19/01/2026
சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..
Effort-96
2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 23 வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லம்.
இன்று அவ்வில்லத்தில் 15 ஆண் பிள்ளைகளும்,25 பெண் பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் அத்தனை பேரும் தாய் தந்தையின் பாசத்தோடும் அரவணைப்போடும் பெற்றோரோடு வாழவேண்டியவர்கள்.
அந்த ஏக்கம் அங்கிருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இருந்தேயாகும்.
இருந்தாலும் சிறுவர் பராமரிப்பு இல்லம் அப்பிள்ளைகளை அரவணைத்து வளர்த்து பராமரித்து வருவது என்பது சாதாரனமான காரியம் இல்ல.
இன்று அப்பிள்ளைகளோடு கனத்த மனதோடு கதைக்கும்,பழகும் வாய்ப்பு எங்கள் குழுவினருக்கு கிடைத்தது.அப்பிள்ளைகள் அத்தனைபேரும் அற்புதமான செல்வங்கள்.
இந்தச் செல்வங்களை படிப்பிக்க வைத்து,தங்கவைத்து,சாப்பாடும் கொடுத்து அன்பாக பராமரித்து வரும் அவ்வில்லத்தின் நிர்வாகத்தினருக்கு கோடான கோடி நன்றிகள்.
//நிர்வாகத்தினரின் அயராத முயற்சியால் கட்டடங்கள் போதியளவு இருக்கிறது.ஆனால்
மிகக் குறைந்த வருமான மூலங்களோடுதான் முடியுமானவரை அப்பிள்ளைகளை அந்நிருவாகம் பராமரித்து வருகிறது.
நிரந்தர வருமான மூலங்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஊஊக்கத்தையும் ஒத்துழைப்புக்களையும் ஏற்கனவே கிழக்கிலங்கை புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு கொடுத்தது போன்று நாம் எல்லோரும் இணைந்து கொடுத்தால்..
கல்வி,விளையாட்டு,போசாக்கான உணவு,ஒழுக்கம் மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் அப்பிள்ளைகளை மேலோங்கச் செய்து மிகத்தரமான சிறுவர் பராமரிப்பு இல்லமாக இவ்வில்லத்தை மாற்றி பெற்றோரோரின் அன்பை இழந்த இந்தச் செல்வங்களை சந்தோசப்படுத்தி இன்பம் காணலாம்.//
இன்று சிறுவர் பராமரிப்பு இல்ல வளாகத்தில் பலன் தரும் பலா,சிகப்புப் பலா,காமரங்கா,புளி,ஜம்போ,மா,முந்திரி போன்ற பல்வகை பலன் தரு மரங்களை நட்டுவித்தோம்.
எங்களோடு இணைந்து அப்பிள்ளைகளும் உற்சாகமாக மரங்களை நட்டு,பாத்தி பிடித்து,நீரூற்றி வேலை செய்தார்கள்.
அவர்களது முகத்தில் அவ்வளவு சந்தோசம் தெரிந்தது.
இம்மரங்களில் இருந்து பயன் பெறுவதற்காக தினமும் நீரூற்றி பராமரிப்போம் என்ற நம்பிக்கையை நம்பிக்கையோடு சொன்னார்கள்.
இதற்கான நிதி உதவியை கட்டார்வாழ் ஓரிரு ஏறாவூர் சகோதரர்கள் இணைந்து வழங்கி இருந்தார்கள்.
Towards clean & greenery Eravur.