05/01/2026
-05.01.2026-
அக்கரைப்பற்று தைக்காநகர் பொது மையவாடி – பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகள்
Inspiring Youths அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அக்கரைப்பற்று தைக்காநகர் பொது மையவாடி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அக்கரைப்பற்று மாநகரசபை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கனமழையால் மழைநீர் அதிக அளவில் ஓடியதன் காரணமாக மண் சரிந்து, அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைந்திருந்த கபூர் சேதமடைந்திருந்தது. மேலும், ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்திருந்ததோடு, மையவாடியில் அமைந்திருந்த Street Post Lights களும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தற்போது அந்த விளக்குகள் செயல்படாத நிலையில் காணப்பட்டது.
இந்த விடயங்களை தொடர்ந்து, அக்கரைப்பற்று மாநகர சபையின் Development Committee தலைவர் Mr. Mohamed Riyal மற்றும் Technical Officer Mr. Babu ஆகியோர் Field Visit மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் அடிப்படையில்,
📌செயலிழந்த street light-ஐ ஒரு வாரத்திற்குள் பழுது நீக்கி மீண்டும் செயல்படுத்த,
📌முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றி,
📌மழைநீர் ஓடியதனால் சேதமடைந்த கபூர் அடிப்பகுதிக்கு தற்காலிக தீர்வாக Sand Bags பயன்படுத்தி சுவர் போன்ற அமைப்பு உருவாக்க,
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர சபை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண் சரிவு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், நிரந்தர தீர்வாக Retaining Wall ஒன்றை அமைக்க அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் அவர்களிடம் Inspiring Youths அமைப்பின் மூலம் வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக எமது வேண்டுகோளுக்கு விரைந்து செவிமடுத்து, உடனடியாக Feild Visit மேற்கொள்ள மாநகர சபை குழுவை அனுப்பிய அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் அவர்களுக்கும், எமது அழைப்பை ஏற்று வருகை தந்த காதிரியா ஜனாஸா சங்கம் உறுப்பினர்களுக்கும் எமது Inspiring Youths அமைப்பின் சார்பில் எமது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Inspiring Youths
Akkaraipattu.