09/04/2026
ஒவ்வொரு மனிதனும் அவர்கள் விரும்பும் உடலில் வாழ்வதே உண்மையான சுதந்திரம். திருநர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு உடலில் சிறைப்பட்டிருப்பதை உணர்கிறார்கள். அவர்கள் விரும்பும் அடையாளத்தோடு வாழ அவர்களுக்கு முழு உரிமை உண்டு.
பால்நிலை மாற்று அறுவை சிகிச்சை என்பது வெறும் விருப்பம் அல்ல, அது அவர்களது உடல் மற்றும் உளவியல் ரீதியான அடிப்படைத் தேவை. இந்த உரிமையை சட்டரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பெற்றுத் தருவது ஒரு சமூகமாக எமது கடமையாகும்.
இலங்கை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள பால்நிலை அங்கீகாரச் சான்றிதழ் தொடர்பான வழக்கு, திருநர்களது அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான சூழலில் உள்ளது.
அவர்களது உடலை அவர்கள் தீர்மானிக்கட்டும். அவர்களது அடையாளத்தை அவர்கள் தீர்மானிக்கட்டும். அதற்கு இந்தச் சமூகம் தடையாக இருப்பதைக் களைந்து, அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுப்பது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.