10/06/2021
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல்லாஹ்வின் உதவியால் இன்று எமது ஊரில் உள்ள வரிய மற்றும் நடுத்தர கிட்டத்தட்ட மூவாயிரம் குடும்பங்களுக்கு 2500/- ரூபாய் வீதம் கிட்டத்தட்ட 7,500,000/- (எழுபத்து ஐந்து இலட்சம் ரூபாய்) பகிர்தலிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ஊர் மக்களுடைய நிலமைகளை கருத்திட்கொண்டு இப்படிப்பட்ட முன்மாதிரியான, அழகாக எமது ஊரில் உள்ள 15/16 பள்ளிவாயல்களையும் மையப்படுத்தி செய்யப்பட்ட இந்த செயற்திட்டத்தை (ஸதகாவை) ஊர் மக்கள் சார்பாக நாம் உள்ளத்தால் வரவேற்கிறோம். ஜஸாகல்லாஹு ஹைரன்!!
இந்த அழகான செயற்திட்டத்தை ஏற்பாடு செய்து முன்னின்று வழிநடத்திய களுத்துறை ஜம்-இய்யதுல் உலமா சபை, களுத்துறை ஸகாத் சபை மற்றும் களுத்துறை நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஜஸாகல்லாஹு ஹைரன்!!
மற்றும் இந்த அழகான முயற்சிக்கு தங்களால் இயன்ற முறையில் பண உதவிகள் புரிந்து பங்களிப்புகளை செய்த,
👉 களுத்துறை ஜம்-இய்யதுல் உலமா சபை
👉 களுத்துறை ஸகாத் சபை
👉 களுத்துறை ஸகாத் சபை உறுப்பினர்கள்
👉களுத்துறை வாழ் நல்லுள்ளம் படைத்த தனவந்தர்கள்
👉களுத்துறை நிர்வாக குழு உறுப்பினர்கள்
👉 வெளிநாடுகளில் (Japan, Canada, U.K , Qatar மற்றும் பல நாடுகளில்) வாழும் எமது ஊரைசேர்ந்த சகோதரர்கள்
ஆகிய அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு எதிர் காலத்திலும் இப்படிப்பட்ட முன்மாதிரியான, அழகான முயற்சிகளை மேற்கொள்ள வல்ல நாயனான அல்லாஹவை பிரார்திப்பதோடு, இந்த அழகான முயற்சிக்கு உடலாலும் பொருளாலும் இரவு, பகலாக உழைத்த அனைவருக்கும் வாழ்கையில் மென்மேலும் பரகத்தும் ஆஃபியதும் கிடைக்க துஆ செய்யுமாறும் ஊர் மக்களிடம் பணிவாக வேண்டிக்கொள்கிறோம்!
ஜஸாகல்லாஹு ஹைரன்!!
குறிப்பு- யாரையாவது குறிப்பிட தவறி இருப்பின் மன்னிக்கவும்.
10/06/2021