OBA Kalawewa

OBA Kalawewa Official Page of Kalawewa Muslim Central College Old Boys Association.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்ச்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக இன்று (22.07.2025) நடைபெற்ற கருத்தரங்கில் பங்குபற்றி...
22/07/2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்ச்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக இன்று (22.07.2025) நடைபெற்ற கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பண உதவி செய்த பெற்றார் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எமது நன்றிகளை தெறிவத்துக்கொள்கிறோம்.

⚽🏆 KMCC ன் கால்பந்து வெற்றிக் கோலம்! 🏆⚽Kekirawa வலயத்தில், மீண்டும் KMCC கால்பந்து அணி 2024 ஐப் போன்று 2025 இலும் தங்களை...
06/06/2025

⚽🏆 KMCC ன் கால்பந்து வெற்றிக் கோலம்! 🏆⚽

Kekirawa வலயத்தில், மீண்டும் KMCC கால்பந்து அணி 2024 ஐப் போன்று 2025 இலும் தங்களை அசைக்க முடியாத அணியாக நிரூபித்துள்ளது!

🔥 16,18 இன் கீழ், மற்றும் 20 இன் கீழ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் எமது அணிகள் Champion பட்டத்தை வென்று,
சென்ற வருடம் போல இம்முறையும் திறமையுடன் மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன!

💪 இந்த வெற்றிகள் எங்கள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் முயற்சிக்கும், ஒற்றுமைக்குமான பிரதிபலிப்பாகும்!

பயிற்றுவிப்பாளர் Anaas Sir அவர்களுக்கும், எப்போதும் பின்னால் நின்று உற்சாகம் ஊட்டிய ஆசிரியர்களுக்கும்,
நிரந்தர ஆதரவளித்த பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் பழைய மாணவர்களது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏🏼.

💫 எமது வீரர்களுக்காக இன்னும் பல வெற்றிகள் கிட்ட அல்லாஹ்வை பிரார்த்தனை செய்து கொள்வோம்.

KMCC – கால்பந்தின் பெருமை!

OBA - Kalawewa Muslim Central College

அனுதின வளர்ச்சிக்கு ஒரு புதிய தடம் – KMCC பழைய மாணவர்கள் சங்கம்! 🏫⚽இன்றைய இந்த சிறப்பான நாளில், எமது KMCC பாடசாலைக்கு பழ...
04/06/2025

அனுதின வளர்ச்சிக்கு ஒரு புதிய தடம் – KMCC பழைய மாணவர்கள் சங்கம்! 🏫⚽

இன்றைய இந்த சிறப்பான நாளில், எமது KMCC பாடசாலைக்கு பழைய மாணவர்கள் சங்கத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களது திறமைகளை வளர்க்கும் நோக்கில், கல்வியுடன் கூடிய உடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கும் விதமாக இவ்வுதவி செய்யப்பட்டது.
இதற்காக உதவிய நல்லுல்லங்களுக்கு பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போன்று எதிர்காலத்திலும் பாடசாலை வளர்ச்சிக்காக அனைவரின் பங்களிப்பும் தொடர வாழ்த்துக்கள்!

-OBA

நாளை இல்ல விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பம்
10/04/2025

நாளை இல்ல விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பம்

සිසුන් වගකිවයුතු නායකයින් බවට පත්කිරීමේදී පාසලේ කාර්යභාරය වැදගත් කාර්යභාරයක් ඉටු කරන බැවින් සිසුන්ගේ කියවීමේ පුරුද්දද ඉත...
17/10/2024

සිසුන් වගකිවයුතු නායකයින් බවට පත්කිරීමේදී පාසලේ කාර්යභාරය වැදගත් කාර්යභාරයක් ඉටු කරන බැවින් සිසුන්ගේ කියවීමේ පුරුද්දද ඉතා වැදගත් වේ.
ජාත්‍යන්තර කියවීමේ මාසය නිමිත්තෙන් පාසල් සිසුන් අතර කියවීමේ පුරුද්ද වර්ධනය කිරීම සඳහා විවිධ වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීමට අප පාසල සැලසුම් කර ඇත.
විදුහල්පතිතුමාගේ සහයෝගය ඇතිව සෙලාන් බැංකුවේ පැහැසර ව්‍යාපෘතිය අප පාසලට ගෙන ඒම සඳහා මූලිකත්වය ගෙන කටයුතු කළේ තම යුතුකම ලෙසින් කටයුතු කළ පාසලේ ආදි ශිෂ්‍ය සංගමයයි.
එහි ප්‍රතිඵලයක් ලෙස අද අපේ විද්‍යාලීය පුස්තකාලය අලුත් වැඩියා කර පිබිදෙනවා පමණක් නොව වටිනා පොත් රාශියක්, ලැප්ටොප් පරිගණක දෙකක්, බහුමාධ්‍ය ප්‍රොජෙක්ටරයක් සහ පුළුල් තිරයක් තිළිණයක් ලෙස රුපියල් මිලියනට වැඩි වටිනා තෑග්ගක් ලැබී ඇත.
මේවා අප පාසලට ලබාදුන් සෙලාන් බැංකුවටත්,සෙලාන් බැංකු ප්‍රාදේශීය කළමනාකරු,කැකිරාව ශාඛා කළමනාකරු ඇතුලු සියලුම කාර්යමන්ඩලයටත් විද්‍යාලයේ ආදි ශිෂ්‍ය සංගමයේ ලේකම් ඇතුළු සාමාජිකයින්ටත්, විද්‍යාලයේ සංවර්ධන සංගමයේ ලේකම් ඇතුළු සාමාජිකයින්ටත් විද්‍යාලයේ ශිෂ්‍ය ප්‍රජාව හෘදයාංගම ස්තුතිය පුදකර සිටියි.

01/10/2024
பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்தி சங்க  ஏற்பாட்டில் இந்த ஆண்டு  5 ஆம் தர புலமை பரிசில் பரிட்சையில் தோற்ற இருக்கும் ...
15/09/2024

பழைய மாணவர் சங்கம்,பாடசாலை அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் இந்த ஆண்டு 5 ஆம் தர புலமை பரிசில் பரிட்சையில் தோற்ற இருக்கும் எமது மாணவர்களுகாகான இலவச கருத்தரங்கு 2024.09.08, எமது பாடசாலையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த அதிபர் உற்பட நலன் விரும்பிகள் அனைவருக்கும் மற்றும்
வளவாளர் திரு S A M சஹாப்தீன் BEd,SLPS அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெறிவித்துக் கொள்கின்றோம்.மேலும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கம் ,பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

சவர்க்காரக்காய் மரம்   மரங்களுக்கு உயிர் இருக்கிறது அவை பாடசாலை பல்கலைக்கழக மரங்களாயின் கிளைகள் இலைகளை மட்டுமல்ல பல்லாயி...
08/09/2024

சவர்க்காரக்காய் மரம்

மரங்களுக்கு உயிர் இருக்கிறது அவை பாடசாலை பல்கலைக்கழக மரங்களாயின் கிளைகள் இலைகளை மட்டுமல்ல பல்லாயிரம் மாணவர்களுடைய நினைவுகளையும் சுமந்து கொண்டிருக்கிறன. அவைகளுக்கு பல கதைகள் தெரியும். பல இரகசியங்கள் தெரியும். பல காதல் காவியங்களை அது கண்டிருக்கும். சந்தோசம் மகிழ்ச்சி சோகம் துக்கம் அழுகை வெருப்பு வெற்றி தோல்வி வலி கண்ணீர் உண்மை பொய் என அத்துனை உணர்வுகளை நிகழ்ச்சிகளை சம்பவங்களை அது அதன் நிழலில் கண்டிருக்கும் கேட்டிருக்கும் பல மொழிகள் தெரியும் அவைகளுக்கு. பல உண்மைகள் தெரியும் அவைகளுக்கு. பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கும் அந்த மரங்கள்.

நான் பாடசாலையில் இருந்து விலகி 14வருடங்களை தாண்டிவிட்டது.
எனக்கு பாடசாலை வகுப்பறையில் கற்ற பாடங்கள் எதுவும் நினைவுகளில் இல்லை. வகுப்பறையில் படித்த பாடங்களனைத்தும் ஒரே ஒரு சான்றிதழில் பெறுபேறு என்ற பெயரில் எச்சங்களாய் போயின. நினைவுகளில் இன்று ம் அந்த சவர்க்காரக்காய் மரமும் அகத்தி மரமும் புளியமரமும் பசுமரத்து ஆணிதான்.

#சவர்க்காரக்காய் மரம்

பாடசாலை நடுவே ஒரு மரம் இருந்தது பெயர் தெரியாது காய்களை பறித்து நீர் போட்டு கசக்கினால் நுரை வரும் நாங்கள் சவர்க்காரக்காய் மரம் எனச் சொல்லுவோம் அதற்கு.

#அகத்தி மரம்

அகத்தி மரத்துக்கு கீழே ஒரு சிறிய தாமறை தடாகமிருந்ததாக ஞாபகம் சின்ன வயதிலே அதில் ஓடுங்கள் ஓடுங்கள் ஒன்று என்ற ஒரு விளையாட்டு விளையாடியதாக ஞாபகம். அகத்தி மரம் அகன்று விரிந்து mega size குடைபோல இருக்கும் அதற்கு கீழேதான் பல பாடங்கள் காலை கூட்டம் என்பன நடக்கும் அதன் நிழலில் பெண்களுக்கு முதலிடம். அகத்தி மரத்து நிழலில் நடந்த ஒரு வகுப்பில்தான் மதிப்பிற்குரிய Teacher அவர்களின் மூலம் வுழூ மற்றும் தயம்மும் செய்வது எப்படி என கற்றுக் கொண்டது ஞாபகம். – (அல்லாஹ் அந்த ஆசிரியரின் அமல்களை பொருந்தி க் கொண்டு சுவன பாக்கியத்தை தந்தருள்வானாக.)-
அதே மரத்தில் ரயில் தண்டவாள இரும்பு தூண்டு ஒன்று எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும். பாடசாலையில் மின்சாரம் இல்லாத போது அதில் தட்டுவது மூலம் தான் பாடங்கள் நிறைவுக்கு வரும். பாடவேலை முடிய 10 நிமிடம் முன்பு அந்த தண்டவாள துண்டில் தட்டி பெல் ஒலிக்கச் செய்து பாடசாலை பாடவேலைகள் குழம்பி மதிப்பிற்குரிய Kuddus ஆசிரியரிடம் அடி வங்கிய அந்த நினைவுகள்...

#புளியமரம்

மைதானத்தில் இருந்த அந்த புளியமரம் இல்லை இல்லை அது புளியம் விருட்சம். அதற்கு வயது இன்னதென்று யாருக்கும் தெரியாது. அந்த விருட்சமும் பல்லாயிரம் மாணவர்களுடைய பல்லாயிரம் கதைகளை நினைவுகளை
உணர்வுகளை சுமந்து பசுமையாய் கம்பீரமாய் காட்சி தந்தது.

இன்று அந்த மரங்கள் இல்லை..
புளியம் விருட்சம் வெட்டப்பட்டுவிட்டது. இன்று நினைவுகளில் எஞ்சியிருப்பது இந்த
மரங்களோடு சார்ந்த அந்த பசுமையான ஞாபகங்கள் மட்டும்தான்.

நீங்களும் இல் பாடசாலை மாணவராக இருந்திருந்தால் இரவுகளில் தனிமைகளில்
நினைத்துப் பாருங்கள் அந்த மரங்கள் உங்களுக்கும் பல கதைகளை நினைவுகளை ஞாபகமூட்டும்.

புளியமரத்தின் சாபமோ என்னவோ வெட்டப்பட்ட நோக்கம் நிறைவேறாமலே கிடக்கிறது.

# நினைத்தாலே இனிக்கும் நினைவு மங்கா காவிம் பாடசாலைப் பருவம்

Mushraf Ameerdeen
Naleemi
BA
LLB (R)

பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இந்த ஆண்டு  தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் எமது மாணவர்களுக்கான இலவசக...
07/09/2024

பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இந்த ஆண்டு தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் எமது மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, நாளை 2024.09.08,காலை 8.00 மணிக்கு எமது பாடசாலையில் நடைபெற உள்ளது.இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றோம்.
வளவாளர் ,திரு S A M சஹாப்தீன் BED,SLPS

Address

Kalawewa

Alerts

Be the first to know and let us send you an email when OBA Kalawewa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share