RISE Sri Lanka

RISE Sri Lanka RiSE is established to contribute to socio, economic and cultural
discourses in a fact based, scientific and informed manner using research

தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இளைஞர் யுவதிகள் குறித்த தொழில் வாய்ப்பிற்கு விண்ணப்பியுங்கள். சுகாதார மற்...
21/12/2025

தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இளைஞர் யுவதிகள் குறித்த தொழில் வாய்ப்பிற்கு விண்ணப்பியுங்கள்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின்
சுகாதார சேவை உதவியாளர் (இளநிலை) – தரம் III பதவிக்கான ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பதவி : சுகாதார சேவை உதவியாளர் (இளநிலை) – தரம் III
காலிப் பணியிடங்கள் : 1939

கல்வித் தகுதிகள் :

(i) பொது கல்வித் தகுதி (சாதாரண நிலை) [GCE (O/L)] தேர்வில், அதிகபட்சம் இரண்டு (02) அமர்வுகளில், குறைந்தது ஆறு (06) பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதில் இரண்டு (02) பாடங்களில் குறைந்தது ‘திறன்’ (Credit) பெற்றிருக்க வேண்டும்.
(நேர்காணல் நேரத்தில், பரீட்சைகள் திணைக்களம் வழங்கிய அசல் கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல் கட்டாயம்.)

அல்லது

(ii) சம்பந்தப்பட்ட துறையில் NVQ நிலை 3 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

Calling Applications for Recruitment to the Post of Health Service Aid (Junior) Grade III of the Ministry of Health and Mass Media.

Job Post – Health Service Aid (Junior) Grade III

No of Vacancies – 1939

Educational Qualifications:

(i) Should have passed in at least six (06) subjects with two credit passes in not more than two (02) sittings at the GCE (O/L) Examination. (It is mandatory to submit the Original Educational Certificates obtained from the Department of Examinations at the interview)

Or

(ii) Should have obtained NVQ Level 3 or above in the field relevant to the post.

https://tamilguru.lk/health-service-aid-junior-job-vacancies-2026/

தமது வீடுகளில் தத்தமது வசதிக்கேற்ப வாழ்ந்த நமது சகோதர சகோதரிகள் இன்று வீடே இன்றி அல்லது வீட்டுப்பொருட்களே இன்றி தவித்துக...
06/12/2025

தமது வீடுகளில் தத்தமது வசதிக்கேற்ப வாழ்ந்த நமது சகோதர சகோதரிகள் இன்று வீடே இன்றி அல்லது வீட்டுப்பொருட்களே இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
வெள்ளம் வடிந்தகையோடு துப்பரவுப்பணிகள் இரவுபகலா இடம்பெற வீடுகளுக்குத் திரும்பிய நமது உறவுகள் வீட்டின் வெறுமையைக் கண்டு திகைத்துப் போய் நிற்கின்றார்கள் தேடித் தேடி பார்த்துப் பார்த்து சேர்த்த பொருட்கள் எதுவுமே இல்லாத அந்த வீடுகளின் வெறுமையைக் காணக்காண வரும் அழுகையை அடக்கிக்கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறார்கள் நாங்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல என்ற உறுதியான நம்பிக்கையோடு
இன்னுமொரு வாரகலத்திற்குள்ளாவது நாட்டின் நாலாபுறத்திலும் தவித்து நிற்கும் நமது சகோதர சகோதரிகளை நிம்மதிப்பெருமூச்சோடு வீட்டில் உறங்க சமைக்க உறவாட தமது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட இனித்தேவை வீட்டுத் தளபாடங்கள், சமையலறைப் பொருட்களே அதற்காக நாம் களத்தில் நிற்கின்றோம் எம்மோடு கைகோருங்கள்
ஒன்றாய் எழுவோம் நாம்.

29/11/2025

Volunteers are required immediately

Due to the prevailing emergency situation in the island, the National Disaster Management Centre (NDRMC) is critically in need of volunteers who can respond to the emergency hotline.

If you are willing and interested in volunteering during these hours of emergency, please following details below.

Volunteer location: National Disaster Management Center, Vidya Mawatha, Colombo 7

Volunteer skills required:
●Situational analysis
●Excellent communication skills
●Ability to speak multiple languages
●Work in a team condition
●Ability to comprehend the ●process of emergency response

You need to bring:
■Laptop
■Smartphone with data availability
■Water, snacks
■National ID

Volunteer time:
Volunteering starts immediately and volunteers are required to stay overnight. Training will be provided to volunteers after meeting with the focal point at NDRMC

NDRMC Focal point details:
Ms Hasanga (+94727702671)
Mr Namal (0787787367)

We kindly request you to visit NDRMC before 8pm to receive training by Ms Hasanga. If you plan to start after 8pm, please contact Mr Namal.

Your immediate volunteering can support immensely towards the rescue and relief efforts carried out by multiple government and national organizations.

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்-----------------------------------------------------------------------தேசிய ...
09/11/2025

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்
-----------------------------------------------------------------------
தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கற்பித்தலில் தேசிய டிப்ளோமா எனும் இப்பாடநெறியானது சேவை முன் பயிற்சிப் பாடநெறியாகும். இப்பாடநெறியைப் பூர்த்தி செய்பவர்கள் அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெறுவர்.

பாடநெறிக் காலம்
---------------------------------
இப்பாடநெறி மூன்று ஆண்டுகளாகும். தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வதிவிடக் கற்கை. அதன் பின் பாடசாலையொன்றுக்கு இணைப்புச் செய்யப்பட்டு அங்கு ஒரு வருட காலம் கட்டுறுப் பயில்வு

நிபந்தனைகள்
------------------------
2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் பிரதான மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். (Z புள்ளி – மைனஸ் ஆக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.)

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களில் திறமைச் சித்தி இருக்க வேண்டும்.

2025.01.01 அன்று 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். (சமய பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் மதகுருமார் ஆயின் 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்)

விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
-------------------------------------------
விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறை (Online System) மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

லிங்க்: https://ncoe.moe.gov.lk/NCOE

ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 28 ஆகும்.

ஆட்சேர்ப்பு முறை
---------------------------------
மொத்த வெற்றிடங்களில் 50% தேசிய அடிப்படையிலும் மீதமுள்ள 50% மாவட்ட அடிப்படையிலுமாக ஆட்சேர்ப்பு இடம்பெறும்.

விண்ணப்பதாரிகள் பெற்றுள்ள Z புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கான வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும்.

தெரிவு செய்யப்படும் முறை
----------------------------------------------------
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதன் போது நடைமுறைத் தேர்வு இடம்பெறும். அதில் தகைமைகள் பரீட்சிக்கப்படும். அத்தோடு குறித்த விண்ணப்பதாரி ஆசிரியர் தொழிலுக்குள் நுழையத் தேவையான உடல் மற்றும் மன ஆற்றல்களைக் கொண்டுள்ளாரா என்பது குறித்தும் பரிசோதிக்கப்படும்.

அதில் சித்தியடைபவர்கள் இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதன் போது அவர்களது உடல் மற்றும் மன ஆற்றல்கள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் இரண்டாவது தடவை பரீட்சிக்கப்பட்டு உறுதி செய்யப்படும்.

இரண்டு நேர்முகப் பரீட்சைகளிலும் சித்தியடையும் விண்ணப்பதாரர்கள் கல்வியியற் கல்லூரியில் பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும் பதிவு செய்வதற்கு முன்பாக அவர்கள் தமது உடல், உள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக வைத்திய பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்
--------------------------------------------------

உதாரணம் – 01

ஆரம்பப் பிரிவு பாடநெறிக்கு விண்ணப்பிப்பதாயின்,

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழியில் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி பாடம் எடுக்காதவர்களாயின், க.பொ.த. சாதாரண தரத்தில் தமிழில் அதிதிறமைச் சித்தியும் கணிதத்தில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வி பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

தர்காநகர் தே.க.க.
அட்டாளைச்சேனை தே.க.க.
மட்டக்களப்பு தே.க.க.
யாழ்ப்பாணம் தே.க.க.

ஆரம்பப் பிரிவு பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 96 பேரும் மாவட்ட மட்டங்களில் 96 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

உதாரணம் – 02

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதாயின்,

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி பாடத்தில் திறமைச் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ்மொழியில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

தர்காநகர் தே.க.க.
ஶ்ரீபாத தே.க.க.
மட்டக்களப்பு தே.க.க.
பேராதெனிய தே.க.க.

தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 23 பேரும் மாவட்ட மட்டங்களில் 22 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

உதாரணம் – 03

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்திற்கு இம்முறை ஆங்கில மொழி மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதாயின்,

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் த.தொ.தொ. பாடத்தில் திறமைச் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் த.தொ.தொ. பாடத்தில் சாதாரண சித்தியும் க.பொ.த. சாதாரண தரத்தில் த.தொ.தொ. பாடத்தில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

தர்காநகர் தே.க.க.
றுவன்புர தே.க.க.
யாழ்ப்பாணம் தே.க.க.
பஸ்துன்ரட தே.க.க.
மஹரகம தே.க.க.

தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 65 பேரும் மாவட்ட மட்டங்களில் 65 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

மேலதிக தகவல்கள் சில:

தமிழ் மொழிமூல பாடங்கள் இடம்பெறும் கல்லூரிகள்
-----------------------------------------------------------------------
தர்காநகர் தே.க.கல்லூரி
மட்டக்களப்பு தே.க.கல்லூரி
ஶ்ரீபாத தே.க.கல்லூரி
பேராதெனிய தே.க.கல்லூரி
யாழ்ப்பாணம் தே.க.கல்லூரி
அட்டாளைச்சேனை தே.க.கல்லூரி
மகாவலி தே.க.கல்லூரி
வவுனியா தே.க.கல்லூரி

தர்காநகர் தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-----------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
சமூக விஞ்ஞானம்
தமிழ்மொழியும் இலக்கியமும்
உணவு நுகர்வுத் தொழினுட்பவியல்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் (ஆங்கில மொழிமூலம்)

அட்டாளைச்சேனை தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-----------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்)
கணிதம் (ஆங்கில மொழிமூலம்)
இஸ்லாம்
விசேட தேவைக் கல்வி
முயற்சியாண்மையும் நிதியியல் அறிவும்

மட்டக்களப்பு தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
---------------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்)
கணிதம்
சமூக விஞ்ஞானம்
தமிழ்மொழியும் இலக்கியமும்
சித்திரம்
நாடகமும் அரங்கியலும்
உடற்கல்வி
வடிவமைப்புக் கலைகள் உற்பத்தித் தொழினுட்பவியல்
வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்பவியலும்

யாழ்ப்பாணம் தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-----------------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்)
நடனம் (பரதம்)
சங்கீதம் (கர்நாடகம்)
உடற்கல்வி
விசேட தேவைக் கல்வி
மாணவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்

வவுனியா தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
----------------------------------------------------------------
விஞ்ஞானம் (சிங்கள மொழிமூலம்)
கணிதம் (சிங்கள மொழிமூலம்)
இந்து சமயம்
கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயம்
உடற்கல்வி (சிங்கள மொழிமூலம்)
உணவு நுகர்வுத் தொழினுட்பவியல் (சிங்கள மொழிமூலம்)
விவசாயத் தொழினுட்பவியல் (சிங்கள மொழிமூலம்)
இரண்டாம் மொழி தமிழ்

ஶ்ரீபாத தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி (சிங்களம்)
விஞ்ஞானம்
கணிதம் (ஆங்கில மொழிமூலம்)
சமூக விஞ்ஞானம் (சிங்கள மொழிமூலம்)
தமிழ்மொழியும் இலக்கியமும்
சித்திரம்
நடனம் (பரதம்)
சங்கீதம் (கர்நாடகம்)

குறிப்புகள்:

தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி பெண் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமானது.

ஶ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் 75% இந்திய வம்சாவளி தமிழ் விண்ணப்பதாரர்களும் 25% சிங்கள இன விண்ணப்பதாரர்களும் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

தொகுப்பு
எம்.யூ.எம். ஸபீர் (SLTES)
விரிவுரையாளர்,
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி

மேலதிக தகவல்களுக்கு (07.11.2025) வெளியான வர்த்தமானப் பத்திரிகையைப் பார்வையிடவும்.

உயர்கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 10வது சுற்றுக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்!கல்வி, உயர் கல்வி மற்றும...
08/11/2025

உயர்கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 10வது சுற்றுக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் (IFSL) 10வது சுற்றுக்கான விண்ணப்பங்கள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

​இந்தத் திட்டம், 2022, 2023, மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் (G.C.E. Advanced Level Examination) சித்தியடைந்த மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

​முக்கிய தகவல்கள்:
​விண்ணப்பிக்கும் காலம்: நவம்பர் 1, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை.

​விண்ணப்பிக்கும் இணையதளம்: www.studentloans.mohe.gov.lk

​திட்டத்தின் நோக்கம்: அங்கீகரிக்கப்பட்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், முழுமையாக ஆங்கில வழியில் நடத்தப்படும் பட்டப்படிப்பு நிகழ்ச்சிகளைத் தொடர மாணவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம்.

​தகுதிக்கான நிபந்தனைகள்:
​மாணவர்கள் ஒரே அமர்வில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் குறைந்தது மூன்று சாதாரண சித்தி பெற்றிருக்க வேண்டும்.

​நவம்பர் 1, 2025 அன்று மாணவரின் வயது 25 வயதிற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

​மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ய, குறைந்தது 80% வருகைப்பதிவையும் அனைத்துக் கட்டாயப் பாடங்களிலும் குறைந்தபட்சம் கிரெடிட் சித்தியையும் (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.

​நிதி உதவி விவரங்கள்:
​அதிகபட்ச கடன் தொகை: ரூபா 1.5 மில்லியன் (ரூ. 15 இலட்சம்).

​வாழ்க்கைச் செலவிற்கான கொடுப்பனவு: மேலதிகமாக, வருடத்திற்கு ரூபா 75,000 (ரூ. 75 ஆயிரம்) உதவித்தொகையாக வழங்கப்படும்.

​கடன் மீள்செலுத்துகை: கடன் வட்டி இல்லாதது. படிப்பு முடிந்தபின் ஓராண்டு சலுகைக் காலத்துடன் (Grace Period) சேர்த்து, மொத்தமாக 12 வருடங்களில் மீள்செலுத்தலாம்.

​பங்கேற்கும் நிறுவனங்களில் சில:
​SLIIT, CINEC, Horizon Campus, ICBT, Lyceum Campus, Saegis Campus, NSBM, ESOFT Metro Campus, மற்றும் பல நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்கின்றன.

​மேலதிகத் தகவல்:
​அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியல் உட்பட மேலதிக தகவல்களை, மேற்கண்ட இணையதளத்தில் கிடைக்கும் மாணவர் கையேட்டில் (Student Handbook) காணலாம்.

உரியவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கவும். Kattankudy மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் வழிகாட்டல்கள் தேவை என்றால் RIS...
02/11/2025

உரியவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கவும். Kattankudy மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள்
வழிகாட்டல்கள் தேவை என்றால் RISE program manager Silmi Thajudeen ஐ அணுகவும், நாங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்யலாம்.

இலங்கை கிராம அதிகாரி சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2025
ශ්‍රී ලංකා ග්‍රාම නිලධාරී සේවයේ III ශ්‍රේණියට බඳවා ගැනීම සඳහා වන තරඟ විභාගය- 2025

https://www.gazette.lk/.../grama-niladhari-vacancies...

இலங்கையில் கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கு இந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக அமைகின்றது.
விண்ணப்ப முடிவுத்திகதி 2025.11.24
கிராம உத்தியோகத்தர் என்பவர் யார்?
கிராம அலுவலர் அல்லது கிராம உத்தியோகத்தர் (Gram Nadar Village officer" எனப்படுபவர் கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராவார் கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள் திரட்டுதல், வாக்காளர் பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும். இவர்கள் தங்கள் ங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்குவது இவர்களது பொறுப்பாகும்
வயதெல்லை என்ன?

21 வயதுக்குக் குறையாலும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
கிராமசேவையாளருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்;
சம்பளத்திட்டமாக
Monthly salary scheme applicable to the post:
Salary scale – Rs.50,630 - 10x540 - 11 x 630 - 10 x
1010 - 10 x 1190 – Rs.84,960. (Payments shall be made
subject to the provisions mentioned in Schedule (ii) of
the Public Administration Circular No.10/2025 dated
25.03.2025.)

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கல்விக்கைமைகள் என்ன?

(அ) கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய
பாடங்களுள் ஒரு பாடத்தினையும். கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்,
அத்துடன்

(ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் பழைய பாடத்திட்டத்தின் கீழ் மூன்று (3) படங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது
தெரிவுமுறை எவ்வாறு இடம்பெறும்?
1) எழுத்துமூலப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும் அந்த பரீட்சையில் ஒவ்வொரு பிரதேசசெயலக பிரிவுகளிலும் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கு உட்படுதப்படுவார்கள். ஒவ்வொருபிரதோ செயலகப் பிரிவிலும் காணப்படுகின்ற வெள்ளிடங்களில் இரண்டு மடங்கானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்டுவார்கள்
இறுதியாக எழுத்துப் பரீட்சையின் புள்ளிகள் மற்றும் நேரமுகப்பரீட்சையின் புள்ளிகள் என்பவற்றின் கூட்டுத்தொயாக அத அதிக புள்ளிகளைப் பெறுபவர்கள் பதவிகளுக்காக நியமனம் பெறுவார்கள்.
எழுந்துப் பரீட்சையின் கட்டமைப்பு
01) மொழிப் பரீட்சை இது மொழியாற்றலை பரிசோதிப்பதாக அமையும் க.பொ.த (சா/த) தமிழ்மொழி புத்தகத்தில் உள்ள விடயங்களை மீட்டிப் பார்த்துக்கொள்வது போதுமானது குறித்த வினாத்தாள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அமையும்
இவ்வினாப்பத்திரம் விண்ணப்ப தாரர்களின் கருத்துத் தெரிவிப்பு,
புரிந்துகொள்ளுதல்,
எழுந்துகு அமைப்பு,
மொழியும் கட்டுரையும்
வழங்கப்பட்ட கடிதமொன்றை வரைதல்,
வழங்கப்பட்ட பந்தியொன்றை கருக்குதல்
வழங்கப்பட்டுள்ன தரவுகளின்படி விபரங்களைத் தயாரித்தல், வாக்கியங்கள்சிலவற்றின் கருத்தைத் தனிவாக்கியத்தில் எழுதுதல்,
இலகுவான இலக்கணப் பயன்பாடு
குறித்த அறிவைப் பரிசீலனை செய்யும் வினாக்களைக் கொண்டது. சகல
வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்
1 1/2 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
(02) பொது அறிவும் பொது உளசார்பும்: விண்ணப்பதாரரர்களின் கிரகித்தல் திறனையும் பொது அறிவுத்திறனையும் பரிசோதிப்பதற்காக பொது அறிவும் உளச்சார்பும் என்ற வினாத்தன் வழங்கப்படும்.
இவ்வினாப்பத்திரம் மூலம்
நாட்டின் வரலாறு பூகோல, சமூக பொருளாதார ரீதியில் முக்கியமான தகவல்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு
சமகாலத் தகவல்கள் பற்றிய பொது அறிவு,
எண்கணிப்பு
தர்க்கிக்கும் சக்தி
பிரச்சினைகளைத் தீர்த்தல்,
தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றல் உட்பட பொது அறிலை அளவிடும் வகையில் தயாரிக்கப்படும் பல்தேர்வு மற்றும் சுருக்கமான விடைகளை வழங்கும்
மாதிரியிலான வினாக்ககளைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடை அளித்தல் வேண்டும்
112 மணித்தியாலயம் கொண்ட இந்த வினாப்பத்திரத்திற்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்.
கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை இங்கு கீழ்வரும் அடிப்படையில் புள்ளி வழங்கப்படும்
தலைமைத்துவம் - 15 விளையாட்டுத் திறன்கள் - 05
பிற அலுவல் மொழி அல்லது இணைப்பு மொழி திறமை - 10
கணினி அறிவு - 10 நேர்காணலில் காட்டப்பட்ட திறன் - 10
மொத்தம் 50
அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் என்பவற்றில் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் அல்லது கடிதங்கள் மாத்திரமே கவனத்திதில்கொள்ளப்படும். உதாரணமாக அறநெறிப் பாடசாலை ஆசிரியர் ஒருவராகக் கடமையாற்றுதல், கிராம அபிவிருத்திச் சங்கமொன்றில் பதவி வகித்தல், விளையாட்டுக் கழகமொன்றில் பதவிகள் வகித்தல் போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்
அத்துடன் கிராம அலுவலர்களுக்கு அரசியல் உரிமைகள் இல்லையாதலால் அரசியல் மட்டத்திலான அமைப்புகளில்
பதவிகள் வகிப்பது தொடர்பாகப் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது உதாரணமாக பிரதேச சபைகள்/ நகர சபைகளின் உறுப்பினர்கள். கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் போன்ற அரசியல் கட்சி பிரதிநிதித்துவத்தினால் பெறப்படும் பதவிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
நேர்முகப் பரீட்சையில் தெரிவானதன் பின்னரான செயற்பாடுகள் யாவை?
நேர்முகப் பரீட்சையில் தெரிவாகின்றவர்கள் மூன்று மாதகாலப் பயிற்சிப் பாடநெறி மாவட்டச் செயலாளரின் மேற்பார்வையின்கீழ் நடைபெறும் அப்பயிற்சிப் பாடநெறி வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கே நியமனம் வழங்கப்படும் பயிற்சிக் காலத்துக்காக 3,000 ரூபா கொடுப்பனவு மட்டும் டும் வழங்கப்படுவதுடன், அக்காலத்தினு விடுமுறை உரித்துக்கள் இருக்காது பயிற்சிநெறி நடைபெறும் நாட்களில் 80% பங்குபற்றுதல் வேண்டும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெறும் எழுத்துப் பரீட்சையில் சித்தியடைவதற்காக 50% புள்ளிகள் பெறப்படுதல் வேண்டும் பயிற்சிக்காலம்
சேவைக்காலத்துக்குக கணிக்கப்பட மாட்டாதென்பதுடன், அக்காலம் ஓய்வூதிய விதிகளின் ஏற்பாடுகளுக்கமைய ஓயவூதியக் கணிப்புக்காக மட்டும் தொடர்புபடுத்தப்படும்

இறுதியாக
அரசாங்க பதவிகளைப் பொறுத்தவறையில் ஆரம்ப மட்டப் பதவிகள்தான் அரசாங்க சேவையில் கால் பதிப்பதற்கான பட்டத்தையும் பெற்றுக 5 வருட சேவைக்காலத்துடன ஒரு பட்டத சேவை இலங்கை திட்டமிடல் சேவை கொண்டிருப்பாரானால் அவரால் இலங்கை நிர்வாக சேவை இலங்கை என்ற பதவிகளுக்கான பரீட்சைகளுக்கு தோற்றலாம் அவ்வாறு பரீட்சைகளுக்குத் தோற்றி தற்போது பிரதேச செயலாளர்களாக பதவிவகிப்பவர்களும் இருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை ஒருவாய்ப்பாக பயன்படுத்தி பரீட்சைகக்கான ஆயத்தங்களை இப்போதே ஆரம்பியுங்கள்

இலங்கை விமான படையின் விமான தொழில்நுட்ப வல்லுநராக ஆர்வமுள்ள தகைமையுள்ள இளைஞர்கள் இணைந்திடுங்கள்
29/10/2025

இலங்கை விமான படையின் விமான தொழில்நுட்ப வல்லுநராக ஆர்வமுள்ள தகைமையுள்ள இளைஞர்கள் இணைந்திடுங்கள்

கல்வியாண்டு 2026 இல் தரம் -06 ஆண் மாணவர்களுக்கான விசேட பாடநெறிதரம் -06 இலிருந்து தரம் 10 வரை   தொடர்ச்சியாக வழிகாட்டல்எம...
23/10/2025

கல்வியாண்டு 2026 இல் தரம் -06 ஆண் மாணவர்களுக்கான விசேட பாடநெறி

தரம் -06 இலிருந்து தரம் 10 வரை தொடர்ச்சியாக வழிகாட்டல்

எமது ஆண் மாணவர்களின் நலன் கருதி உடல் நலம் மனநலம் சமூக வாழ்க்கை திறன்கள் கற்றல் திறன்கள் ஆன்மீக திறன்கள் தொழில் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தி மாணவர்களை சமநிலை ஆளுமை கொண்டவர்களாக உருவாக்கும் எமது ரைஸ் ஸ்ரீலங்கா இமாரா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மற்றும் ஒரு அங்கமாக இந்தப் பாடநெறி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2026 கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது

விரிவுரைகள் களப்பயணங்கள் விளையாட்டு நிகழ்ச்சிகள் என பல்வகை அம்சங்களை இந்தப் பாடநெறி உள்ளடக்கியுள்ளது

நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணித்திலங்கள் நடைபெறும்.

அனைத்துப் பாடசாலைகளிலிருந்தும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் நேர்முகப்பரீட்சையின் பின்னர் 25 மாணவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவர்

பாடநெறி ஒருங்கிணைப்பாளராக
அஷ் ஷெய்க் அக்றம் அபூபக்கர் நளீமி அவர்கள் செயற்படுவார்கள்

விண்ணப்ப படிவங்களை பெற இந்த 0776 230 700 தொலைபேசி இலக்கத்தினை அழைக்கவும் மற்றும் கீழ்வரும் Google form இனையும் WhatsApp group இணைந்து கொள்ளவும்.

WhatsApp group யில் இணைவதற்கு

https://chat.whatsapp.com/FAQmNeHp09O5c5a0STg91z?mode=wwc

Google form இனை நிரப்ப

https://forms.gle/Cg5jotF6jf5m4ohn7

சமூகமானி இளமானி பட்டப்படிப்பு Bachelor of Social Work Degree விண்ணப்ப முடிவு திகதி 22.09.20252022,2023 மற்றும் 2024 இல் ...
18/09/2025

சமூகமானி இளமானி பட்டப்படிப்பு
Bachelor of Social Work Degree
விண்ணப்ப முடிவு திகதி 22.09.2025
2022,2023 மற்றும் 2024 இல் உயர்தரம் முடித்து 3 பாடங்களிலும் சித்தியடைந்த, பொது அறிவு பரீட்சைக்கு 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆங்கில மொழி மூலம் தொடர விரும்பினால் சாதாரண தரத்தில் அல்லது உயர்தரத்தில் ஆங்கிலத்தில் C சித்தி பெற்று இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மிகச் சிறந்த ஓர் அரிய வாய்ப்பு Insight Institute of management and Technology நிறுவனத்தினால் நடாத்தப்படும் மூன்றாவது முற...
08/09/2025

மிகச் சிறந்த ஓர் அரிய வாய்ப்பு

Insight Institute of management and Technology நிறுவனத்தினால் நடாத்தப்படும் மூன்றாவது முறையாக நடாத்தப்படும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 28.03.2026 நடாத்தப்பட உள்ளது

Conference will be held in Hybrid mode

இந்த விளம்பரத்தில் சகல விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது

Address

Beach Road
Kattankudi
30100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94776230700

Website

Alerts

Be the first to know and let us send you an email when RISE Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share