.முஹைமினா மூஸா
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.செப்டம்பர்
பக்கங்கள் - 96
விலை - 600.00
தொடர்பிலக்கம் - 0702417409

#நூல்_பற்றி
மனிதனுக்கு விருந்து என்ற நூல் ஒரு புதுக்கவிதைத் தொகுதியாக உள்ளது. இந்நூலில் 70 க்கு மேற்பட்ட கவிதைகள் சமகால மானிட சூழலை அடிப்படையாக்கொண்டு வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவியும் ஏதோவொரு மானிட நடத்தை, பண்பியல், குணாதியம் மற்றும் சமூகவியல் குறித்து புடம்போட்டு காட்டுகின்றது.

இந்நூலின் எழுத்தோட்டம் கவிதாயினி முஹைமினா அவர்களின் கவிப்புலத்தின் முதிர்ச்சியை வெளிக்காட்டி நிற்கின்றது.

#நூலாசிரியர்_பற்றி
கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் முஹைமினா மூஸா இலக்கியம், ஊடகம், சமூக சேவை மற்றும் அரசியல் என்று பல தளங்களில் இயங்கும் பன்முக ஆளுமை.

இந்நூல் இவரது மூன்று வெளியீடாக வெளிவந்துள்ளதோடு இந்திய இலக்கியவாதிகளுடன் இலங்கைக்கான இலக்கிய பாலமாக செயற்பட்டு வருகின்றார். தோணி கலை இலக்கிய குழுமம் என்ற இலக்கிய கழகத்தின் மூலமாக பல்வேறு இலக்கிய செயற்பாடுகளையும், பிரசுரங்களையும் ஈழத்து இலக்கியப் புலத்தில் செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 62   #முத்தாரம் வகை - சிறப்பு மலர் தொப்பாசிரியர் - எம்.சி.எம்.ஷெரிப்பதிப்பு - மூதூர்...
11/09/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 62


#முத்தாரம்
வகை - சிறப்பு மலர்
தொப்பாசிரியர் - எம்.சி.எம்.ஷெரிப்
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.செப்டெம்பர்
பக்கங்கள் - 190
விலை - 800.00
தொடர்பிலக்கம் - (077) 529 4942

#நூல்_குறிப்பு
கே.எம்.எம்.இக்பால் ஆசிரியர் அவர்கள் ஈழத்து இலக்கிய புலத்தில் மிகவும் அறியப்பட்ட பேரிலக்கியவாதி என்பதற்கு அப்பால் ஒரு கல்வியலாளர். மூதூர் மண்ணை பிறப்பிடமா கவும், கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள இவர் புவியல், குடியியல், வரலாறு என்று கல்விசார் வெளியீடுகள் என்று 51 நூல்களை எழுதி வெளியீடு செய்துள்ளார்.

குறிப்பாக தி/மூதூர் மத்திய கல்லூரியின் க.பொ.த உயர்தர பிரிவில் ஆரம்ப காலத்தில் தனது கற்பித்தலால் வரலாற்று அத்தியாயங்களை பதித்ததோடு அதனூடாக மூதூர் மண்ணில் இருந்து பல்வேறு துறைசார் ஆளுமைகளை (Intellectual Personality விளைவித்த முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார். அதற்கான ஆதாரமாக கே.எம்.எம்.இக்பால் அவர்களின் கல்வி, கலை, இலக்கியத்தின் அரை நூற்றாண்டு பயணத்தை நினைவுபடுத்தி அவரை கௌரவிக்கும் வகையில் அவரது மாணவர்களின் மனப்பதிவுகளை நிறைந்ததாக வெளியீடு செய்யப்படும் "முத்தாரம்" என்ற சிறப்பு மலர் சிறந்த சான்றாகும்.

மாணவர்கள் சேர்ந்து தனக்கு கற்றுத்தந்த ஆசானுக்கு சிறப்பு மலர் ஒன்றை வெளியீடு செய்வது என்பது நான் அறிந்த வகையில் இதுவே முதற்தடவையாகும். அந்தவகையில் எமது நிறுவனத்தினால் 2023 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நம்மட படைப்புகள் என்ற கண்காட்சியில் ஆசிரியர் கே.எம்.எம்.இக்பால் அவர்களின் 71 நூல்களையும் பொது மக்களுக்காக காட்சியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

இலங்கை எழுத்தாளர்களின் முக்கிய கவனத்திற்கு...மூதூர் ஜே.எம்.ஐ மற்றும் மூதூர் ஒன்லைன் வாசிகசாலை குழுமத்தின் மற்றுமொரு திட்...
04/08/2025

இலங்கை எழுத்தாளர்களின் முக்கிய கவனத்திற்கு...

மூதூர் ஜே.எம்.ஐ மற்றும் மூதூர் ஒன்லைன் வாசிகசாலை குழுமத்தின் மற்றுமொரு திட்டம்.

மின்னூல் கொள்வனவு திட்டத்தில் நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள்.

_More Details…_
Mutur JMI | Online Mutur Library
website : www.muturjmi.com
mail : [email protected]
WhatsApp : 0717891887
Call : 0771020030 | 0262238593

Mutur JMI

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 61    #தீயினுள்_நீர்த்துளி வகை - கவிதைத் தொகுப்புஆசிரியர் - அஹமட் இம்தியாஸ்வெளியீடு ...
16/06/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 61


#தீயினுள்_நீர்த்துளி
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - அஹமட் இம்தியாஸ்
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.ஜூன்
பக்கங்கள் - 112
விலை - 600.00
தொடர்பிலக்கம் - 0777320606

#நூல்_குறிப்பு
கவிஞர் அகமட் இம்தியாஸ் அவர்களின் கவிதைகள் பெரும் பாலும் சமூகக் கவிதைகளாகவே இந்த நூலில் அமைய பெற்றுள்ளன.

அவருடைய எழுத்துக்கள் எப்போதும் சமூகத்தை நோக்கிய கேள்வியையும், சந்தேகங்களையும் மற்றும் எண்ணங்களையும் தொடுப்பதாகவே அமைந்துள்ளன. குறிப்பாக இம்தியாஸின் எழுத்துக்களுக்கு இந்த ஓர் உயிரோட்டமே அவருடைய எழுத்தின் தனித்துவத்தையும் எழுத்தின் மீதான நம்பிக்கை, மரியாதை யையும் எமக்கு அளிக்கக் கூடியதாக இருக்கின்றது.

தான் காணும் மற்றும் தான் சார்ந்துள்ள சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வொரு அடிப்படை விடயங்களையும் இவருடைய நூலின் பிரதான கதாபாத்திரங்களாகவும், கதைக்களமாகவும் வடிவமைத் துள்ளமை மிக இலகுவாக வாசகனை ஆர்ப்பரித்து ஒரு ஜெனரஞ்சகமான சூழலில் அவனை கொண்டு சென்றுவிடுகின்றது. இவ்வாறான எழுத்துக்களுக்கு இவருடைய எழுத்தோட்டம் மிக முக்கியமான பங்கை அளிப்பதாக நான் கருதுகின்றேன்.

காரணம் ஒரே சமயத்தில் சமாந்தரமாக வெளியிடப்படுகின்ற இவரது சிறுகதை மற்றும் கவிதை தொகுதி நூல்கள் இரண்டி லும் ஒரே வகையான எழுத்தோட்ட பண்பை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

"சாம்பலிலும் பன்னீர்ப்பூ” என்ற கவிதை தொகுப்பானது சமூகச் சூழலில் நிலவும் பல்வேறு இடர் நிலைகளை கொண்டு எமக்கு பாடம் கற்பிக்கக் கூடியதாக அமைகின்றது. அந்த வகையில் சாம்பலிலும் பன்னீர்ப்பூ கவிதை தொகுப்பு மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன் நிறுவனத்தின் வெளியிட்டில் வெளிவருவதை பெருமிதமாக கருதுகின்றோம்.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 60    #தீயினுள்_நீர்த்துளி வகை - சிறுகதைத் தொகுப்புஆசிரியர் - அஹமட் இம்தியாஸ்வெளியீட...
16/06/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 60


#தீயினுள்_நீர்த்துளி
வகை - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் - அஹமட் இம்தியாஸ்
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.ஜூன்
பக்கங்கள் - 120
விலை - 600.00
தொடர்பிலக்கம் - 0777320606

#நூல்_குறிப்பு
எந்தவொரு மனிதனுக்கும் அவனது வாழ்வு பல திருப்புமுனைகளையும் சுவாரசியங்களையும் நாளுக்கு நாள் வழங்கிகொண்டே இருக்கும். இந்த வாழ்வின் இரகசியம் இவ்வாறான காலவோட்டத்தில்தான் தங்கியுள்ளது.

இவற்றுக்கிடையே அவ்வப்போது மனிதனுக்கு ஏற்படும் தளர்வான மனோநிலை அவனை ஒருவகை ஆட்பரிப்பு நிலைக்கு கொண்டு சென்றுவிடுகின்றது. இந்நிலை பலருக்கு பின்னடைவான சூழலை உண்டாக்கினாலும் ஒரு சிலருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றது.

அவ்வாறானதொரு சாமானிய மனிதன் அஹமட் இம்தியாஸ் (ஹொரவபொத்தானை அ.இ) எழுத்துருவே இன்று உங்கள் கையில் தவழும் "தீயினுள் நீர்த்துளி” சிறுகதைத் தொகுப்பு நூல்.

17 சிறுகதைகளை ஒரு தொகுப்பாக கொண்ட இன்னூல் சமூக விப்பத்தினை அவலநிலை தொடர்பாக புடம்போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. அநேக சிறுகதையின் கதைகளங்கள் தான் வாழ்த்த சூழலில் தான் கண்ட அனுபவம் மற்றும் தன் வாழ்வில் சந்தித்த சூழ்நிலைகளை அடிப்படையாக்கொண்டு நகர்வதாக காணலாம்.

ஹொரவபொத்தானை அஹமட் இம்தியாஸ் அவர்களின் எழுத்துருக்கள் மிக எளிமையான மற்றும் பன்மைத்துவ தத்துவார்த்த தன்மைகொண்டது. இந்த பண்பை இவரது முதலாவது கன்னி வெளியீடாக வெளிவந்த "சாம்பலிலும் பன்னீர்பூ" கவிதைத்தொகுப்பு நூலிலும், அதேபோன்று இத சிறுகதைத்தொகுப்பு நூலிலும் காணக்கூடியதாக உள்ளது.

தேசிய ரீதியாக வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் தனது ஆக்கங்களை பிரசுரம் செய்துவந்த இவரது ஆக்கங்கள் இன்று நூலுரு பெற்றுள்ளமை உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கின்றது.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சி நூல் விநியோகம் மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுட...
14/06/2025

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான வழிகாட்டல் பயிற்சி நூல் விநியோகம்

மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நூல் விநியோகம் நேற்று வெள்ளிக்கிழமை (14.06.2025) காலை 9.00 மணி அளவில் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.சிறாஜ் அவர்களின் தலைமையில் விசேட தேவை பிரிவுக்கான பொறுப்பதிகாரி ஏ.ஜே.ஜஹார் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் Fathima Foundation நிறுவனத்தின் சார்பாக பிரபல சமூக சேவையாளர் அப்துல் அசீஸ் (நளீமி), அஷ்ஷெய்க் மஸாஹிர் (நளீமி) மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மட் ஷாபி, ஆகியோரோடு இந்நூலை பதிப்பு செய்த மூதூர் ஜே.எம்.ஐ நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மூதூர் வலயக்கல்வி அலுவலக பிரிவை சேர்ந்த 10 விசேட தேவை பிரிவு பொறுப்பான ஆசிரியர்கள் கலந்து அவர்களுக்கான நூல்களை பெற்றுக் கொண்டனர்.

குறிப்பு : "வாசிப்பு ஊற்று" என்ற இந்நூல் விஞ்ஞான ஆசிரியர் கிண்ணியா பாயிஸா அலி அவர்களினால் தொக்கப்பட்டு பாத்திமா பௌண்டேஷன் வெளியீடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 59  # விழிதேடிய_கனவுகள்வகை - கவிதைத் தொகுப்புதொகுப்பாசிரியர் -  கலாபூஷணம் ப.மதிபாலசி...
10/06/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 59


# விழிதேடிய_கனவுகள்
வகை - கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர் - கலாபூஷணம் ப.மதிபாலசிங்கம்
வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.மே
பக்கங்கள் - 102
விலை - 600.00
தொடர்பிலக்கம் - 0770269464

#நூல்_குறிப்பு
நவீன கவிதைகளை கொண்டு தொகுக்கப்பட்டுள்ள "விழிதேடிய கனவுகள்" என்ற கவிதை தொகுப்பு இந்திய, கனடா மற்றும் இலங்கையில் பதிப்பு செய்யப்படும் ஒரு முக்கிய நூலாக அடையாளம் காணமுடியும்.

அந்தவகையில் இலக்கிய துறைக்கான தேசிய சாகித்திய விருதான கலாபூஷண விருதை அண்மையில் பெற்றுக்கொண்ட நூலாசிரியர் மதிபாலசிங்கள் அவர்கள் ஈழத்தில் மூதூர் ஈச்சிலம்பற்றினைப் பிறப்பிடமாகவும், மல்லிகைத்தீவினை வாழ்விடமாகவும் கொண்ட நாடறிந்த கவிஞர்.

இவரது "விழி தேடிய கனவுகள்" என்னும் கவிதைத் தொகுப்பானது இரண்டாவது வெளியீடாக வெளிவந்துள்ளது.

அரச துறையில் ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக பதவி வகித்துள்ளார். தற்போது சேவையில் ஓய்வு பெற்றுள்ள போதும் இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றமை பாராட்டுதற்குரியதாகும். ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில் முப்பத்து நான்கு வருடங்கள் ஆற்றிய கல்விப்பணி ஊடாக சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். கவிஞரது இந்நூலானது உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை. நல்வாழ்த்துகளோடு அமைகின்றேன்.

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*

மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

நூல் பதிப்பும் வெளியீடும் பதிப்பு - 58  #வனம்நூறு கவிதைகளும் கவிஞர்களும்  வகை - கவிதைத் தொகுப்பு தொகுப்பாசிரியர் - முஷ்ப...
23/05/2025

நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 58


#வனம்
நூறு கவிதைகளும் கவிஞர்களும்
வகை - கவிதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர் - முஷ்பிகா முன்ஷீர்
வெளியீடு - மூதூர் ஒன்லைன் வாசிகசாலை
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ வெளியீட்டகம்
பக்கங்கள் - 112
விலை - 600.oo (தபால் செலவு இலவசம்)

#நூல்_குறிப்பு
மூதூர் ஒன்லைன் வாசிகசாலையின் இணைந்த செயற்றிட்டமாக வாசகர்களை ஊக்குவிக்கும் மற்றும் இளம் எழுத்தாளர்களுக்கு களம் அளித்துக் கொடுக்கும் நூறு கவிதைகளும் கவிஞர்களும் குழுமத்தின் நான்காவது வெளியீடாக "வனம்-கவிதைத் தொகுப்பு" நூல் வெளிவந்துள்ளது.

100 புதுக்கவிதைகளை கொண்டு தொகுப்பட்ட இந்நூல் குறித்த குழுவின் நான்காவது வெளியீடாக வெளிவந்துள்ளது.

நூறு கவிதைகளும் கவிஞர்களும் Whatsapp குழுமம் இலங்கையை தளமாக கொண்டு இயங்கும் ஒரு இலக்கிய குழுமம் ஆகும். கடந்த 8 மாதங்களில் 4வது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீங்களும் குழுவில் இணைந்துகொள்ள கீழுள்ள link ஐ பயன்படுத்துங்கள்.
https://chat.whatsapp.com/IzJP9rv1MGrCVxaASkzPqz

🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com

Address

Mutur Jmi
Mutur

Alerts

Be the first to know and let us send you an email when Mutur JMI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mutur JMI:

Share