Bright future for Matale

Bright future for Matale Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bright future for Matale, Non-Governmental Organization (NGO), Matale.

மாத்தலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சகோதரர் பாய்ஸ் அவர்கள் இன்று மார்க்கோன திகனச்சென டேமேட்...
14/08/2025

மாத்தலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சகோதரர் பாய்ஸ் அவர்கள் இன்று மார்க்கோன திகனச்சென டேமேட்டாகொலை உக்குவலை நகரம் ஆகிய பிரதேசங்களுக்கு புதிய மின்விளக்கு மற்றும் பழுதடைந்த மின்விளக்குகள் மாற்றப்பட்டன உக்குவலை பிரதேச சபை தலைவரின் உதவியுடன் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தேவைகளை யும் கண்டறிந்து மக்கள் பணியில் உங்கள் தோழன் பாய்ஸ்

"முழு நாடும் போலவேமுறியாகடவள வட்டாரமும் திசைகாட்டியுடன்"              இன்ஷா அல்லாஹ்நாளைய தினம் நாம் அடையப் போகின்ற வெற்ற...
04/05/2025

"முழு நாடும் போலவே
முறியாகடவள வட்டாரமும் திசைகாட்டியுடன்"

இன்ஷா அல்லாஹ்
நாளைய தினம் நாம் அடையப் போகின்ற வெற்றி, நமது வட்டார மக்களின் வாழ்வினை வளப்படுத்தட்டும்.
"அனைவருக்கும் முற்கூட்டிய வாழ்த்துக்கள் & நன்றிகள்"


உங்கள் தோழர்
Abdul Faiz

திசைகாட்டி அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றிய வாக்குறுதிகள்!'முறைமை மாற்றத்திற்கான அடித்தளமிடும் செயற்பாடுகள்''
03/05/2025

திசைகாட்டி அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றிய வாக்குறுதிகள்!

'முறைமை மாற்றத்திற்கான அடித்தளமிடும் செயற்பாடுகள்''

Abdul Faiz
02/05/2025

Abdul Faiz

திசைகாட்டி அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றிய வாக்குறுதிகள்!'கொள்கைப் பிரகடன வாக்குறுதிகள்'
02/05/2025

திசைகாட்டி அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றிய வாக்குறுதிகள்!

'கொள்கைப் பிரகடன வாக்குறுதிகள்'

நிழலின் உண்மை முகம்!சமகி? - ஐக்கியம்?"ஐக்கியம்" என்பது ஏதோவொரு உன்னதமான நோக்கத்திற்காக, மனிதர்கள் ஒரு குழுவாக, தங்களுக்க...
30/04/2025

நிழலின் உண்மை முகம்!

சமகி? - ஐக்கியம்?

"ஐக்கியம்" என்பது ஏதோவொரு உன்னதமான நோக்கத்திற்காக, மனிதர்கள் ஒரு குழுவாக, தங்களுக்குள் இருக்கும் சில வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக பணியாற்றுவது. ஆனால் நாம் அறிந்த, இலங்கையின் தேசிய அரசியலில் ஈடுபட்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வென்று நாட்டை சீர்படுத்தத் தயாராகும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒற்றுமை என்பதே இல்லை என்றுதான் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.

கடந்த நாட்களில் ஒன்றாக இருந்து இரண்டாகப் பிரிந்த ஐ.தே.கவும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் ஒன்றாக இணைந்து பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை பிறந்த இடத்திலேயே இறந்த குழந்தையாகிவிட்டது. காரணம் மிகத்தெளிவானது. இந்த இரண்டு குழுக்களுக்கும் வேண்டியது தமது குழுவின் நபரை தலைவராக்குவதுதான். எல்லோருக்கும் தாம் தலைவராகி தமது கைகளில் அதிகாரத்தைப் பெற வேண்டும். எஞ்சிய பிரிவுகளை சேர்த்து ஒட்டி உருவாக்க முயன்ற ஐக்கிய மக்கள் சக்தி இப்போது முற்றிலும் சிதறிப்போயுள்ளது.

இதில் ஒரு குழுவைச் சேர்ந்த ராஜித்த சேனாரத்ன சில நாட்களுக்கு முன்பு இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார் என்று கூறினார். ராஜித்த அப்படிச் சொல்ல அடிப்படை ஆன அரசியல் என்னவென்று நாம் அறியோம்.

அதற்கு ஒரு நாள் கழித்து, ராஜித்த கூறிய விசித்திரக் கதைக்கு அப்பால் சென்று இன்னுமொரு விசித்திரக் கதையை ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார நிபுணரான கபீர் ஹாசிம் கூறுகிறார். டிசம்பர் மாதத்தில் சஜித் பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாவார் என்கிறார். அதை விவரிக்கும் கபீர், கடந்த முறை கோட்டாபய தோற்கும் ரணில் இடையில் புகுந்து பறித்துக்கொண்டார் இம்முறையும் இரண்டு காலணிகளையும் பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறார் ஆனால் சஜித் விடமாட்டார் என்று கூறுகிறார். ராஜித்த கூறுவதன்படி ரணில் ஆகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதியாகி மீண்டும் டிசம்பர் மாதத்தில் கபீர் கூறுவதன்படி சஜித் ஜனாதிபதியாகும் முறை எமக்கு தெளிவாகாவிட்டாலும், நடக்க வாய்ப்பில்லாத ஒன்று இருந்தும் தவறுதலாக கற்பனையில் சஜித் ஜனாதிபதியானால் வரப்போகும் அழிவு எப்படி இருக்கும்.

அப்படி நடந்தால், சஜித்துக்கு அமைச்சரவையை நியமிக்க யாரும் இல்லாமல் போவார்கள். ஏனெனில் இப்போது சஜித்தின் கட்சிக்குள்ளேயே பெரிய ஒற்றுமையின்மை உருவாகி இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ரோஹினி கவிரத்னவின் குரல் பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. அதில் உரையாடும் நபரிடம் தனக்காக வேலை செய்ததால் சில நபர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு கிடைக்கவில்லை என்று ரோஹினி கவிரத்ன கூறுகிறார். அதனால் ரோஹினியின் அந்தக் குழு யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது என்று குரல் பதிவு கூறுகிறது. இப்போது நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறித்த நபர் ரோஹினியிடம் கேட்கும்போது அவர் பதிலின்றி தவிக்கிறார். அந்தக் குரல் பதிவின்படி ரோஹினி யானை மற்றும் தொலைபேசி இரண்டில் எதற்காக நிற்கிறார் என்று அவருக்கே புரியவில்லை.

நேற்று சம்மாந்துறையில் நடந்த கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் நேரடியாக தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறார். அதோடு அவர் கூறுவது, இனிமேலும் தொலைபேசியுடன் அரசியலில் ஈடுபடுவதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் தனக்கு அமைச்சரவைக்கு நியமிக்க திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் சஜித் கூறினார். அப்படிச் சொன்னவர்களில் மூவர் கபீர் ஹாசிம், ரோஹினி கவிரத்ன மற்றும் ரவூப் ஹக்கீம்.

இவர்களில் கபீர் ஹாசிம் என்ன கதைக்கிறார் என்று அவருக்கே புரிகிறதா தெரியவில்லை. அப்படியானால், அப்படியான ஒருவரை அமைச்சரவைக்கு நியமிக்க முடியாது தானே.

சஜித்தின் அமைச்சரவையின் கல்வி அமைச்சர் தன்னால் தொலைபேசிக்கா அல்லது யானைக்கா எதற்கு வாக்களிக்க வேண்டும் என்று சரியாகச் சொல்ல முடியாது என்கிறார். நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள் என்கிறார்

சஜித்தின் நீதி மற்றும் மக்கள் நல்லிணக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறார். ஆகவே, தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொன்ன ஒருவரை அமைச்சரவை அமைச்சராக நியமிக்க சஜித் பிரேமதாச அவர்களுக்கு முடியாது என்றுதான் நமக்குத் தோன்றுகிறது.

இவர்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது சிறுவயதில் நமது பெரியவர்கள் சொன்ன ஒரு கூற்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அதுதான் ஒருவருக்கு துரதிர்ஷ்டவசமான அழிவு காலம் வரும்போது, அவர்களின் சாதாரண புத்திசாலித்தனம் கூட இல்லாமல் போகிறது என்பதுதான்.

இந்த ஐக்கிய மக்கள் சக்திக்கு நடந்துள்ளது அத்தகையதொரு துரதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

நிழலின் உண்மை முகம்!போலிப் பிரச்சாரம்! நம் நாட்டில் பல திவாலான அரசியல் கட்சிகளுக்கு இனவாதம் இல்லாமல் ஒரு இருப்பு இல்லை எ...
27/04/2025

நிழலின் உண்மை முகம்!

போலிப் பிரச்சாரம்!

நம் நாட்டில் பல திவாலான அரசியல் கட்சிகளுக்கு இனவாதம் இல்லாமல் ஒரு இருப்பு இல்லை என்பதை, இந்த நாட்களில் நடக்கும் அரசியல் பிரச்சாரங்களை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சில அரசியல்வாதிகளும் இந்த ஆபத்தான அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவது போல் தெரிகிறது. கடந்த பொதுத் தேர்தலில் எப்படியோ தப்பித்த ஒரு சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள், மக்களின் உணர்வுகளைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல், மீண்டும் மீண்டும் இனவாத அரசியலைச் செய்து, தாங்கள் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான திறனும் இல்லாதவர்கள் என்றும், மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப மாறத் தங்களுக்குத் திறனில்லை என்றும் காட்டுகிறார்கள். மிகவும் குறுகிய, முட்டாள்தனமான, இனவாத அரசியல் என்ற சேற்றில் மீண்டும் மீண்டும் மூழ்குவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் நிரூபிக்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்தது, இந்தத் தோல்வியடைந்த, திவாலான அரசியல்வாதிகளுக்கு விஷத்தைப் போன்ற மரண அடியாக இருந்தது போல் தெரிகிறது. இந்த அறிவற்ற அரசியல்வாதிகளும், அவர்களைச் சார்ந்த பிரச்சார பீரங்கிகளும், இனவாத பொறியிலிருந்து தப்பித்து முன்னேறிய முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அந்த இனவாத வலையில் தள்ளுவதற்கான கேவலமான மற்றும் இழிவான பிரச்சார தந்திரத்தைதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் எல்லா சம்பவங்களையும் திரித்து, அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கம் என்று நிறுவ எடுக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்து வருகின்றன.

இந்தக் குழு முதலில் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திற்கு உயர் அரசு பதவிகளை வழங்குவதில்லை என்று பிரச்சாரம் செய்தது. அவர்கள் இந்த பொய்யை சொல்லும் போதும் மேல்மாகாண ஆளுநராக புகழ்பெற்ற முஸ்லிம் தொழிலதிபர் ஹனிஃப் யூசுப் நியமிக்கப்பட்டிருந்த நிலையில்தான். அடுத்து அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பே, ஒரு முஸ்லிம் எம்பி கூட நியமிக்கப்படவில்லை என்று கூறினார்கள். மிகவும் முக்கியமான அமைச்சகமான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக .முனீர் முளப்பர் நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த பொய்யும் முடிவுக்கு வந்தது. பிரதி சபாநாயகர் போன்ற நாடாளுமன்றத்தின் இரண்டாவது உயர்ந்த பதவிக்கு வைத்தியர் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டார். அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்பே முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று கூறினார்கள். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக மொஹம்மட் நவாவி நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த பொய்யும் முடிவுக்கு வந்தது. அடுத்து மேல் நீதிமன்றத் தலைவரின் நியமனம், நீதிபதிகள் நியமிக்கும்போது முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று கூறினார்கள். இவ்வாறு பதவிகளுக்கு நியமிக்கும்போது சொன்ன எல்லாமே பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

அடுத்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஒரு ஸ்டிக்கரை ஒட்டியதற்காக மட்டுமே கைது செய்யப்பட்டதாக ஒரு பிரச்சாரத்தை தொடங்கினார்கள். தேசிய பாதுகாப்பு அதாவது நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில், அரசாங்கம் சம்பந்தப்பட்ட நபரின் இனத்தை மதத்தை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. ஒரு சம்பவம் நடந்தால், பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த மக்களும்தானே.

நாட்டில் சட்டவிரோதமாக வணிகங்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் இருப்பது வெளிப்படையான உண்மை. அவற்றை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது. அதிலும் இஸ்ரேலியர்கள் மீது அரசாங்கத்திற்கு ஒரு சிறப்பு பாசம் இருப்பதாக மேலும் அவர்கள் ஒரு பொய்யை சமூகமயமாக்க முயற்சிக்கிறார்கள். எதேனும் ஒரு சம்பவத்திற்காக கைது செய்யப்படும் எந்த முஸ்லிமும், இஸ்ரேலுக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டதாக இந்த குழுவினர் போலிப்பிரச்சாரம் செய்கின்றனர். மிக சமீபத்திய சம்பவம் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக 6 இளைஞர்கள் விசாரணை செய்யப்பட்டதாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரம்.

நேற்று அவர்கள் மற்றொரு பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டார்கள். அதுதான் ஹஜ் யாத்திரைக்கான ஒதுக்கீட்டு சிறப்பு கோட்டாவை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்ததாக மேற்கொண்ட பிரச்சாரம். ஒன்றை புரிந்துகொள்வோம் பல ஆண்டுகளின் பின் நடக்கும் ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு செல்வதற்கு கூட விஐபிக்களுக்கான சிறப்பு வரிசை இல்லை என்று அறிவித்த அரசாங்கத்தின் மீது, இத்தகைய கொடூரமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை என்னவென்று சொல்வது?

நாட்டின் சாதாரண மக்களான நமக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், இத்தகைய ஆபத்தான பொய்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காததுதான். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது நாட்டையும் மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தும் பொய்களை சமூகமயமாக்குவது அல்ல.

சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்ற அனைத்து மக்களின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப கனவு காணும் நாம், இந்த பொய் பிரச்சாரத்தை செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துவோம்!
Abdul Faiz

27/04/2025
தேசிய மக்கள் சக்தி தலைவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சகோதரரின் தலைமையில்…வெற்றிப் பொதுக்கூட்டம் - AkuranaKings Cour...
07/04/2025

தேசிய மக்கள் சக்தி தலைவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சகோதரரின் தலைமையில்…

வெற்றிப் பொதுக்கூட்டம் - Akurana
Kings Court மண்டபத்தில்.

எதிர்வரும், ஏப்ரல் 10ஆம் திகதி, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு

ජය නියතයි! ගම අපිටයි !
வெற்றி நமதே! ஊர் எமதே!

🧭 🔔


#தீர்வுதிசைகாட்டி #இம்முறைதிசைகாட்டிக்கு
#මේපාරමාලිමාව #විසඳුමමාලිමාව

மாருகொன மானம்பொட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் மானம்பொடயில் திறக்கப்பட்டுள்ளன
07/04/2025

மாருகொன மானம்பொட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் மானம்பொடயில் திறக்கப்பட்டுள்ளன

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்பிறையாக ஒளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இனிய ரமலா...
31/03/2025

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்பிறையாக ஒளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

புனித நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் என் உறவுகளே
30/03/2025

புனித நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் என் உறவுகளே

Address

Matale
21000

Alerts

Be the first to know and let us send you an email when Bright future for Matale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bright future for Matale:

Share