15/10/2025
கடந்த 12.10.2025 திகதி அன்று மட்/ செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கக்கோவை வலுவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் திரு க.சுவர்ணேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்கள் ஒழுக்கத்தைப் பேணுதல் , நேர்த்தியான சீருடை அணிதல் , பாடசாலைக்கேற்ற தலைமுடி , போதைப்பொருள் பாவனையை எவ்வாறு தவிர்ப்பதும் , சமூக ஊடகங்களின் ஆதிக்கம் மாணவர்களின் அடுத்த கட்ட கல்வி மேம்படுத்தல் தொடர்பாகவும் அதிகம் பேசப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக்கோவையினை வலுப்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் கல்குடா கல்வி வலயம், பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் திணைக்களம், சுகாதார பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள் மற்றும்
பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க நிருவாக குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மதகுருமார்கள், வர்த்தகர் சங்கம், சிகை அலங்கார கடை உரிமையாளர்கள் சங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு இத்தீர்மானங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கினார்.