10/10/2019
*📬திறந்த பல்கலைக்கழகம் பற்றிய ஒரு ஆய்வு*
```🗞Open University of Sri Lanka```
அரச பல்கலைக்கழகளை விட திறந்த பல்கலைக்கழகம் வித்தியாசமானது.
பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு கல்வி பயிலுகின்றனர். ஏனைய பல்கலைக்கழகங்களின் சான்றிதழ்களுக்கு சம அந்தஸ்துள்ள சான்றிதழ்கள் இங்கு உள்ளதுடன் வகுப்பறை போதனைகளுக்கு அப்பால் தொழிற் கல்வி முறை தொடர்பான கற்கைகளும் வழங்கப்படுகிறது.
தலைமையகம் நாவல இலும் பிராந்தியக நிலையங்கள் Colombo, Kandy, Matala, Jaffna, Batticaloa போன்ற 18 உப கற்கை நிலையங்கள் நாடளாவிய ரீதியிலும் நடைபெற்று வருகின்றன. தற்போது 35000 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கற்கை நெறிகளில் பயின்று வருகின்றனர்.
இங்கு தொழில் மையப் பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் கல்வி பீடம், மானிடவியல் சமூக விஞ்ஞான பீடம், இயற்கை விஞ்ஞான பீடம், பொறியியல் தொழில் நுட்ப பீடம் என 4 பீடங்கள் காணப்படுகின்றது. இவற்றின் கீழ் 18 துறைகளும் 600 இற்கு மேற்பட்ட கற்கை நெறிகளும் உள்ளடங்குகின்றன.
இங்கு சாதாரண டிப்ளோமா முதல் உயர் டிப்ளோமா, ஆரம்ப டிப்ளோமா, பட்டப்பின் டிப்ளோமா மற்றும் பட்டப்பின் கற்கைகள் என பல்வேறு விதமான தராதரங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இங்கு ஆசிரியர் கல்வி, முன்பள்ளிக் கல்வி, மொழி, சட்டம், முகாமைத்துவம், இயற்கை விஞ்ஞானம், சுற்றாடல் கல்வி, தொடர்பாடல் என்பவை பிரதான பாடநெறிகளாக காணப்படுகின்றன. மேலும் இங்கு *MSc, LLB, Civil Engineering* போன்ற பல்வேறு பட்டங்களை மாணவர்கள் பெறுவதுடன் *சமூக விஞ்ஞான* துறையில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
*உயர் தரத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவர்கள்* குறைந்த சித்திகளுடன் உயர்கல்வினை இங்கு தொடரலாம். ஆகக் குறைந்த சித்தி கொண்ட மாணவர்கள் ஆரம்ப கற்கை *(Foundation Course)* ஒன்றினை பின்தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும். அந்த வகையில் சாதாரணமாக 10 ஆண்டுகள் வாகன பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஒருவர் *Civil* துறையில் பொறியியலாளராக கற்று வெளியேறும் வாய்ப்பினை திறந்த பல்கலைக்கழகம் மட்டுமே வழங்குகின்றது.
திறந்த எனும் பதன் விரிவான கற்றல் சாதகத்தன்மையை பிரதிபலிக்கின்றது.
18 இற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜை எவரும் இப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவற்றிற்கு வெளிநாட்டு மாணவர்களும் கல்வி வாய்ப்பினை பெற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.
*வயதுக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி* நேரடியாகவோ அல்லது தொலைக் கல்வி (Visitors) முறையிலோ கற்கை நெறியை பூர்த்தி செய்வதும் மற்றும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு பாடங்களை தெரிவு செய்து கொள்ளவும் முடியும். இங்கு தொழில் ஒன்றை செய்து கொண்டே கற்றலில் ஈடுபடலாம். இதற்காக பகுதி நேர கற்றல்களும் உதவுகின்றன.
இதில் முக்கிய அம்சமாக மாணவர்களின் கற்றல்களுக்கு ஏற்ற கால எல்லைகளை மாணவர்களே தெரிவு செய்யவும் தமது கல்வி தகுதிகளுக்கு ஏற்ப சில பாடங்களை தவிர்க்க முடியும். இதே வேளை கால எல்லையை பிற்போடவும் முடியும்.
📯 *திறந்த பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அரச பல்கலைக்கழகம் மற்றும் அரச கல்வி நிலையங்களில் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ கற்கைகளை பின் தொடர்வதில் எந்தவொரு பிரச்சினைகளும் கிடையாது.*
➖➖➖➖➖➖➖➖
✅ WhatsApp ஊடாக இணைந்து கொள்ள✅
🔰 எமது இச் சேவையினை *தனிப்பட்ட ரீதியில்* வட்ஸப் [WhatsApp] ஊடாக தொடர்ச்சியாக பெறுவதற்கு *“0752150566"* என்ற இலக்கத்தினை உங்கள் மொபைலில் இன்றே *save* செய்து *"OK"* அல்லது 👍🏽 button ஐ எமக்கு *Replay பன்னுங்கள்.*🔰
✅ FB Page | Like செய்யுங்கள்✅
https://www.facebook.com/AJ-Marketing-Services-116388919734702/
*(ஏனையவர்கள் பயனடைந்து நன்மையை பெறும் பொருட்டு நீங்கள் அங்கத்தவராக இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குழுமத்துக்காவது பகிருங்கள்)*
*💎_AJ Marketing & Services_ 💎*