National Shoora Council

National Shoora Council National Shoora Council Official Page

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி...
15/04/2026

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது

2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலிருந்து தேசிய ஷூரா சபைக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விதந்துரைகளை முன்வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க தேசிய ஷூரா சபை அதன் நிறைவேற்று குழு செயலகக் குழு மற்றும் சில முக்கிய சிவில் அமைப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று இந்த முன்மொழிவுகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்தது. அது தேசிய ஷூரா சபையின் உறுப்பு அமைப்புகள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டதுடன் அவர்களது அங்கீகாரமும் அதற்காக பெறப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டதாகும்.

அது மாத்திரமன்றி இலங்கையின் முன்னணி உலமாக்கள் சிலருக்கு இந்த முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அவர்களது ஆலோசனைகளும் பெறப்பட்டு இறுதி வடிவத்தை அது பெற்றதுடன் அவர்களது அங்கீகாரமும் அந்த அறிக்கைக்கு கிடைத்துள்ளது. மேற்படி அறிக்கை கடந்த 15.04.2026 அன்று நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.

தேசிய ஷூரா சபையால் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்:

திருமண வயது 18 ஆக நிர்ணயம்:

இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு இணையாக, முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாத்திரம், 16-18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு காழி நீதிபதிகள் குழுவின் அனுமதியுடன் திருமணம் செய்ய முடியும்.

மணமகளின் கையொப்பம் கட்டாயமாக்கல்:

திருமணப் பதிவின் போது மணமகனின் கையொப்பத்துடன், மணமகளும் தனது சம்மதத்தை உறுதிப்படுத்தி கையொப்பமிடுவதற்கான இடம் திருமணச் சான்றிதழில் ஒதுக்கப்பட வேண்டும். இது பெண்களின் சுதந்திரமான தெரிவை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகும்.

பலதார மணத்திற்கு முறையான கட்டுப்பாடுகள்:

இஸ்லாத்தில் பலதாரமணம் செய்து கொள்வதற்கான அனுமதி ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பலதாரமணம் புரிய விரும்பும் ஒருவர், தனது மனைவியர் அனைவரையும் சமமாக நடத்துவார் என்பதற்கான உறுதிப் பிரமாணத்தை(Solemn Declaration) காழி நீதிபதிகள் குழுவிடம் வழங்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் நட்டஈடு கோரும் அதிகாரம் பாதிக்கப்படும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

நவீனமயப்படுத்தப்பட்ட காழி நீதிமன்றங்கள்:

தற்போதைய காழி நீதிமன்ற முறையை மாற்றி, முழு நாடும் ஒன்பது வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒவ்வொரு வலயத்திற்கும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட 'காழி நீதிபதிகள் குழு' அமைக்கப்பட வேண்டும்.இந்த ஐவரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அங்கம் வகிப்பர்.ஆண் ஒருவர் பிரதம காழியாக செயற்படுவதோடு இறுதி தீர்மானத்தையும் எடுப்பார்.இவர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்றி, விவாகரத்து மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பார்கள்.

மேற்படி அறிக்கைக்கு தேசிய ஷூரா சபையின் பின்வரும் முன்னணி முஸ்லிம் சிவில் அமைப்புகள் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.

1. தேசிய ஷூரா சபை

2. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம்

3. அகில பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சங்கம்

4. . இலங்கை மலாய் மக்களின் மாநாடு

5. . ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி

6. . இலங்கை கதீப்கள் மற்றும் முஅத்தின்கள் சங்கம்

7. . ஸலாமா சங்கம்

8. அல்முஸ்லிமாத்

9. இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம்

10. அஹதிய்யா சம்மேளனம்

11. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்

12. சிலோன் முஸ்லிம் வாலிபர் சங்கம்

13. நாம் இலங்கையர் அமைப்பு

இவ்வறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய உலமாப் பெருமக்களது பெயர்கள்:

அஷ்-ஷேக் கலாநிதி M.L. முபாரக் (PhD) - பணிப்பாளர், தாருல் ஹுதா மகளிர் அரபு மற்றும் இஸ்லாமியக் கல்லூரி, மருதமுனை.

அஷ்-ஷேக் M.M.M. கரீம் (நத்வி) - அதிபர், நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி மற்றும் தலைவர், மஜ்லிஸ் ஷூரா – மூதூர்.

அஷ்-ஷேக் மஃஸூக் ஷஜீர் (உஸ்வி) - அதிபர், தாருல் கிராஅத் அரபுக் கல்லூரி, மாபோலை.

அல்-ஆலிமா டாக்டர் மரீனா தாஹா ரிபாய் - ஸ்தாபகத் தலைவி, அல்-முஸ்லிமாத்.

அஷ்-ஷேக் பேராசிரியர் கலாநிதி S.M.M. மஸாஹிர் - பேராசிரியர் (இஸ்லாமிய கலாசாரம்), இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்.

அஷ்-ஷேக் பேராசிரியர் J.D. கரீம்தீன் - பேராசிரியர் (சமூகவியல் கல்வி), இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

அஷ்-ஷேக் S.H.M. பளீல் (BA, MA, MPhil) - சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமியா, பேருவளை.

அஷ்-ஷேக் அல்-ஹாபிஸ் கலாநிதி A.J.M. மக்தூம் (PhD) - உதவிப் பேராசிரியர் (AOP) மற்றும் வருகைதரு விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைக்கழகம்), ஃபத்வா குழு உறுப்பினர் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா).

அஷ்-ஷேக் கலாநிதி ரவூப் ஸெய்ன் (Ph.D) - சிரேஷ்ட ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கல்வியியலாளர்,சிரேஷ்ட விரிவுரையாளர் (FIHE).

அஷ்-ஷேக் M.T.M. ரிஸ்வி (மஜீதி) - BA(Hons), PGDE, CTHE, MA, MPhil, PhD (Rd). சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.

அஷ்-ஷேக் M. ஃபகீஹுதீன் (நளீமி) - BA, செயலாளர் (CDASF), பிரதம நிறைவேற்று அதிகாரி (Life Bond Foundation).

அஷ்-ஷேக் A.M.M. ஆஸாத் (நளீமி) - MA (சூடான்), தலைவர், ஸலாமா அமைப்பு (Salamah Society).

அஷ்-ஷேக் முஹம்மத் சாலி முஹம்மத் தாஸிம் (கஃபூரி) - தலைவர், சிலோன் முஸ்லிம் இளைஞர் சங்கம் (AMYS).

அஷ்-ஷேக் அப்துஸ் ஸமத் முஹம்மத் அக்ரம் (நளீமி, MA)

அஷ்-ஷேக் கலாநிதி M.I.M. சித்தீக் (PhD) - சிரேஷ்ட விரிவுரையாளர், உம்மு தர்தா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, அக்கரைப்பற்று.

அஷ்-ஷேக் கலாநிதி A.P.M. அப்பாஸ் (நளீமி) - PhD (மலேசியா), தலைவர் (தர உறுதிப்படுத்தல் பிரிவு) சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா.

அஷ்-ஷேக் அல்-ஹாபிஸ் கலாநிதி முஹம்மத் இஸ்மத் ரம்ஸி (நளீமி) - சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வி பீடம், மலாயா பல்கலைக்கழகம், மலேசியா.

அஷ்-ஷேக் கலாநிதி L.M. முபீத் - PhD (அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம், எகிப்து). சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் மற்றும் பொருளியலாளர், அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு - கத்தார்.

அஷ்-ஷேக் A.M. ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) - BA, PGDE, M.Ed., Dip in Couns., சிரேஷ்ட ஆலோசகர்.

அஷ்-ஷேக் M.S. அப்துல் முஜீப் (கஃபூரி)

அஷ்-ஷேக் கலாநிதி M.J.M. அரபாத் கரீம் (நளீமி) - தலைவர் (கல்வி விவகாரங்கள்), ஜாமிஆ நளீமியா.

அஷ்-ஷேக் கலாநிதி M.F. முஹம்மத் ஸகீ - உதவிப் பேராசிரியர், அரசறிவியல் மற்றும் மதனீ கற்கைகள் துறை, சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மலேசியா.

அஷ்-ஷேக் M.I. அப்துல் ஜப்பார் (பஹ்ஜி)

அஷ்-ஷேக் முஹம்மத் யூனுஸ் சம்சு தப்ரீஸ் (அஹதி)

அஷ்-ஷேக் நாஹூர் ரஹீம்

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை நெறிமுறைகளை மீறாமல் இஸ்லாத்தின் நெகிழ்ச்சித் தன்மைக்கு ஏற்ப நாட்டின் சட்டதிட்டங்களையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.

-ஊடகப் பிரிவு
தேசிய ஷூரா சபை
15.04.2026

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீஃப் அவர்கள் காலமானார் தேசிய ஷூரா கவுன்சிலின் இரங்கல் செய்திபேராசிரியர் டாக்டர் ரிஸ்வி ஷெரீஃப் அவர...
31/03/2026

பேராசிரியர் ரிஸ்வி ஷெரீஃப் அவர்கள் காலமானார்

தேசிய ஷூரா கவுன்சிலின் இரங்கல் செய்தி

பேராசிரியர் டாக்டர் ரிஸ்வி ஷெரீஃப் அவர்கள் மறைவுற்ற செய்தி எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் அல்லாஹ்வின் அருளை நோக்கி திரும்பிச் சென்றுள்ளார்.

பேராசிரியர் ஷெரீஃப் அவர்கள் வெஸ்டர்ன் மருத்துவமனையின் நிறுவனர் மட்டுமன்றி, சிறந்த இலங்கை கல்வியாளர் மற்றும் மருத்துவராகவும் திகழ்ந்தார். அவர் மருத்துவ முதுநிலை நிறுவகத்தின் இயக்குநராகவும், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவத்தின் மூத்த பேராசிரியராகவும், கிளினிக்கல் மெடிசின் துறையின் தலைவராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். மேலும், ஜெனரல் சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகவும் பணியாற்றியதுடன், இலங்கை தேசிய மருத்துவமனையிலும் சேவை செய்துள்ளார்.

அவரது சிறப்பான தொழில்முறை சாதனைகளுக்கு அப்பாற்பட்டு, அவர் மிகுந்த தாழ்மையும் நற்குணங்களும் கொண்ட மனிதராக இருந்தார். அவரது மென்மையான நடத்தை, ஆழ்ந்த சிந்தனை, உறவுகளில் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றால் அறியப்பட்ட அவர், எந்தப் புகழையும் எதிர்பார்க்காமல், பிறருக்காக அமைதியாக அர்ப்பணித்து வாழ்ந்தார்.

சமூகத்திற்கும் எதிர்கால தலைமுறைகளிற்கும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறை, கல்வியின் மாற்றாற்றலை தொடர்ந்து வலியுறுத்தியதன் மூலம் வெளிப்பட்டது.

தேசிய ஷூரா கவுன்சிலின் உறுதியான ஆதரவாளராகவும் அவர் விளங்கினார். அவரது தர்மங்கள் எப்போதும் எளிமையாகவும் வெளிப்படுத்தாமலும் செய்யப்பட்டவை; இது அவரது நேர்மையையும் தாழ்மையையும் வெளிப்படுத்துகிறது. அவரது இல்லத்தில் நடைபெற்ற ரமழான் காலத்து நிதிசேகரிப்பு நிகழ்வை உட்பட, கவுன்சிலுடன் கொண்டிருந்த அவரது நெருங்கிய தொடர்புகளை நாம் பாசத்துடன் நினைவுகூர்கிறோம்.

அவரது சிந்தனை ஆழம் மிகுந்தது; அவர் தனக்காக மட்டுமன்றி, தனது குடும்பத்தாருக்காகவும் நற்கூலியை நாடியவர் என்பதே மிகவும் சிறப்பான அம்சமாகும்.

மருத்துவத் துறைக்கு அவர் செய்த பங்களிப்புகள் அளவிட முடியாதவை. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அவர் வழங்கிய சிகிச்சையும், பல தலைமுறை மருத்துவர்களுக்கு அவர் வழங்கிய அறிவும் நிலையான பாரம்பரியமாகத் தொடரும். இந்நல்ல செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவரது நற்செயல் தராசில் மிகுந்த பாரமாக அமைய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.

சவாலான காலங்களிலும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விடயங்களில், நீதிக்காக அவர் எடுத்த துணிச்சலான நிலைப்பாட்டையும் நாம் மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.

அல்லாஹ் அவர்களின் குறைகளை மன்னித்து, சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை வழங்கி, அவர் செய்த சேவைகள் அனைத்தையும் நிலையான சதகா ஜாரியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டுகிறோம்.

அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் பொறுமையும் வலிமையும் அருள்புரிவானாக.

இவ்வண்ணம்

தேசிய ஷூரா சபை

31.03.2026

Prof. Rizvi Sheriff Passed away National Shoora Council's condolence message We are deeply saddened by the passing of Pr...
31/03/2026

Prof. Rizvi Sheriff Passed away

National Shoora Council's condolence message

We are deeply saddened by the passing of Professor Dr. Rezvi Sheriff, who has returned to the mercy of Almighty Allah.

Professor Sheriff was the Founder of Western Hospital and a distinguished Sri Lankan academic and physician. He served with great dedication as Director of the Postgraduate Institute of Medicine, Senior Professor of Medicine, and Head of the Department of Clinical Medicine at the Faculty of Medicine, University of Colombo. He also held the position of Senior Professor at General Sir John Kotelawala Defence University and served at the National Hospital of Sri Lanka.

Beyond his exceptional professional accomplishments, he was a man of remarkable humility and grace. Known for his gentle disposition, depth of thought, and sincerity in relationships, he lived a life of quiet distinction serving others selflessly without seeking recognition.

His deep concern for society and future generations was reflected in his consistent emphasis on the transformative power of education.

Professor Sheriff was also a generous and committed supporter of the National Shura Council (NSC). His charitable contributions were often made discreetly, reflecting his sincerity and humility. We fondly remember his close association with the NSC, including a well-organized Ramadan fundraising gathering hosted at his residence.

What stood out most was his thoughtful nature seeking reward not only for himself but also for his family.

His contributions to the field of medicine are immeasurable. The care he extended to thousands of patients and the knowledge he imparted to generations of medical professionals will remain a lasting legacy. We pray that these noble deeds are accepted by Almighty Allah and weigh heavily in his scale of good deeds.

We also recall with respect his courage in standing for justice during challenging times, including his voice on matters affecting the Muslim community.

May Almighty Allah forgive his shortcomings, grant him the highest place in Paradise, and accept all his services as a form of lasting charity.

May Almighty Allah grant patience and strength to his family, loved ones, and all those whose lives he touched.

National Shoora Council

31.03.2026

நம்பிக்கை தரும் ரமழான்தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இல...
18/02/2026

நம்பிக்கை தரும் ரமழான்

தேசிய ஷூரா சபையின் ரமழான் வழிகாட்டல்கள்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை முதற்கண் இலங்கை முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ரமழான் மாதம் வந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை விழித்து: "இதோ ரமழான் மாதம் வந்துவிட்டது. அது ஓர் அருள் நிறைந்த மாதம். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சுவர்க்கத்தின் வாயில்கள் திறந்துவிடப்படும்; நரகத்தின் வாயில்கள் மூடிவிடப்படும்; ஷைத்தான்கள் விலங்கிடப்படுவர். அதில் ஆயிரம் மாதங்களை விட சிறப்பு வாய்ந்த ஓர் இரவு உள்ளது. யார் அவ்விரவின் சிறப்புக்களை இழந்து விடுகிறாரோ அவர் அனைத்து சிறப்புக்களையும் இழந்தவர் போலாவார்." என்று கூறுவார்கள். (அஹ்மத்)

ஒரு தேசம் என்ற வகையில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் ரமழான் மாதம் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் எமக்கு பெற்றுத் தருவதற்கு வருகின்றது. சுய முன்னேற்றம், சமூக மேம்பாடு மற்றும் தேச அபிவிருத்தி ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இச்சந்தர்ப்பத்திலிருந்து உச்ச பயனை அடைந்து கொள்வதற்காக தேசிய ஷூரா சபை அனைத்து முஸ்லிம்களுக்கும் பின்வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க விரும்புகின்றது:

1. கடமையான தொழுகை, நோன்பு ஸகாத் என்பவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் அதேவேளை தர்மம், குர்ஆன் பாராயனம், திக்ர், துஆ, இஸ்திஃபார் போன்ற ஆன்மீக வணக்க வழிபாடுகளிலும் நன்மையான காரியங்களிலும் ஈடுபட வேண்டும். இம்மாதத்தில் செய்யும் நற்கருமங்களுக்கு வருடத்தின் வேறு எந்தக் காலப் பகுதியில் தராத அளவு பன்மடங்கான நன்மைகளையும் கூலியையும் அல்லாஹ் தருகின்றான். எமது அன்றாட விடயங்களை திட்டமிட்டு ஒழுங்குபடுத்துவதுடன் பயனற்ற விடயங்களில் நேரத்தை வீணடிக்காதிருக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக நற்கருமங்களில் ஈடுபடுகின்றோமோ அந்தளவு அதிகமாக அல்லாஹ் எம்மீது திருப்தி கொண்டு எமது கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கிவிடுவான்.

2. ரமழான் அல்குர்ஆனின் மாதம். இது குறித்து அல்லாஹ் புனித அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்: "ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்(நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது". (2:185)

அல்குர்ஆன் அனைத்து மனிதர்களுக்குமான அல்லாஹ்வின் தூதாகும். முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் குணாதிசயங்கள் அல்குர்ஆனின் போதனைகளின் சரியான உருவகமாக அமைந்திருந்தன. எனவே, இம்மாதத்தில் வாழ்வின் அனைத்து துறைகளிலும் எமக்கு வழிகாட்டும் இறைவேதத்தின் போதனைகளின் பிரதிபலிப்பாக எமது செயற்பாடுகள் அமைவதன் மூலம் இஸ்லாத்தின் அழகிய தூதை பிற மதத்தினருடன் பகிர்ந்து கொள்ளக்கூடியதாய் இருக்கும்.

3. ரமழானின் இரவுப் பொழுதுகளில் எமது உணவுப் பழக்கவழக்கங்கள் சுகவாழ்வு மற்றும் தேகாரோக்கியத்துக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டும். உணவில் வீண் விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்க்க வேண்டும். சுகாதார நிபுணர்கள் எமக்குத் தரும் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நாம் பின்பற்ற வேண்டும். தேவையற்ற மற்றும் ஆடம்பரமான இஃப்தார்களில் இருந்து விலகி, ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.விதவிதமான உணவுகளுக்கான விளம்பரங்களும் அவற்றிற்கான விற்பனை உத்திகளும் இந்த ரமலானில் கையாளப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.அவற்றைத் தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அத்துடன் தினசரி உணவுக்கு வழியின்றி தவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே அதிகமதிகம் தர்மம் செய்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

4. முஸ்லிம்கள் ரமழான் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் போது மற்றவர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவில் வெகுநேரம் பொது இடங்களில் ஒன்றுகூடுவதும், சுற்றித் திரிவதும், தெருக்களில் விளையாடுவதும், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும், சஹர் நேரத்தில் அதிக ஒலியுடன் வானொலி கேட்பதும் சில உதாரணங்களாகும். இவ்விடயத்தில் பெற்றோர்கள், இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுரை வழங்கி வழிகாட்ட வேண்டும்.

5. ஒழுக்கக்கேடான நடத்தைகளாலும், பாவச் செயல்களாலும் எமது நோன்பைக் கெடுத்துக் கொள்ளாமல், ரமழான் மாதத்தின் நன்மைகளை இழந்து விடாமல் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவன் பொய்யையும் பொய்யின் அடிப்படையிலான நடத்தையையும் விட்டுவிடவில்லையென்றால், அவன் உணவையும் பானத்தையும் தவிர்ந்திருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.” (அல்-புகாரி).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள், “உங்களில் எவரேனும் ஒரு நாளில் நோன்பு நோற்கும்போது, அவர் ஆபாசமான வார்த்தைகளில் ஈடுபடவோ அல்லது கூச்சலிடவோ கூடாது; யாரேனும் அவரைத் தூற்றினால் அல்லது அவருடன் சண்டையிட முயற்சித்தால், 'நான் நோன்பு நோற்றிருக்கிறேன்' என்று கூறி ஒதுங்கிவிட வேண்டும்." (புகாரி, முஸ்லிம்)

6. ரமழான் மாதத்தில் மகத்தான வெகுமதிகளைப் பெறக்கூடிய புண்ணிய செயல்களான சமூக மேம்பாடு, சமூக நலன் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், மத நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய அல்லது தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருக்குமாறும் முஸ்லிம் சமூகத்தை தேசிய ஷூரா சபை கேட்டுக்கொள்கிறது.

அல்லாஹ்வின் அருளால் இந்த ரமழான் மாதம்,எல்லாப் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் கடந்து, நமக்குள்ளும், நம் குடும்பத்திலும், சமுதாயத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாய் அமையட்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ரமழான் மாதத்தின் நன்மைகளைப் பூரணமாக அறுவடை செய்ய உதவுவானாக; நமது நற்கருமங்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வானாக; எமது தேசத்தை அமைதியும் செழிப்பும் உடையதாக மலரச் செய்வானாக!

தேசிய ஷூரா சபை

18.02.2026

அனர்த்த நிலை குறித்த தேசிய ஷூரா சபையின் அறிக்கைஇலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவ...
30/11/2025

அனர்த்த நிலை குறித்த தேசிய ஷூரா சபையின் அறிக்கை

இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேசிய ஷூரா சபை தனது ஆழமான அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

வரலாறு காணாத கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் நூற்றுக்கணக்கானவர்கள் மரணித்துள்ளனர். பலரும் காணாமல் போயுள்ளனர். இலட்சக் கணக்கான குடும்பங்கள் தமது இல்லிடங்களை இழந்து இடப்பெயர்ந்துள்ளன. அகதி முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் பலர் தங்கியிருக்கிறார்கள். வாழ்வாதாரங்கள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த இக்கட்டான, கஷ்டமான தருணத்தில் தேசிய ஷூரா சபை மரணமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதுடன், காயமடைந்தவர்கள், சொத்துக்களை இழந்தவர்கள், துன்பப்படுபவர்கள் அனைவருக்கும் மனதைரியமும் பொறுமையும் கிடைக்க வேண்டும் என வல்லவன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறது.

அத்துடன் பேரழிவுகளின் போது சமூகத்தில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாம் வலியுறுத்தியுள்ள அம்சங்களை அனைவரும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் இந்நேரத்தில் ஷுரா சபை வேண்டிக் கொள்கிறது.

அனர்த்தங்கள் அல்லாஹ்விடமிருந்து வரும் சோதனை(இப்திலா)களாகும். அவை இந்த உலகின் தற்காலிக தன்மையையும், இரக்கமாகவும் பரஸ்பரம் ஒற்றுமையாகவும் வாழ்வதன் முக்கியத்துவத்தையும் மனித குலத்திற்கு நினைவூட்டுகின்றன.

அல்லாஹ் ﷻ : 'நிச்சயமாக அச்சம், பசி, செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைபொருட்களில் சிலவற்றை குறைப்பது ஆகியவற்றைக் கொண்டு நாம் உங்களைச் சோதிப்போம். ஆனால், பொறுமையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக!' (அல்குர்ஆன் 2:155) எனக் கூறுகிறான்.

துன்ப காலங்களில், முஸ்லிம் சமூகம் ஒற்றுமை, கருணை மற்றும் பரஸ்பர ஆதரவை வலுப்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் ﷺ போதித்தார்கள். துயரப்படுவோரைப் பராமரிப்பது மிகச் சிறந்த வணக்கச் செயல்களில் ஒன்றாகும்.

அரசாங்கமும் பணிகளும்

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் அரசாங்கம் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு இனமத, கட்சி, கொள்கை பேதமின்றி அனைவரும் ஆதரவளித்து, இத்துன்பியல் நிகழ்விலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிக்க பாடுபடுமாறு தேசிய ஷுரா சபை மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்களையும் உதவிகளையும் இழப்பீடுகளையும் உரிய கிராம சேவகர்களை அணுகி, முறையான பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் அவற்றை பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறும் மேலும் மக்களை சூரா சபை வேண்டிக் கொள்கிறது.

சமூகமும் நன்கொடையாளர்களும்

சமூகத்தின் அனைத்து உறுப்பினர்கள், நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இஸ்லாமிய மற்றும் மனிதாபிமான கடமைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்வரும் வகைகளில் ஆதரவுக் கரம் நீட்டும் படி தேசிய ஷூரா சபை பணிவாக வேண்டிக் கொள்கிறது.

1. உடனடி நிவாரண உதவி

- உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், சமைத்த உணவு மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களை வழங்குதல்.

- ஆடை, படுக்கை, மருந்து மற்றும் சுகாதாரப் பெட்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல்.

- வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் உதவுதல்.

2. அனர்த்த நிவாரணத்திற்கான ஸகாத்

- வீடுகள், சொத்துக்கள், வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்கள் ஸகாத் உதவிக்கு தகுதியுடையவர்களாவர்கள்.

- ரமழானில் கொடுப்பதற்கென்று வைத்திருந்த ஸகாத்தை இப்போதே முன்கூட்டியே கொடுக்க முடியும்.

- செல்வந்தர்கள் தமது ஸகாத்தின் ஒரு பகுதியை அவசர நிவாரணத்திற்காக ஒதுக்க முடியும்.

3. ஸதகா(தர்மம்) மற்றும் பொது நன்கொடைகள்

இவற்றின் மூலம் தன்னார்வ நிறுவனங்கள் பின்வருவனவற்றுக்கு பெரிதும் உதவலாம்:

- அவசர உணவுப் பொதிகள்
- தற்காலிக தங்குமிடம்
- மருத்துவ ஆதரவு
- சுத்தம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள்

4. மஸ்ஜிதுகளை மையப்படுத்திய சமூக ஆதரவு

பள்ளிவாசல்கள் மற்றும் சமூகக் குழுக்கள் பின்வருவனவற்றைச் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன:

- சேகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்

- மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டறிதல்

- இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண மையங்களாகச் செயல்படுதல்

- கள உதவிக்காக இளைஞர் தொண்டர்களை அணிதிரட்டுதல்

5. நீண்டகால திட்டம்

உடனடி ஆபத்து நிலை குறைந்தவுடன், நன்கொடையாளர்களும் நிறுவனங்களும் நீண்ட கால திட்டங்களாக பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

- சேதமடைந்த வீடுகளை சீரமைத்தல்
- வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல்
- பாடசாலைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பொருட்களை வழங்குதல்
- தேவைப்படும் இடங்களில் உளவியல் ஆலோசனைகளை வழங்குதல்
- இரக்கம், பொறுமை மற்றும் பிரார்த்தனையை ஊக்குவித்தல்.

அனைவருக்காக பட்சாதாபப்பட்டு, ஒற்றுமை மற்றும் தாராள மனப்பான்மையுடன் செயல்படும்படி ஷூரா சபை அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

இயற்கைப் பேரழிவுகள் நமது மனிதநேயத்தையும், இனம், மதம் பாராமல் துயரத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் இஸ்லாமிய கடமையையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

நாட்டிற்கான பிரார்த்தனை

'யா அல்லாஹ், இலங்கை மக்களை மேலும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாயாக. காயமடைந்தவர்களை குணப்படுத்துவாயாக. மேலும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிப்பாயாக. அவர்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க உதவி செய்வாயாக. எங்கள் தேசத்தை பாக்கியமான பூமியாக மாற்றுவாயாக. இரக்கம் மற்றும் நேர்மையுடன் எங்கள் இதயங்களை ஒன்றிணைப்பாயாக!'

ஆமீன்!

இவ்வண்ணம்
ஊடகப்பிரிவு
தேசிய ஷூரா சபை

30.11.2025

National Shoora Council Statement on the Current Disaster Situation in Sri LankaThe National Shoora Council expresses it...
30/11/2025

National Shoora Council Statement on the Current Disaster Situation in Sri Lanka

The National Shoora Council expresses its deepest condolences to all those affected by the cyclone, severe floods, and landslides that have occurred across many parts of Sri Lanka.

Following unprecedented heavy rainfall and cyclone conditions, these disasters have claimed hundreds of lives. Many people are still missing. Hundreds of thousands of families have been displaced after losing their homes. Many are currently staying in refugee camps or in the homes of relatives. Livelihoods and essential infrastructure have suffered severe damage.

At this difficult and challenging time, the National Shoora Council prays for those who have passed away and prays that strength and patience be granted to all who are injured, bereaved, displaced, or suffering due to this calamity.

The Shoora Council urges everyone to reflect upon and act according to the common religious, ethical, and humanitarian principles that emphasise compassion, solidarity, responsibility, and care for one another during times of crisis.

Disasters are considered tests (Ibtilā) from Allah. They remind humanity of the temporary nature of this world and the importance of living with compassion, unity, and mutual support.

Allah ﷻ says: _“And We will surely test you with something of fear, hunger, loss of wealth, lives and fruits; but give glad tidings to the patient.”_ (Qur’an 2:155)

During times of hardship, the Prophet ﷺ taught that the Muslim community must strengthen unity, compassion, and mutual support. Caring for the distressed is among the most virtuous acts of worship.

Community and Donors

The National Shoora Council humbly appeals to all community members, institutions, and donors to extend their support to those affected as part of their religious, moral, and humanitarian responsibility.

1. Immediate Relief Assistance

- Provide dry rations, drinking water, cooked meals, and safe shelter.

- Supply essential items such as clothing, bedding, medicine, and hygiene kits.

- Assist in rescuing those trapped and transporting families to safer locations.

2. Zakat for Disaster Relief

- Families who have lost homes, property, and livelihoods qualify for Zakat assistance.

- Zakat set aside for Ramadan may be given in advance at this time.

- The wealthy are encouraged to allocate a portion of their Zakat to emergency relief efforts.

3. Sadaqah (Charity) and General Donations

Through these contributions, charitable organisations can support:

- Emergency food packs

- Temporary shelter

- Medical assistance

- Cleaning and rebuilding efforts

4. Mosque-Based Community Support

Mosques and community groups are encouraged to:

- Coordinate collection and distribution activities

- Identify the most affected families

- Serve as relief centres for displaced individuals

- Mobilize youth volunteers for field assistance

The NSC requests that all emergency relief efforts are coordinated with the local authorities, including the offices of the Divisional Secretaries and Grama Niladaries to ensure maximum effectiveness.

All affected families are advised to register their details with the relevant authorities.

5. Long-Term Planning

Once the immediate danger has reduced, donors and institutions may undertake long-term initiatives such as:

Repairing damaged houses

Rebuilding livelihoods

Providing school books and supplies for affected children

Offering psychosocial counselling where needed

Promoting compassion, patience, and prayer

The Shoora Council calls upon everyone to act with compassion, unity, and generosity.

Natural disasters remind us of our shared humanity and our duty to support anyone in distress, regardless of race or religion.

Prayer for the Nation

“O Allah, protect the people of Sri Lanka from further harm. Heal the injured. Bring relief to those in hardship. Help them rebuild their homes and livelihoods. Make our country a blessed land. Unite our hearts with mercy and righteousness.”_

Aameen!

Issued by the Media Division

National Shoora Council

30.11.2025

கல்விச் திருத்தம் சம்பந்தமான 2026 – தேசிய ஷூரா சபையின் பரிந்துரைகள்2026 ஆம் ஆண்டு அமுலுக்கு வரவிருக்கும் அரசின் கல்விச் ...
18/11/2025

கல்விச் திருத்தம் சம்பந்தமான 2026 – தேசிய ஷூரா சபையின் பரிந்துரைகள்

2026 ஆம் ஆண்டு அமுலுக்கு வரவிருக்கும் அரசின் கல்விச் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை உள்ளடக்கிய ஆவணமொன்றைத் தயாரிக்கும் பணியை தேசிய ஷூரா சபை (NSC) மேற்கொண்டுள்ளது. இதற்காக அது 2025 ஆகஸ்ட் 23ஆம் திகதி விஷேட கலந்தாய்வு மன்றமொன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த விசேட அமர்வில் கல்வித் துறையோடு தொடர்பான துறை சார்ந்த பலர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கும் முழுமையான பரிந்துரைகளை உருவாக்கும் நோக்கத்தில் அந்த அமர்வின் போது, கொழும்பு சாஹிரா கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரிக்கார் அவர்களது தலைமையில் ஒரு விஷேட செயலணி நியமிக்கப்பட்டது.

அந்த செயலணி பல அமர்வுகளை நடத்தி, விரிவான மற்றும் சீரமைக்கப்பட்ட பரிந்துரை ஆவணம் ஒன்றைத் தயாரித்தது. இந்த ஆவணம் , 2025 அக்டோபர் 30 அன்று தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது (ExCom) சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது சில கூடுதல் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதனால், அவை பின்னர் செயலணியால் மதிப்பீடு செய்யப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்டன.

அதன்பின், 2025 அக்டோபர் 27 அன்று, ஷூரா சபை பிரதமரான கல்வியமைச்சருக்கு கடிதம் அனுப்பி, இந்த பரிந்துரைகளை நேரில் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்குமாறு கோரியதுடன் 2025 நவம்பர் 8 அன்று, இந்த விரிவான ஆவணம் அதிகாரபூர்வமாக பிரதமருக்குத் தபாலிலும் அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், 2025 நவம்பர் 15 அன்று, ஷூரா சபையின் விஷேட செயலணி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புகளது மன்றத்திலும் இவ்வாவணத்தை சமர்ப்பித்தது.

NSC’s Recommendations on Educational Reform – 2026

The National Shoora Council (NSC) initiated the process of drafting recommendations for the forthcoming Educational Reform 2026 through a Consultative Forum held on 23rd August 2025

Following the forum, the NSC appointed a Task Force under the leadership of Mr. Trizviy Marikkar, Principal of Zahira College, Colombo, to formulate comprehensive proposals that reflect the views and aspirations of the Muslim community.

The Task Force held a series of structured discussions and working sessions, resulting in a detailed set of recommendations. The final draft was presented to the NSC Executive Committee (ExCom) on 30th October 2025, during which additional suggestions were made. These inputs were later reviewed and incorporated into the document by the Task Force.

Subsequently, on 27th October 2025, the NSC formally wrote to the Hon. Prime Minister and the Minister of Education, requesting an opportunity to present the proposals.

On 8th November 2025, the final comprehensive document was officially dispatched to the Prime Minister’s Office.

Further, on 15th November 2025, the NSC Task Force presented the document at a forum held at the All Ceylon Jamiyyathul Ulama (ACJU) Headquarters, where various Muslim Civil Society organisations were also present. NSC's proposals were accepted.

This marks the significant journey of the NSC’s engagement and contribution to the national dialogue on shaping Educational Reform 2026.

02/09/2025

கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு தேசிய ஷூரா சபை அனுப்பியுள்ள கடிதம்

பிரதமரும் கல்வி உயர் கல்வி தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு தேசிய ஷூரா சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

கல்விக் கொள்கையை வகுத்தல் தொடர்பான நிபுணத்துவ அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்திற்கான நியாயமான பிரதிநிதித்துவத்தை கோரி அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

இலங்கையின் 2026-ஆம் ஆண்டுக்கான கல்வி சீர்திருத்தக் கொள்கையை வடிவமைக்கும் கல்வி தொடர்பான கொள்கை வகுக்கும் அமைப்புகளில் முஸ்லிம் சமூகத்திற்கு நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க விரும்புகிறோம்.இது நியாயம், சமத்துவம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் ஆணிவேரைப் பாதிக்கும் விடயமாகும்.

இலங்கையின் அரசியலமைப்பானது எமது நாட்டை பல்மத, பல்கலாசாரப் பின்னணி கொண்ட பிரஜைகளை உள்ளடக்கிய நாடாக அங்கீகரித்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மேலும், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் ஒவ்வொரு தனிநபருக்கும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம் ஆகியவற்றை வழங்குவதோடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மதம் அல்லது நம்பிக்கையை வழிபாடு, கடைப்பிடித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் கற்பித்தல் மூலம் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது.

அரசு கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (Directive Principles of State Policy) அமுல்படுத்தப்பட முடியாதவையாக இருப்பினும், நாட்டின் உயர் நீதிமன்றங்களால், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வழிநடத்த வேண்டிய நியாயத் தன்மைக்கான தரநிலைகள் அல்லது விதிமுறைகள்' என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், கல்வி தொடர்பான அனைத்து முக்கிய நிறுவனங்களிலும், குறிப்பாக சீர்திருத்தங்கள் தொடர்பானவற்றில், முஸ்லிம் கல்வியாளர்கள், கல்வியியல் வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிசெய்ய உங்களது அவசரத் தலையீட்டைக் கோருகிறோம்.

தேசிய அபிவிருத்திக்கு கல்வி ஒரு அடித்தளமாக உள்ளது. மேலும், நமது பல்லின மற்றும் பல்மத நாட்டில் சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாகவும் இது உள்ளது.

எனவே, இத்தகைய ஒரு பெரிய சீர்திருத்தம் இலங்கையின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இருப்பினும், வரவிருக்கும் மாற்றங்ககள் முக்கியமானவையாக இருந்தபோதிலும், தற்போதைய நியமனங்களில் ஒரு முக்கிய இடைவெளி காணப்படுகிறது:

தேசிய கல்வி ஆணைக்குழு (NEC): 15 உறுப்பினர்கள், முஸ்லிம் கல்வியாளர்கள் எவருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை.

தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) கல்வி விவகாரங்கள் சபை: 15 உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) சபை: 11 உறுப்பினர்கள், ஒரே ஒரு முஸ்லிம் தொழிலதிபர் மட்டுமே உள்ளார், முஸ்லிம் கல்வியாளர்கள் எவருக்கும் பிரதிநிதித்துவம் இல்லை.

உத்தேச கல்விச் சபை வரைவுக் குழு: 9 உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

தன்னார்வ ஆலோசனை சபை (கல்வி அமைச்சு): 14 உறுப்பினர்கள், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை.

இந்த அமைப்புகளில் இருந்து முஸ்லிம் சமூகம் விலக்கப்பட்டிருப்பது, இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 10% உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு, கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சீர்திருத்தங்களில் ஒரு குரல் கூட இல்லை என்பதைக் காட்டுகிறது.

இத்தகைய புறக்கணிப்பு, முக்கியமான கலாச்சார, மொழி மற்றும் மத கண்ணோட்டங்களை கவனிக்காமல் விடுவதோடு மட்டுமல்லாமல், நமது தேசம் ஒற்றுமையையும் நியாயத்தையும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் சமத்துவமின்மை பற்றிய ஒரு கவலையான சமிக்ஞையையும் அனுப்புகிறது.

இந்த புறக்கணிப்பின் விளைவுகள் பாரதூரமானவை என்பதை நாம் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

1. நம்பிக்கை இழப்பு: இந்த சீர்திருத்தங்களில் தங்களுக்கு இடமில்லை என உணரும் சமூகங்கள் அவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியாது.

2. கொள்கை குறைபாடுகள்: முஸ்லிம் கல்வியாளர்கள் இல்லாமல், அனைத்து தரப்பு மாணவர்களின் உண்மையான தேவைகளுக்கு இந்த சீர்திருத்தங்கள் பதிலளிக்கத் தவறிவிடும்.

3. தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்: கல்வி எம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிளவு மற்றும் அந்நியப்படுத்தலை உருவாக்கக் கூடாது.

எனவே, இவ்விடயம் தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்று விநயமாய் வேண்டிக்கொள்கிறோம்:

அ. தேசிய கல்வி ஆணைக்குழு (NEC), தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) சபை, கல்வி விவகாரங்கள் சபை மற்றும் பிற சீர்திருத்தம் தொடர்பான குழுக்களில் தகுதிவாய்ந்த முஸ்லிம் கல்வியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

ஆ. கல்வி நிர்வாகத்தில், குறிப்பாக 2026 சீர்திருத்த செயல்முறையின் போது, அனைத்து முக்கிய சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் ஒரு பரிபூரணக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இ. கடந்த காலத்தில் ஏற்பட்ட அந்நியப்படுத்தல்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் (UNHRC) முடிந்து, இந்தத் நாட்டை வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு உட்படுத்தியதைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமையைத் தவிர்க்க, அனைத்துத் தரப்பினரும் நியாயமான மற்றும் உரிய முறையில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதை உறுதிசெய்யும் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை சமத்துவம் மற்றும் ஒற்றுமைக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

2026 ஆம் ஆண்டு சீர்திருத்தம் இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. எந்தவொரு சமூகமும் முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து விலக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்வதன் மூலம், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நியாயத்தை வலுப்படுத்திய ஒரு சீர்திருத்தமாகவும் இது நினைவுகூரப்பட வேண்டும்.
இந்த சீர்திருத்த செயல்முறை அனைத்து இலங்கையர்களின் பகிரப்பட்ட அபிலாஷைகளை உண்மையாகப் பிரதிபலிப்பதற்காக, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்

எம். எம். ஸுஹைர், ஜனாதிபதி சட்டத்தரணி, (தலைவர்,தேசிய ஷூரா சபை)

ரஷீத் எம். இம்தியாஸ், சட்டத்தரணி, பொதுச் செயலாளர் தேசிய ஷூரா சபை

29/08/2025

Address

77, Dematagoda Road, Colombo 09
Colombo
000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 13:00

Telephone

0114546564

Alerts

Be the first to know and let us send you an email when National Shoora Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Shoora Council:

Share