Tamil Students' Association-University of Kelaniya

Tamil Students' Association-University of Kelaniya களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் - TSA UOK Community Organization

களனியவள்கரங்களில்  கனவோடுபுதுப்பயிர்களாய் முளைத்து வரும்பண்பு மிக்க களனியர்கள் ;தாம் கொண்டு வந்த கனவடைந்து - நல் நினைவுட...
26/05/2026

களனியவள்
கரங்களில் கனவோடு
புதுப்பயிர்களாய் முளைத்து வரும்
பண்பு மிக்க களனியர்கள் ;

தாம் கொண்டு வந்த கனவடைந்து - நல்
நினைவுடை கழகம் தாண்டி விடை பெறும் எம் நாயகர்கள் ;

ஒன்றனுப்பி ஒன்றேற்கும் ஒரு வட்டப் பெருநிகழ்வில் ஒன்றுபட்டு வந்து நிற்க, ஒட்டுமொத்த மழலைகளை கட்டித் தழுவ காத்திருக்கும் களனித்தாய் கை வாரீர்... களனியரே !

✍🏻 வரிகள் : ராகுலன் பிரியங்கன்
🎨வடிவமைப்பு : லிங்கேஸ்வரன் கஜானி

14/05/2026

ஒருபுறம் புதிய முகங்கள்,
ஆயிரம் கனவுகளை தங்களுடன் கொண்டு வரும் “வருபுனல்”

மற்றொரு புறம் எண்ணற்ற நினைவுகளை
இதயத்தில் சுமந்து செல்லும் “தடம்”

ஒரு பயணத்தின் தொடக்கமும், மற்றொரு பயணநிறைவின் அழகான நினைவுகள் என இரு வேறுபட்ட உணர்வுகள் கலக்கும் அந்த அழகிய தருணம் நிகழ்ந்தேறப்
போகும் நன்னாளினை,
களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியமாய் நாம் இங்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம் . . .

திகதி : வைகாசி 30 , 2026
இடம் : A7 406 மண்டபம், களனிப் பல்கலைக்கழகம்
நேரம் : பி.ப 01.00 மணி

✍🏻 வரிகள் : சதானந்தன் கௌசியன்
🖥️ காணொளி வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

10/05/2026

பல்கலைக்கழகம் எனும் கடலிலே நினைவுகளை நெஞ்சில் நிரப்பி அனுபவங்களால் தடம் பதித்து அடுத்த கரை நோக்கி செல்லும் எம் சிரேஸ்ட களனியருக்கான அன்பு நிறைந்த வழியனுப்பலாய் - "தடம்". . .
அதே கடலிலே புதிய கனவுகளும் புதுமைச் சுவடுகளும் தாங்கி அடியெடுத்து வைக்கும் நம் கனிஷ்ட களனியருக்கான மனம் கனிந்த வரவேற்பாய் - "வருபுனல்". . .

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஏற்பாட்டில் இரு விழாக்களும் ஒன்றாய் நிகழ்ந்திடும் ஓர் நன்னாள் - விரைவில் . . .

✍🏻வரிகள் : மேர்சி அன்றியா டீசில்வா
🎨வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

இறைவன் யாரெனக் கேட்பின், "உயிர்களைப் படைத்தவன்" என்பர் இவ் வையத்தார்.இங்கே ஓரணுவென நுழைந்திட்ட - எனைப் பத்துத் திங்கள் த...
10/05/2026

இறைவன் யாரெனக் கேட்பின்,
"உயிர்களைப் படைத்தவன்" என்பர்
இவ் வையத்தார்.

இங்கே ஓரணுவென நுழைந்திட்ட - எனைப்
பத்துத் திங்கள் தன் மெய்க்குள் சுமந்து,
பத்திரமாய் பெற்றெடுத்து,
"இப்பெருவாழ்வு தனை
வாழ்ந்து பார் நீயும்" என்று,
உயிரொடு உணர்வையும்
இரத்தத்தால் ஊட்டி - எனை
மனிதனாய்ப் படைத்தனள் ஒருத்தி.
அவள் 'அன்னை' யெனில் -
அவளும் இறைவியல்லோ . . .

இப் பரந்த வையத்தில்
எண்ணற்ற உயிர்களின்
ஜனனத்திற்கு ஆதாரமாய் விளங்கும்
அன்னையர்கள் அனைவருக்கும்,
களனிப் பல்கலைக்கழக
தமிழ் மாணவர் ஒன்றியம் சார்பில்,
" இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் " ❤️

✍🏻வரிகள் : கலையரசி கிருபாரூபன்
🎨வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

உழைப்பே உயர்வின் விதை ;உலகின் இயக்கத் துடிப்பு ;உழைக்கும் ஒவ்வோர் உள்ளமும் தான்,மனித மேம்பாட்டின் உயிர் சுவாசம்.மண்ணை மு...
01/05/2026

உழைப்பே உயர்வின் விதை ;
உலகின் இயக்கத் துடிப்பு ;
உழைக்கும் ஒவ்வோர் உள்ளமும் தான்,
மனித மேம்பாட்டின் உயிர் சுவாசம்.

மண்ணை முத்தமிடும் உழவரின் வியர்வை,
மனங்களை வடிவமைக்கும் ஆசானின் அர்ப்பணிப்பு,
சாலைகளை உயிர்ப்பிக்கும் சாரதிகளின் பொறுப்பு,
சிந்தனைகளை உருவாக்கும் அறிஞர்களின் எழுத்து,
இன்னும் அமைதியாக உழைக்கும் பல கைகளும்,
பெரிதும் பேசப்படாத வெவ்வேறு தொழிலாளர்களின் முயற்சியும்,
மேலும் மேன்மை பெறுகவே !
மே தினத்தன்றே !

✍🏻வரிகள் : ஸ்ருதி குவீந்திரன்
🎨வடிவமைப்பு : லிங்கேஸ்வரன் கஜானி

புதிய வருடம் - இனிய தொடக்கம்எண்ணங்கள் செயல்களால் மலர்ந்து உயரம் நோக்கி பறந்திட...அன்பும் அறிவும் பொக்கிஷமாகி, இதயம் முழு...
14/04/2026

புதிய வருடம் - இனிய தொடக்கம்
எண்ணங்கள் செயல்களால் மலர்ந்து
உயரம் நோக்கி பறந்திட...
அன்பும் அறிவும் பொக்கிஷமாகி,
இதயம் முழுவதும் ஒளி தந்திட...
அழகிய வாழ்வினை
அர்த்தமுள்ள கனவுகளால் அலங்கரித்திட...
இனிய தொடக்கம் அனைத்தும்
வெற்றிப்பாதையில் மலர்ந்திட..
களனிப் பல்கலைக்கழக
தமிழ் மாணவர் ஒன்றியத்தின்
இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . .

✍🏻வரிகள் & 🎨வடிவமைப்பு : சங்கீர்த்தனா நேசன்

களனியரின் காலச் சக்கரத்தில்புதியதொரு கோலமிது !எண்திசையும் எதிரொலிக்க ஏற்றதொரு நேரமிது !கூடியொரு குடிலமைத்து,இனியதொரு இசை...
05/04/2026

களனியரின் காலச் சக்கரத்தில்
புதியதொரு கோலமிது !
எண்திசையும் எதிரொலிக்க
ஏற்றதொரு நேரமிது !
கூடியொரு குடிலமைத்து,
இனியதொரு இசையிசைத்து,
முப்பெருமை செய்திடுவோம்.

நம் தமிழ் மாணவர் ஒன்றியத்தின்
நிர்வாகப் பொறுப்பைத் திறம்பட ஏற்று,
ஒற்றுமைப் பாதையில் ஒருமித்து உயர்ந்திட,
நிர்வாகக் குழு பீட ஒருங்கிணைப்பாளர்களே !
உங்களை உவகையுடன் வரவேற்கின்றோம் . . .

✍🏻வரிகள் : மேகானந்தசிவம் விதுர்ஷன்
🎨வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

உலகின் ஒளியாகிய ஆண்டவர், சாத்தானின் சாபமாகிய மரணத்தை வென்று,உலகிற்கு ‘நம்பிக்கை’ எனும் புதிய ஒளியை வழங்கிய நாள் இன்று......
05/04/2026

உலகின் ஒளியாகிய ஆண்டவர்,
சாத்தானின் சாபமாகிய மரணத்தை வென்று,
உலகிற்கு ‘நம்பிக்கை’ எனும் புதிய ஒளியை
வழங்கிய நாள் இன்று...
காரிருளில் நடந்த மக்கள் பேரொளியை கண்டது போல்,
எம் ஒவ்வொருவரின் வாழ்விலும் துன்பங்கள் அகன்று,
புதிய ஆரம்பமும் நிலையான சமாதானமும் உரித்தாகட்டும்.
ஒவ்வொரு முடிவும் ஓர் புதிய தொடக்கமாக அமைய வேண்டி,
அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு நல்வாழ்த்துக்கள்.

✍🏻வரிகள் : மேர்சி அன்றியா டீசில்வா
🎨வடிவமைப்பு : கண்ணன் இளங்கீரன்

களனியரின் காலச் சக்கரத்தில்புதியதொரு கோலமிது !எண்திசையும் எதிரொலிக்க ஏற்றதொரு நேரமிது !கூடியொரு குடிலமைத்து,இனியதொரு இசை...
04/04/2026

களனியரின் காலச் சக்கரத்தில்
புதியதொரு கோலமிது !
எண்திசையும் எதிரொலிக்க
ஏற்றதொரு நேரமிது !
கூடியொரு குடிலமைத்து,
இனியதொரு இசையிசைத்து,
முப்பெருமை செய்திடுவோம்.

நம் தமிழ் மாணவர் ஒன்றியத்தின்
நிர்வாகப் பொறுப்பைத் திறம்பட ஏற்று,
ஒற்றுமைப் பாதையில் ஒருமித்து உயர்ந்திட,
நிர்வாகக் குழு உறுப்பினர்களே !
உங்களை உவகையுடன் வரவேற்கின்றோம் . . .

✍🏻வரிகள் : மேகானந்தசிவம் விதுர்ஷன்
🎨வடிவமைப்பு : சந்திரகாந் சாருஜன்

களனியரின் காலச் சக்கரத்தில்புதியதொரு கோலமிது !எண்திசையும் எதிரொலிக்க ஏற்றதொரு நேரமிது !கூடியொரு குடிலமைத்து,இனியதொரு இசை...
04/04/2026

களனியரின் காலச் சக்கரத்தில்
புதியதொரு கோலமிது !
எண்திசையும் எதிரொலிக்க
ஏற்றதொரு நேரமிது !
கூடியொரு குடிலமைத்து,
இனியதொரு இசையிசைத்து,
முப்பெருமை செய்திடுவோம்.

நம் தமிழ் மாணவர் ஒன்றியத்தின்
நிர்வாகப் பொறுப்பைத் திறம்பட ஏற்று,
ஒற்றுமைப் பாதையில் ஒருமித்து உயர்ந்திட,
நிர்வாகக் குழு தலைமைகளே !
உங்களை உவகையுடன் வரவேற்கின்றோம் . . .

✍🏻வரிகள் : மேகானந்தசிவம் விதுர்ஷன்
🎨வடிவமைப்பு : முருகேசபிள்ளை நிருத்திகன்

மனிதகுலம் தனை பாவங்களிலிருந்து மீட்டிட,வானிறங்கிய புனிதராம் இயேசு கிறிஸ்து,கல்வாரி மலைதனில்ஓர் வெள்ளி நாளிலே,சிலுவையில் ...
03/04/2026

மனிதகுலம் தனை
பாவங்களிலிருந்து மீட்டிட,
வானிறங்கிய புனிதராம்
இயேசு கிறிஸ்து,
கல்வாரி மலைதனில்
ஓர் வெள்ளி நாளிலே,
சிலுவையில் மெய் அறைந்திட
தன்னுயிர்தனை நீத்திருந்தார்...
அவர் பலி நமக்குணர்த்தும்
அன்பின் வெளிப்பாட்டையும்,
தியாகத்தினையும்,
பாவ மன்னிப்பையும்
இப் புனித வெள்ளி நாளிலே
நினைவிலிருத்தி
இறைவனை வேண்டிடுவோம் . . .

✍🏻வரிகள் : கலையரசி கிருபாரூபன்
🎨 வடிவமைப்பு : நிர்த்திகா சுரேஷ்

Address

Kelaniya
11600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Students' Association-University of Kelaniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamil Students' Association-University of Kelaniya:

Share