துமி Thumi

துமி Thumi இனத்தின் இருப்புக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பான பணி....

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, கல்லூரியின் முன்னாள் அதிபரு...
17/12/2025

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக, கல்லூரியின் முன்னாள் அதிபரும் மேலாளருமான லேடி லீலாவதி இராமநாதன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நாளை (18-12-2025) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், கல்லூரியின் பழைய மாணவனும், அகில இலங்கை இந்து மாமன்றத் துணைத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் கலந்துகொண்டு உருவச்சிலையைத் திறந்து வைத்து நினைவுப் பேருரையையும் நிகழ்த்தவுள்ளார்.

இராமநாதன் கல்லூரி வளாகத்தில் இராமநாதன் தம்பதிகள் வசித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லத்திற்கு முன்பாக இந்த உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவிகளின் மிகுந்த முயற்சியினாலும், பங்களிப்பினாலும் லேடி இராமநாதன் அவர்களின் அரும்பணிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

1909ஆம் ஆண்டு முதல் 1953ஆம் ஆண்டு வரை இராமநாதன் கல்லூரி வளாகத்திலேயே தங்கியிருந்து, இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி மற்றும் இராமநாதன் சைவப் பெண் ஆசிரிய கலாசாலை ஆகியவற்றின் மேலாளராகவும், அதிபராகவும் லேடி இராமநாதன் அரும்பணியாற்றியுள்ளார். யாழ்ப்பாணம் சைவ மங்கையர் கழகத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் இருந்து அவர் ஆற்றிய கல்வி மற்றும் சமூகப் பணிகள் என்றும் நினைவு கூறத்தக்கவை.

இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் பதிப்பாசிரியத்துவத்தில் உருவான "கர்மயோகி லேடி இராமநாதன்" எனும் சிறப்பு மலரும் இதன்போது வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

நாவலர் பெருமான் கடிகாரம் ஓடும்முன் ஓடி கணப்பொழுதும் நற்காரியங்களை நிறைவேற்றியவர். நீதி நெறியில் நின்று நேர்மையாக பணி செய...
10/12/2025

நாவலர் பெருமான் கடிகாரம் ஓடும்முன் ஓடி கணப்பொழுதும் நற்காரியங்களை நிறைவேற்றியவர். நீதி நெறியில் நின்று நேர்மையாக பணி செய்தவர். ஒவ்வொரு நிமிடத்தையும் பெறுமதியாக செலவு செய்தவர். சைவமும் தமிழும் நின்று நிலை பெற வேண்டுமென்ற குறிக்கோளோடு இமைப்பொழுதும் செயற்பட்டவர். சேர். பொன் .இராமநாதனை சட்ட மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சிபார்சு செய்தவர். ஆனால் தனக்கு ஒரு பதவியையோ படோபகார வாழ்வையோ தேடாதவர். கால்நடையாகவும், பாய்க்கப்பலிற் பயணம் செய்தும் இரவு பகல் ஓய்வின்றி பாடுபட்டவர். அவர் வாழுங் காலத்தில் எம் சமூகத்திற்கு அவர் பெருமை விளங்கவில்லை.

அன்று மின்சார வசதியில்லை, சீரான போக்குவரத்து வசதியில்லை, ஏடு எழுத்தாணி, மைதொட்டு எழுதும் பேனாக்குச்சி, கடதாசி, கால்களால் இயங்கும் இலுப்பெண்ணை விளக்கு, மிஷனரியின் கெடுபுடி, இவற்றுக்குள்ளும் இம் மனிதன் 75 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, அச்சிட்டு, வெளியிட்டவர் என்றால் வியப்பாகவே இருக்கின்றது. அவர் உயிர் பிரிகின்ற போது அவர் கையால் எழுதிப் புதுப்பிக்காத புத்தகங்கள் ஆறு ஆயத்தமாக இருந்தன. நித்திரையிலும், அவர் நிம்மதியாக இருந்திருக்கமாட்டார். அவர் ஸ்தாபித்த பாடசாலை, ஆசிரியர் வேதனம், அச்சுக்கூட பணி, தன்னை நோக்கி வியாக்கியானம், செய்பவர்களுக்குப் பதில், சில நீதிமன்ற வழக்குகள் இப்பெருமகனைச் சூழ்ந்திருந்தன.

ஆறுமுகநாவலர் அகத்தாலழுத நாட்கள் நிறையவே உண்டு. புற சமயத்தவர்களால் அகம் நொந்ததை விட எம்மவர்களாலேயே அகம் நொந்து வெதும்பிய நாட்களும் உண்டு.

சுயசரித்திரத்தை அவர் எழுதவில்லை. ஆனால் அவரது அகவேதனையை வெளியிட்டிருக்கின்றார். என்னைப் போல் ஒருவர் எதிர்காலத்தில் எம் சமயத்திற்குக் கிடைப்பாரா என்று கவலைப்பட்டுள்ளார். தன் ஆயுள் முடிவதற்கிடையில் தன் சிந்தனையில் எழுந்த விடயங்கள் நிறைவேறுமா என எண்ணிக் கவலைப்பட்டுள்ளார்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் எழுதப்பட்ட “சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்” எனும் நூல் அகில இலங்கை இந்து மாமன்றந்தால் வெளியிடப்பட்டது. அந்த நூலின் ஒரு பகுதி நாவலர் பெருமான் குருபூசையை முன்னிட்டு துமி இதழில் பிரசுரமானது. அதனை வாசிக்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.

https://thumi.org/2025/11/30/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/?fbclid=IwVERTSAOlpoNleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR6kgnuCH47HbhCi5dcZkH6hhf08JC9VTEn_w0ccqBqkkLH2j6n5WqKtN5LhnQ_aem_pIMo-wWHWgFuf3OG_MJjEw

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் எழுதப்பட்ட “சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்” எனும் நூல...

அண்மையில் வீசிய தித்வா புயலினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சீனி (எண்ணிக்கை நூறு) மற்றும்...
01/12/2025

அண்மையில் வீசிய தித்வா புயலினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சீனி (எண்ணிக்கை நூறு) மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உற்பத்தி செய்யப்பட்ட சத்து மா பொதிகள் (எண்ணிக்கை நூறு) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேரடியாக துமி அமையத்தினால் கையளிக்கப்பட்டது.

இந்த மக்கள் பணிக்கு உறுதுணையாக இருந்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

* நாவலரின் இறுதி நிமிடங்கள் * மார்கழி கோலங்கள்* இராவணன் அறிவும் ஆட்சியும் இணைந்த மனித சிந்தையின் மறுமொழி* எமது மண்ணில் ச...
30/11/2025

* நாவலரின் இறுதி நிமிடங்கள்
* மார்கழி கோலங்கள்
* இராவணன் அறிவும் ஆட்சியும் இணைந்த மனித சிந்தையின் மறுமொழி
* எமது மண்ணில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்: யாழ்ப்பாணத்தின் சர்வதேச அங்கீகாரமும் எதிர்கால தேவைகளும்
* அதிகரித்து வரும் துஷ்பிரயோகமும் சிறுவர் பாதுகாப்பு ஓர் பார்வை......
* சென்னைக்கு இலாபமா? ராஜஸ்தானுக்கு நஷ்டமா?

போன்ற பல சுவாரசியங்களின் சுவையோடு துமிக்கிறது துமி மின்னிதழ் 90.0

வாசிக்க...
https://thumi.org/2025/11/30/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-90/
எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ள...
https://chat.whatsapp.com/GYbw0XuQlAJ3xR1e2mYipX

எமது துமி அமையத்தின் ஆரம்ப காலம் முதல் எமக்கு பல வழிகளில் உறுதுணையாக இருப்பதோடு, தொழில்நுட்ப ஆலோசகராகவும் சேவையாற்றுகின்...
14/11/2025

எமது துமி அமையத்தின் ஆரம்ப காலம் முதல் எமக்கு பல வழிகளில் உறுதுணையாக இருப்பதோடு, தொழில்நுட்ப ஆலோசகராகவும் சேவையாற்றுகின்ற பொறியியலாளர் திரு க. சுதாகர் (Suthagar Kailayapathy) அவர்களுடைய தந்தையார் அமரர் வீரகத்தி கயிலாயபதி அவர்கள் 12.11.2025 அன்று இறைபதம் அடைந்தார். அன்னாருடைய இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் 16.11.2025 அன்று இடம்பெறும். அன்னாரின் பிரிவால் துயருற்று உள்ள குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

துமி அமையம்
14.11.2025

09/11/2025

இந்தியாவில் தஞ்சை பெரிய கோயில் சதய விழா அரங்கில், ஈழத்தின் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு திருமுருகன் ஐயாவின் சிறப்பு தமிழக ஆத்மீகவாதிகளாலும், அறிஞர்களாலும், பேச்சாளர்களளாலும் முதமைப்படுத்தப்பட்டிருந்தது. இது சோழ தேசமான தஞ்சையில் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த சிறப்பாகும்.

Aaruthirumurugan Aaruthirumurugan

தஞ்சையில் இராஜராஜ சோழ மகாராசாவின் 1040வது சதய விழாவில் மக்கள் திரளில் கலாநிதி. செஞ்சொற்செல்வர். ஆறு திருமுருகன் ஐயா அவர்...
09/11/2025

தஞ்சையில் இராஜராஜ சோழ மகாராசாவின் 1040வது சதய விழாவில் மக்கள் திரளில் கலாநிதி. செஞ்சொற்செல்வர். ஆறு திருமுருகன் ஐயா அவர்கள் 'ஈழத்திருநாடும் சோழர்களும்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியிருந்தார்.

https://youtu.be/G-muBOyDwZs?si=_9tJF1ht1f9C9qr-

Aaruthirumurugan Aaruthirumurugan தஞ்சாவூர் தஞ்சாவூர் செய்திகள் - Thanjavur News தஞ்சை பெரிய கோவில்

சோழ நாட்டின் பேரரசனாக திகழ்ந்த இராஜ இராஜசோழனுடைய 1040 ஆவது ஆண்டு குருபூசை நாள் சதய விழாவில் தொடர்ச்சியாக இரண்டாவ...

* நூலகங்களை மறந்து விடும் சமுதாயம் உருவானால் பேராபத்து* லண்டன் நகரின் இதயம்...... தேம்ஸ் நதியில் ஒளிரும் கோபுரப்பாலம் * ...
01/11/2025

* நூலகங்களை மறந்து விடும் சமுதாயம் உருவானால் பேராபத்து
* லண்டன் நகரின் இதயம்...... தேம்ஸ் நதியில் ஒளிரும் கோபுரப்பாலம்
* திருச்செந்தூரில் ஆன்மீக முழக்கம் செய்த செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்
* பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதிய தரச் சான்றிதழ்கள் அவசியம்
* கறையானின் கதை
* வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள்
* தற்கொலையிலிருந்து மீண்டெழுவோம்
* இன்றைய திரைப்படங்களும் மக்கள் உளநிலையும்
* மனித வாழ்வில் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு
* உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இரண்டாம் இடம் பிடித்த யாழ்ப்பாணம்
* கத்தாரில் இலங்கை மக்களின் கிரிக்கெட் திருவிழா

போன்ற பல சுவாரசியங்களின் சுவையோடு துமிக்கிறது துமி மின்னிதழ் 89.0

வாசிக்க...
https://thumi.org/2025/10/31/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-89/
எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ள...
https://chat.whatsapp.com/GYbw0XuQlAJ3xR1e2mYipX

சோழ நாட்டின் பேரரசனாக திகழ்ந்த இராஜ இராஜசோழனுடைய 1040 ஆவது ஆண்டு குருபூசை நாள் சதய விழாவில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டா...
28/10/2025

சோழ நாட்டின் பேரரசனாக திகழ்ந்த இராஜ இராஜசோழனுடைய 1040 ஆவது ஆண்டு குருபூசை நாள் சதய விழாவில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சோழச் சக்கரவர்த்தியின் பெருமைகளை பேசுவதற்கு சிறப்பு பேச்சாளராக ஈழத்தில் இருந்து கலாநிதி ஆறு.‌திருமுருகன் ஐயா (Aaruthirumurugan Aaruthirumurugan) அவர்களை அழைத்துள்ளார்கள். பல்வேறுபட்ட இந்திய அறிஞர்கள் கூடும் இந்த நிகழ்வில் "ஈழத் திருநாடும் சோழர்களும்" என்கின்ற தலைப்பில் வரும் சனிக்கிழமை 01.11.2025 அன்று மாலை தஞ்சைப் பெரிய கோயிலில் ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற உள்ளது.

எமது மண்ணில் இருந்து ஒரு குரல் சோழனின் பெருமைகளை சோழனின் கௌரவமாக கருதப்படும் தஞ்சை ஆவுடையார் ஆலயத்தில் பேச இருப்பது எமக்கெல்லாம் பெருமையும் கௌரவமும் ஆகும்.

துமியின் Facebook மற்றும் Youtube (https://youtube.com/?si=h0CSeKyrxQsNEbI9) பக்கங்களில் காணொளி பதிவு செய்யப்படும்.

27/10/2025

ஈழத்தில் இருந்து திருச்செந்தூர் மண்ணில் பதினொராவது தடவையாக சொற்பொழிவு ஆற்ற வந்திருந்த கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் ஐந்தாம் நாள் அன்னதானக் கந்தன் ஆகிய செல்வச்சந்நிதி முருகன் பெருமைகளை ஆழமாக பேசினார்.

கோபுரங்கள் அற்ற, மாடமாளிகைகள் அற்ற, கதவுகள் அற்ற எளிமையான ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வரலாறும் 41 மடங்களோடு அன்னதானம் நடைபெற்ற அற்புதங்களும் திருச்செந்தூர் மண்ணில் கலாநிதி ஆறு. திருமுருகன் ஐயாவால் கூறப்பட்டது.

Aaruthirumurugan Aaruthirumurugan

26/10/2025

கந்தசஷ்டி போன்ற நைமித்திய விரதங்கள் அனுஷ்டிக்கும் நாங்கள் நித்திய விரதங்களான எமது அன்றாட கடமைகள் பலவற்றை செய்யாமல் இருக்கின்றோம். நித்திய விரதங்களின் முக்கியத்துவத்தையும், எவ்வாறு அவற்றை கடைப்பிடிப்பது என்பது பற்றியும், பஞ்ச பூத வழிபாட்டின் அவசியம் பற்றியும் ஆழமான கருத்துக்களை கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்கள் திருச்செந்தூர் மண்ணில் கந்தசஷ்டி பெருவிழாவின் நான்காம் நாள் சொற்பொழிவில் தெளிவுபடுத்தினார்.

விரதத்தின் பெருமைகளை மாறுபட்ட பரிமாணத்தில் ஆராய்ந்த அவரது உரையை திருச்செந்தூரில் முருகன் அடியவர்கள் கேட்டறிந்து கொண்டார்கள்.

Aaruthirumurugan Aaruthirumurugan

26/10/2025

திருச்செந்தூரில் கடல் அலைகள் இடையே பக்தர் அலையின் பதிவுகள் சில....

Address

Jaffna
021

Alerts

Be the first to know and let us send you an email when துமி Thumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to துமி Thumi:

Share