19/12/2023
நாவற்குழி 5 வீட்டுதிட்ட பிரதேசத்தில் தற்போதைய மழை வெள்ளம் காரணமாக 21 குடும்பத்தை சேர்ந்த 66 அங்கத்தவர்கள் அன்னை முன்பள்ளியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உணவு கிராம அலுவலர்கள் மற்றும் அறம் பழகு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.
இன்றையதினம் லயன்ஸ் கழகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகத்தாலும் உணவு வழங்கப்பட்டதுடன் அத்தியவசிய பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இச்சீரற்ற காலநிலை தொடருமானால் இவர்களுக்கான உணவு, தங்குமிடம் என்பனவற்றிக்கு பாரிய நெருக்கடி ஏற்படவுள்ளதால் இவர்களுக்கான உதவியை சமூக ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்கின்றோம்.
-அறம் பழகு அறக்கட்டளை-