30/11/2025
3 வது நாளாக இன்று (2025.11.30 ஞாயிற்றுக்கிழமை) மல்வானை காந்தியவளவ்வையை உழுக்கிய வரலாறு காணாத வெள்ளம் .
மல்வானை மக்களுக்கு வெள்ளம் ஒன்றும் புதிதல்ல, ஆனால் இது இயற்கைக்கு புறம்பானது. 2 முதல் 3 நாட்களில் ஏற்படுத்துகின்ற பாதிப்பை ஒரே நாளில் தந்துவிட்டது. திரும்புகின்ற இடமெல்லாம் வெள்ளநீர் .
பாதிப்பை பொருத்தவரையில், 20 கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. 15 முதல் 20 வரையான வீடுகளில் பகுதியளவு / வசிக்க முடியாதளவு நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ( சுமாராக 550 - 600 தனிநபர்கள் ) கைக்குழந்தைகள் , சிறுவர்கள் , வயோதிபர்கள் உட்பட நோயாளர்களும் பாதிக்கப்பட்டு அவதியுருகின்றார்கள்.
மல்வானை நபவிய்ய இஸ்லாமிய இளைஞர்கள் இரவு பகலாக உழைத்து
மூவேளை உணவை சமைத்தும் விநியோகித்தும் தருகின்றனர் ( அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் , இதற்காக கழிக்கின்ற பொன்னான நேரகாலத்தை மீஸான் தராசில் கணமானதாக்க வேண்டும் , அவர்களின் செயற்பாடுகளுக்கு உழைப்பையும் செல்வத்தையும் கொட்டுகின்ற நல்லடியார்களை கொண்டுவந்து சேர்க்கவேண்டும் : ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்).
உணவு , உறையுளுக்கு அப்பால் உடைகள் , சிறுவர்களுக்கான பால்மா , Disposable Diapers , Sanitary Napkins , சுத்தம் செய்யும் பொருட்கள் , உலர் உணவுப்பொதிகள் என பலதை வேண்டி நிற்கின்றனர்.
உங்களால் முடிந்த உதவிகளை எமக்கு தாருங்கள். எங்களுக்காக துஆ செய்வதோடு எங்கள் துஆ பரகத்திலும் இணைந்து கொள்ளுங்கள் .
Bro. Shiyam 0771110082
Bro. Jiffry 774444464