Royal Youths

Royal Youths Vision
Empowering and uniting socially like-minded youth. And whoever saves one – it is as if he had saved mankind entirely.

Mission
Implement education, cultural values, and address the needs of society through empowering youth. Royal Youths
When the youths of our society lives in an imaginary world but some raised their hands for the rights of the society, to give hands to the poor and needy, unravel the hunger, provide permanent peaceful life, to present the dream of a poor children which is the education and to conv

ey that these are the rights of them, where some hearts joint together as a power in the name Royal Youths. Holy Quran (5:32)

Youths are the backbone of a society.A few young men who educated, decent, competent, community -minded and helpful attitude joint together and created Royal Youths. At the start they joined together to erect a library on 2012 at Pallikudiyiruppu. Alhamdulillah it’s still alive since four years with the same power and energy inside Akkaraipattu as well as other districts even given the full support to the foreign living Muslims up to their extent. The one and only Royal Youths organization gathered youths together in the tone of “unity is our strength," by breaking the political leanings, social divisions, forgetting the differences etc. The aim of royal youths is to generate a society of contemplative social minded young people not only in Akkaraipattu but also whoever interested in the progress of society wherever they are. There are about more than a hundred members and has made a series of major projects till now. To help poor, orphans, the elderly, education for the poor, helping to raise awareness in the community and to execute the community's essential need. These are the only works done by Royal Youths with the grace of ALLAH AZZA WAJAL

ரோயல்யூத்ஸ்
“பிறர்வாடப் பல செயல்கள் செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிரையெனப்பின்மாயும் பலவேடிக்கை மனிதரைபோல் நாம் வீழ்வோம் என நினைத்தாயோ??”

இளமை பருவத்தின் வயதினர் உலகமாயைகளில் வீழ்ந்துகிடக்க சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வீழ்ந்துகிடக்கும் ஏழைகளை கை கொடுத்து எழுப்ப, ருசி அறியா பல வயிறுகளின் பசி தீர்க்க, நிம்மதியான வாழ்வை நிரந்தரமாக்க, கல்வி எனும் கனவை காணும் ஏழைச்சிறுவர்களை கல்வி அவர்களின் உரிமை என்பதை உணர்த்த உதயமானது சில உள்ளங்கள் இணைந்து ரோயல்யூத்ஸ் என்னும் சக்தி.

“யார் ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனை வாழவைக்கிறானோ அவன் இவ்வுலக சமுதாயத்தை வாழவைத்தவன் ஆவான்:” – அல்குர்ஆன்

ஒரு சமூகத்தின் முதுகெலும்பு இளைஞர்கள் ஆகும். இந்த இளைஞர்கள் என்னும் கற்றறிந்த, நற்பண்புகள்மிக்க, திறமையான, சமூகசிந்தனை கொண்ட, உதவிமனப்பான்மை நிறைந்த சிலவாலிபர்களின் கூட்டு ஒன்று சேர்ந்து உருவாக்கம் பெற்றதே ரோயல்யூத்ஸ்.....

2012ஆம் ஆண்டு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய நூலகத்தினை அமைக்கும் பொருட்டு ஒன்றிணைந்து சில இளைஞர்களின் அமைப்பு அல்ஹம்துலில்லாஹ்

இன்று வரை சுமார் ஐந்தாவது வருடத்திலும் அதே சக்தியோடு அக்கரைபற்றில் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் ஏன் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கும் தம்மால் முடிந்த முயற்சிகளை திறம்பட அல்லாஹ்வின் உதவியோடு இஹ்லாசோடு செய்து வருவது ரோயல்யூத்ஸ்ஆகும்...

அரசியல்சார்புகளை உடைத்து, சமூகபிரிவுகளை களைந்து, வேறுபாடுகள் மறந்து “ஒற்றுமையே எமது பலம்” என்னும் தொனியில் ஓர் இளைஞர் படையாக உருவெடுத்து வலம் வருவது ரோயல்யூத்ஸ் அமைப்பாகும்.

அக்கரைப்பற்று பிரதேசத்தின் இளைஞர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள அனைத்து வாலிபர்களையும் ஒன்றினைத்து ஒரு சிந்தனைமிக்க, சமூகபற்றுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே ரோயல்யூத்ஸ் இன்நோக்கம்.

இன்று சுமார்நூற்றுக்கும் அதிகமான வாலிபர்களை அங்கத்தவர்களாக கொண்டு பாரிய செயற்திட்டங்கள் பலவற்றையும் செய்து கொண்டுவருகின்றது.

வறிய மக்களுக்கான உதவி, அனாதைகள், முதியோர்கள், ஏழைகளின் கல்விக்கான உதவி, சமூகத்தில் உள்ள தவிர்க்கப்பட வேண்டியவற்றின் விழிப்புணர்வு எனச மூகத்தின் இன்றியமையாத தேவைகளை மாத்திரம் செய்து கொண்டு செல்வதுதான் ரோயல்யூத்ஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூபுனிதம் மிக்க ரமழான் மாதத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், க...
26/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

புனிதம் மிக்க ரமழான் மாதத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் எமது மூத்த உடன்பிறப்புகளுக்காக இஃப்தார் மற்றும் சஹர் உணவு ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஒரு நற்காரிய முயற்சியை Royal Youths அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!

குடும்ப ஆதரவு இன்றி, உடல்நலக் குறைபாடுகளுடன், பராமரிப்பு தேவையுடன் வாழும் இந்த முதியவர்கள் ரமழான் மாதத்தில் அமைதியாகவும் மரியாதையுடனும் நோன்பை நிறைவேற்றிட தேவையான உணவு வசதிகளை ஏற்பாடு செய்வது எமது பொறுப்பாகும்.

இம்முறை உணவுப் பொருட்களின் விலை உயர்வினால், ஒரு நாள் உணவு செலவுகள் பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளது:

🔹 இஃப்தார் (ஒரு நாள்) – ரூபாய் 8,000/-
🔹 சஹர் (ஒரு நாள்) – ரூபாய் 12,000/-

இந்த புனித மாதத்தில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்குவது மிக உயர்ந்த நற்காரியம். முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெரியவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்கோ அல்லது உங்களால் இயன்ற அளவிலோ பங்களித்து இந்த நற்செயலில் பங்கேற்கலாம்.

ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் வழங்கும் நன்மை, அவர் பெற்ற நன்மைக்கு இணையானது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ரமழானில் அந்த நன்மையைப் பெற நாம் முன்வருவோம்.

இறைவன் எங்களுக்கும் உங்களுக்கும் இந்த நற்காரியத்தை பூரணமாக நிறைவேற்றி, அந்த முதியவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பளிப்பானாக, ஆமீன்!

எம்மைப் போன்று அவர்கள் ஒருகாலத்தில் பலமாக இருந்தவர்கள்…
குடும்பங்களுக்காக உழைத்தவர்கள்…
இன்று பலவீனமுற்று நம்முடைய கருணையையும் ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளனர்…

உதவி செய்ய விரும்புபவர்கள் Royal Youths அமைப்பை தொடர்பு கொண்டு அல்லது எங்களது வங்கி கணக்கின் மூலம் பங்களிக்கலாம்.

📞தொடர்புகளுக்கு
Mr. Mohamed Suhail
+94 75 682 1078

Mr. Asmath Sakkee
+94 75 565 9169

🏦
Royal Youth
A/C 8172006600
Commercial Bank
Akkaraipattu

📌Please specify in the remark as "Crafting Smiles" while you make the transactions.

Royal Youths
26th February 2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ🔺 றோயல் யூத்ஸ் – வருடாந்த ஒன்றுகூடல் 2025 🔺றோயல் யூத்ஸ் அமைப்பின் வருடாந்த ஒன்ற...
19/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ

🔺 றோயல் யூத்ஸ் – வருடாந்த ஒன்றுகூடல் 2025 🔺

றோயல் யூத்ஸ் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் 2025 இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். தற்போது நாட்டில் உள்ள றோயல் யூத்ஸ் அங்கத்தவர்கள் அனைவரையும் இந்த ஒன்றுகூடலுக்கு அன்புடன் அழைக்கின்றோம் .

இந்த ஒன்றுகூடலின் மூலம், இதுவரை எமது பயணத்தை நினைவுகூர்வதோடு, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூகத்திற்கான எமது பங்களிப்புகளைப் பற்றி கலந்துரையாட உள்ளோம்.

📅 திகதி: ஞாயிறு, 21 டிசம்பர் 2025
📍 இடம், நேரம்: பின்னர் அறிவிக்கப்படும்

தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த கீழ்காணும் Linkஇனை பூர்த்தி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
https://forms.gle/3zEkp2YhECFhHngBA

உங்களின் வருகையும், கருத்துகளும், பங்களிப்புகளும் எமது எதிர்கால முயற்சிகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இன்ஷா அல்லாஹ், ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் மீண்டும் ஒன்றாக கூடுவோம்.

றோயல் யூத்ஸ்

Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh

🔺 Annual General Meeting 2025 🔺

We are pleased to invite all Royal Youths members currently in the country to our Annual General Meeting 2025. This gathering aims to bring us together to reflect, share ideas, and discuss future plans for the growth and impact of our community.

Please confirm your presence by filling out the form below:
https://forms.gle/3zEkp2YhECFhHngBA

📅 Date: Sunday, 21st December 2025
📍 Venue & Time: To be announced

Your presence, insights, and contributions are highly valued and will play an important role in shaping our future initiatives.

We look forward to your active participation, In Sha Allah.

Royal Youths

சேற்றோடு கழியும் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையூட்ட உதவிடுங்கள்கம்பளை பிரதேசத்தில் இன்னும் சரியாக நிவாரணப் பொருட்கள் கி...
05/12/2025

சேற்றோடு கழியும் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையூட்ட உதவிடுங்கள்

கம்பளை பிரதேசத்தில் இன்னும் சரியாக நிவாரணப் பொருட்கள் கிடைக்கப்பெறாத சில பகுதிகளை இனங்கண்டு அம்மக்களுக்கான சிறு உதவிகளை பொருட்களாக (Bedsheet, Clothes, Cleaning Items & Tin Fish) இன்று வழங்கி வைத்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்!!!

இதனை வெற்றிகரமாக செய்து முடிக்க சிலோன் காக்காமார் குழுவினரோடு இணைந்து செயற்பட்டிருந்தது Royal Youths.

இறுதிவரை அர்ப்பணிப்போடு செயற்பட்ட சிலோன் காக்காமார் உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பிரதேசத்தைச் சூழவுள்ள இன்னும் பல சிறிய பிரதேசங்கள் பல அத்தியவசிய தேவைக்காகவும் தமது வாழ்க்கையை மீள ஆரம்பிக்கவும் உங்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர். உங்கள் சிறு உதவியும் பலரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். அல்லாஹ் உங்கள் செல்வங்களை விருத்தி செய்வான்.

உதவிகளை வழங்க:
Royal Youths
8172006600
Commercial Bank
Akkaraipattu Branch

For more information visit : https://royalyouths.org/emergencyaid/

நம் உதவிக்காக கண்ணீரோடு காத்திருக்கும் நம் மக்கள்கிண்ணியா - மூதூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்...
02/12/2025

நம் உதவிக்காக கண்ணீரோடு காத்திருக்கும் நம் மக்கள்

கிண்ணியா - மூதூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்காக, திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாயலுடன் கைகோர்த்துள்ளது அக்கரைப்பற்று Royal Youths.

இதன் ஒரு பகுதியாக, கருமலையூற்று மக்களோடு இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 900 பேருக்கான மதிய உணவுப் பொதிகள் மற்றும் சில அத்தியவசிய தேவைக்கான பொருட்கள் என்பன கடல் மார்க்கமாக நான்கு படகுகளில் எடுத்துச் செல்லப்பட்டு மூதூர் பெரிய பள்ளிவாயல் பொறுப்புதாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. Alhamthulillah!!!

பணரீதியாகவும் களப்பணியூடாகவும் உதவிபுரிந்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கிடைக்கப்பெறும் நன்கொடைகளும் இதே போன்று பாதிக்கப்பட்டு அதிக தேவையோடு இருக்கும் மக்களை அடையாளம் கண்டு வழங்கப்படவுள்ளன.

இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்விடம் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் எம் உதவிக்காக இன்னும் அனர்த்த முகாம் வாயில்களில் காத்திருக்கின்றனர்.

உதவிகளை வழங்க விரும்பும் கொடையாளர்கள் Royal Youths கணக்கிலத்திற்கு உங்கள் நன்கொடைகளை அணுப்பி வைக்கலாம்.

உங்கள் மேலான உதவிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Royal Youths
8172006600
Commercial Bank
Akkaraipattu Branch

📢 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மக்களுக்காக — உங்கள் ஆதரவு தேவை!எம் அன்பான சகோதரர்களே,சமீபத்திய அனர்த்தத்தால் கடு...
01/12/2025

📢 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மக்களுக்காக — உங்கள் ஆதரவு தேவை!

எம் அன்பான சகோதரர்களே,

சமீபத்திய அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பகுதி மக்களுக்காக, நாங்கள் ஒன்றிணைந்து சமைத்த உணவு/உலர் உணவு வழங்கும் சேவையை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்கள் நமது உதவிகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்த மனிதாபிமான பணிக்காக நீங்கள் உங்களால் முடிந்த இயன்றளவு பங்களிப்பினை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அவசரத்தில் உள்ள நம் மக்களுக்கு உதவி செய்திடுவோம்.

உங்கள் மேலான உதவிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Royal Youths
8172006600
Commercial Bank
Akkaraipattu Branch

வெள்ள அனர்த்த நிவாரணம் - அக்கரைப்பற்றுஎமது பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் பின்னணியில், பாதிக்கப்பட்ட ...
27/11/2024

வெள்ள அனர்த்த நிவாரணம் - அக்கரைப்பற்று

எமது பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் பின்னணியில், பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகளில் எமது Royal Youths அமைப்பும் நேற்று முதல் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகம், அக்கரைப்பற்று ஸகாத் நிதியம், மற்றும் ஊரில் உள்ள அமைப்புக்கள், தொண்டர்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த ஏற்பாடுகளில், 1800 சமைத்த பகல் உணவுப் பொதிகள் நேற்றைய தினம் வினியோகிக்கப்பட்டது.

இதன் தொடரில் நேற்றிரவு 15,000 பேருக்கான இரவுணவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிவாயல்கள் மற்றும் பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் பகலுணவுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

நமது ஊர் மக்களின் வாழ்வில் இந்த அனர்த்தம் ஏற்படுத்திய பாதிப்பை அகற்ற இறைவனின் துணையை நாடுவதுடன், இந்த பேரிடருக்கு மத்தியில் எம்மோடு இணைந்து பணியாற்றும் அனைத்து இளைஞ்சர்கள், தன்னார்வ தொண்டர்கள், ஏனைய அமைப்புகள், தனிநபர்கள் அனைவரையும் உங்களது மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் இச் சமூகப் பணியை தொடர மேலும் நிதி மற்றும் ஆள்வளம் தேவைப்படுகிறது.
நிவாரண பணிகளில் பங்குகொள்ள விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்வதுடன் நன்கொடை வழங்க விரும்பும் நலன் விரும்பிகள், கீழே வழங்கப்பட்டுள்ள பைத்துல்மால் வங்கிக் கணக்கினை அணுகலாம்:

Byththulmal - Sakkath Fund
A/C No: 063100180001261
People's Bank - Akkaraipattu

அல்லாஹுத்தஆலா எம்மனைவரின் பணிகளையும் பொருந்திக் கொள்வானாக.

ஆமீன்

வெள்ள அனர்த்த நிவாரணம்அக்கரைப்பற்று ஸகாத் நிதியம்இரண்டாம் நாள் - 26.11.2024வெள்ள அனர்த்த நிவாரணம் ஒருங்கமைக்கப்பட்ட முறை...
26/11/2024

வெள்ள அனர்த்த நிவாரணம்
அக்கரைப்பற்று ஸகாத் நிதியம்
இரண்டாம் நாள் - 26.11.2024

வெள்ள அனர்த்த நிவாரணம் ஒருங்கமைக்கப்பட்ட முறையில் வழங்கப்பட வேண்டுமென்ற நோக்கில் அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் அரச பொறிமுறையான அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துடன் ஆரம்பத்திலிருந்தே கலந்துரையாடல்களை நடாத்தி நிவாரண பணிகளை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இரண்டாம் நாளான இன்று அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் 1800 சமைத்த பகல் உணவுப் பொதிகளை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினூடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது விநியோகித்து வருகின்றது.

ஸகாத் நிதியம் அடையாளம் கண்டவர்களுக்கும் நேரடியாக சாப்பாட்டு பொதிகளை வழங்கி வருகின்றது. மிக அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டமையினால் உணவுத் தேவை அதிகமாகவுள்ளது. இருப்பினும் ஹோட்டல்களில் போதுமான சாப்பாட்டினை பெற்றுக் கொள்ள முடியாத நிலையுள்ளது.

அத்தோடு இன்றிரவு 15 ஆயிரம் பேருக்கான இரவுணவை வழங்க அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அல்லாஹுத்தஆலா அனைத்து விடயங்களையும் இலகுபடுத்தித் தருவானாக!

ஓரிரு தினங்கள் வெள்ள அனர்த்தம் தொடருமென எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான தயார்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அனர்த்த நிவாரண உதவிகளை வழங்க விரும்புகின்றவர்கள் உங்களின் நன்கொடைகளை அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் பைத்துல்மால் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடுமாறு வேண்டுகின்றோம்.

Byththulmal - Sakkath Fund
063100180001261
People's Bank
Akkaraipattu

அல்லாஹுத்தஆலா எம்மனைவரது பணிகளையும் பொருந்திக் கொள்வானாக!

+9467 2278 706

Eid Mubarak from Royal Youths!On this joyous occasion, we extend our warmest wishes to all. May this Eid bring you and y...
16/06/2024

Eid Mubarak from Royal Youths!

On this joyous occasion, we extend our warmest wishes to all. May this Eid bring you and your loved one's peace, happiness, and prosperity.

Let's celebrate the spirit of togetherness and compassion.

Eid Mubarak! 🌙✨

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,"வலிகளைச் சுமந்து வாழும் முதியோரின் வாழ்வில் மகிழ்வின் ஒரு சில சுடரையேனும் ஒளிரச் செய்வோம...
15/06/2024

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்,

"வலிகளைச் சுமந்து வாழும் முதியோரின் வாழ்வில் மகிழ்வின் ஒரு சில சுடரையேனும் ஒளிரச் செய்வோம் வாருங்கள்" என நாம் விடுத்த அழைப்புக்கு பொருளாதார ரீதியாகவும் உடல் உழைப்பின் வாயிலாகவும் எம்மோடு கரம் கோர்த்த அனைவரும் நன்றிகள் கோடி. அல்லாஹ் உங்கள் அனைவரினதும் வாழ்வில் பரக்கத்தை ஏற்படுத்துவானாக.

பொறுப்புக்கள் அமானிதமாகும். முதியோர் இல்லத்தில் வாழும் முதியோரின் பெருநாள் தினத்தை சிறப்பிக்கும் பொறுப்பை நாம் ஏற்றிருந்தோம். நேற்றைய தினம் 14.06.2024 அன்று 16 தன்னார்வத் தொண்டர்களின் பங்குபற்றுதலோடு முதியோர்களுக்கான புத்தாடைகளும், பெருநாள் உணவுக்கான செலவீனமும், முதியோர் இல்லதின் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பொருட்களும் மற்றும் முதியோர்களுக்கான ஒரு தொகை பெருநாள் பணமும் வழங்கி வைக்கப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ்❤️.

அங்கு முதியோர்களுடன் சிறிது நேரத்தைச் செலவிட முடிந்தது‌. அவர்களின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களது உடல் நலனைப் பற்றி விசாரிக்க முடிந்தது.

இன்னும், பிரத்தியேக நிதியுதவியின் மூலம் கிடைக்கப் பெற்ற ஒரு தொகைப் பணத்தினை, சிறுவர் அநாதை இல்லத்தின் பெருநாள் உணவுக்கான உதவித் தொகையாக வழங்கி வைத்தோம். அங்கும் சிறுவர்களோடு எமது நேரத்தைச் செலவிட்டோம். அவர்களின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டோம். பகிர்வதால் வளர்வது அறிவு மட்டுமல்ல, அன்பும் சந்தோஷமும் தான் என்பதை நாம் அங்கு கண்கூடாகக் கண்டோம்.

ஒரு புறம் பெற்றோர் இன்றித் தவிக்கும் பிள்ளைகள், மறுபுறம் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெற்றோர்கள் என வாழ்வின் இரு விழிம்புகளான இளமையிலும் முதுமையிலும் பராமரிக்கவும் அன்பு காட்டவும் உறவுகள் இன்றி கைவிடப்பட்டவர்களின் வாழ்விலிருந்து எமக்கு மிகப்பெரும் படிப்பினை இருந்தது.

அல்லாஹ் எம் அனைவரது நல்ல எண்ணத்தையும் ஏற்று நிரப்பமான கூலியினை வழங்குவானாக.

ஜஸாககல்லாஹு கைரா.

குறிப்பு: கீழே உள்ள Link ல் இந்த செயற்திட்டத்திற்க்கான வருமானம் மற்றும் செலவீனங்களை பார்வையிடலாம்
https://royalyouths.org/statement/

அக்கரைப்பற்று பதூர் மையவாடி சிரமதானம்.மண்ணறையை நினைவூட்டும் மையவாடியை சுத்தம் செய்ய முன் வருவோம்.ஹஜ் பெருநாளை முன்னிட்டு...
12/06/2024

அக்கரைப்பற்று பதூர் மையவாடி சிரமதானம்.
மண்ணறையை நினைவூட்டும் மையவாடியை சுத்தம் செய்ய முன் வருவோம்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வருகின்ற சனிக்கிழமை காலை 5.45 மணி தொடக்கம் காலை 10.00 மணி வரை எமது Inspring Youths அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பதூர் பொது மையவாடியை சிரமதானம் செய்து சுத்தம் செய்ய அக்கரைப்பற்று வாழ் மக்களின் பங்களிப்பை வேண்டிக்கொள்கின்றோம்.

எனவே எம்மோடு வாழ்ந்த எமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட இந்த மையவாடியை சுத்தம் செய்வது எமது தார்மீக கடமை என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் தங்களுடைய உடலால் ஒரு சிறு பகுதியையேனும் சுத்தம் செய்ய கலந்து சிறப்பியுங்கள்.

Inspiring Youths

அக்கரைப்பற்று பதூர் மையவாடி சிரமதானம்.

மண்ணறையை நினைவூட்டும் மையவாடியை சுத்தம் செய்ய முன் வருவோம்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வருகின்ற சனிக்கிழமை காலை 5.45 மணி தொடக்கம் காலை 10.00 மணி வரை எமது Inspring Youths அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பதூர் பொது மையவாடியை சிரமதானம் செய்து சுத்தம் செய்ய அக்கரைப்பற்று வாழ் மக்களின் பங்களிப்பை வேண்டிக்கொள்கின்றோம்.

எனவே எம்மோடு வாழ்ந்த எமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட இந்த மையவாடியை சுத்தம் செய்வது எமது தார்மீக கடமை என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் தங்களுடைய உடலால் ஒரு சிறு பகுதியையேனும் சுத்தம் செய்ய கலந்து சிறப்பியுங்கள்.

Media Unit
Inspiring Youths

Address

5/6, Common Road, Akkariaipattu
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when Royal Youths posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Royal Youths:

Share