22/04/2026
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
------------------------------------------------------------------------
வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் பண்டாரவளை, கோலத்தென்ன எனும் கிராமத்தில் வசிக்கும் மூன்று (3) மாணவர்களின் பாடசாலை புத்தகங்கள், சீருடை உட்பட அனைத்து கற்றல் உபகரணங்களும் முற்றிலும் தீக்கிரை ஆக்கப்பட்டு சேதமடைந்து உள்ளதாகவும் அவற்றை பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறும் எமது அமைப்புக்கு ஒரு சகோதரர் விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்க Aid for Humanity இன் நல் உள்ளம் கொண்ட நண்பர்களின் உதவியுடன் 21/04/2026 அன்று அவர்களுக்கு தேவையான அனைத்து கற்றல் உபகரணங்களையும்
வழங்கி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 💖
எமது சக்திக்குட்பட்ட வகையில் இறைவனுக்காக இத்தகைய சமூக நலப்பணிகளை தியாக உள்ளங்கொண்ட சகோதரர்கள், தனவந்தர்களின் பங்களிப்புடன் எமது அமைப்பினூடாக நாம் செய்து வருகிறோம்.
உதவி செய்யும் தாராள உள்ளம் படைத்தோர் எமது அமைப்பினூடாக இதேபோன்று கஷ்ட நிலையில் வாடும் உறவுகளுக்கு உங்களது உதவிகளை வழங்கலாம். 🤲
உங்களோடு இணைந்து செயற்பட என்றும் நாம் தயாராயுள்ளோம்.
ஏழைகளின்
துயர் துடைக்க
இதயத்தால்
இணைந்திடுவோம்
077 222 0456
- நிருவாகம்.