30/03/2026
கைலாசநாதப் பிள்ளையார் திருக்கோவில் திருக்குட முழுக்கு இறை சிவனுக்கு உவந்த பங்குனி உத்திர நன்னாளில் எதிர்வரும் புதன்கிழமை காலை மணி 9.50ற்கும் 11இற்கும் இடைப்பட்ட சுபநேரத்தில் இடம்பெற திருவருள் பாலித்துள்ளது
நீண்ட காலத்தின் பின் இடம்பெறும் ஈழத்தமிழ் இராசதானித் திருக்கோவிலின் இத்திருமுடமுழுக்கு அயலிலுள்ள நல்லூர் மக்களிற்கு மட்டுமன்றி சைவத்தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது
இந்த தருணத்தில் இதற்காக ஒத்துழைத்த வழக்குடன் சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் முதற்கண் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்
இந்த தருணத்தில் நடுநிலை பிரசன்னதுடன் திருப்பணிகளை பூர்த்தி செய்த சமயப்பெரியவர்களுக்கும் அறக்ககொடை தந்த வள்ளல்களுக்கும் கிரியைகள் ஆற்றும் சிவாச்சாரியார்களுக்கும் பணிகளை இரவு பகலாக முன்னெடுக்கும் சிவனடியார் சிவதொண்டர்கள் சிவமங்கையர்கள் அனைவருக்கும் என்றும் இறை சிவனது பூரண திருவருள் கிடைக்கட்டும்
வேண்டுதல் நிறைவேற்றிய இறையருளைப் போற்றி வணங்கும் வகையில் திருக்குடமுழுக்கு அன்று காலை 8 மணிக்கு நல்லை ஆதீனம் அருகிலுள்ள நல்லூர் சிவன் ஆலயத்திலிருந்து திருமுறைகளை ஒதியவாறு பஞ்ச வில்வங்களையும் பஞ்ச கவ்வியங்கள் உள்ளிட்ட அபிடேக திரவியங்களையும் நந்திகொடிக்ளையும் ஏந்தியவாறு சிவசின்னங்களுடன் சைவத்தமிழ் பண்பாட்டு உடையுடன் நடைபவனியாக கலந்து கொள்ள சிவதொண்டர் சிவமங்கையரை அழைத்து நிற்கின்றோம்
இத்தோடு மகா கும்பாபிசேகத்தை ஒட்டிய எம் சைவ அமைப்புக்கள் சார்பான நடுநிலை விடயதானங்களை முடித்து கொண்டு முன்னரான திருக்கோவிலின் நியம நடைமுறைகள் தொடர நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு பங்கம் வராத வகையில் வழிவிடுகின்றோம்
எதிர்காலத்தில் திருக்கோவில் தொடர்பான வழக்குகள் சுமூகமாக நிறைவுற்று அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக திருக்கோவில் பணிகளை முன்னெடுக்க இந்த மனநிறைவான தருணத்தில் கைலாசநாத பிள்ளையாரையும் கைலாசநாதராகிய சிவனையும் பிராரத்தித்து நிற்கின்றோம்
அகில இலங்கை சைவ மகா சபை