DYFI Gudimangalam

DYFI Gudimangalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Gudimangalam, Youth Organization, Gudimangalam, Udumalpet.

21/05/2026

விலை உயர்வுக்கு அமெரிக்காவும், மோடி அரசும் தான் காரணம்!

பெ. சண்முகம் குற்றச்சாட்டு சென்னை, மே 20- பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உரையாற்றி னார்.

அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற நெருக்கடிக் கெல்லாம் மூலக் காரணம், கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்த யுத்தம் தான்.

நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசும், இந்த யுத்தத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலை எடுத்தது.

ஈரானுக்கு எதிராக நடந்து கொண்டது.

யுத்தத்தை துவங்கியபோது “ஈரான் என்ற சின்னஞ்சிறிய நாட்டை ஒரு வார காலத்திற்குள் முடித்து விடுவேன் என்று டிரம்ப் பேசினார். தற்போது ஏறத்தாழ 80 நாட்கள் கடந்த பின்பும் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தற்போது டிரம்ப் சீனாவுக்குச் சென்று, சீன ஜனாதிபதியைப் பார்த்து, அவரது உதவியை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பிரச்சனையை ஆரம்பித்து விட்டு, டிரம்ப் ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த யுத்தத்தினால் பாதிக்கப்படு வது சாதாரண பொதுமக்கள்தான். இந்தியா மட்டுமல்ல, வளைகுடா நாடுகள், தெற்காசிய, மேற்காசிய நாடுகள் என பல்வேறு நாட்டினுடைய மக்கள் மீள முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்ற முழக்கத்தை இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த குரலை எழுப்ப வேண்டும்.

யுத்தத்தினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்படு கிறார்கள், பல லட்சக்கணக்கான மக்கள் உடல் ஊனமுற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

இதன் மூலம் ஆயுத வியாபாரிகளும், எண் ்ணெய் வியாபாரிகளும் தான் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் யாருக் காக சண்டை போடுகிறார்கள்? அமெரிக்க ஏகாதி பத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தேவை யற்ற இந்த யுத்தத்தை துவக்கி இன்று அந்த யுத்தத்தை நிறுத்த முடியாது என்ற அளவுக்கு நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப் படுவது சாதாரண அப்பாவி மக்கள் தான்.

யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, ‘ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்காதீர்கள்’, ‘பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துங்கள்’ என்று நிறைய இலவச அறிவுரைகளைப் பிரதமர் மோடி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்கள் என்ன சொந்தக் காரில்தான் சென்று கொண்டிருக்கிறார் களா? அதேபோல தினசரி காலையில் எழுந்தவுடன் எல்லோரும் நகைக் கடைகளுக்கு சென்று ஆளுக்கு ஒரு கிலோ தங்கத்தை வாங்கி வீட்டில் வைத்து விட்டுதான் மறுவேலை என்று இருக்கிறார்களா? மோடி ஆட்சியில் ‘கல்யாணி கவரிங்’ நகையைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்களைத் தள்ளப் பட்டுள்ளனர்.

இதையெல்லாம் மறந்து விட்டு பிரதமர் மோடி பேசுகிறார். அவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

இது ஏதோ வெறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை.

ஒட்டுமொத்த நாட்டினுடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பையும், நெருக்கடியையும் உருவாக்கக் கூடியது.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை யும் உயரும்.

எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் கிடைக்கும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக் கும் வகையில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

4 லட்சம் பேரல் கேஸ் தட்டுப்பாடு: கெப்ளர் நிறுவனம் தகவல்புதுதில்லி இந்தியாவில் கேஸ் இறக்குமதி சரிந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ...
21/05/2026

4 லட்சம் பேரல் கேஸ் தட்டுப்பாடு: கெப்ளர் நிறுவனம் தகவல்

புதுதில்லி இந்தியாவில் கேஸ் இறக்குமதி சரிந்துள்ளதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை, உள் நாட்டு உற்பத்தியால் ஈடுசெய்ய முடிய வில்லை.

இதனால் நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேரல் திரவமாக்கப் பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ‘கெப்ளர்’ (Kpler) என்ற பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் நாளொன்றுக்கு சரா சரியாக 8,51,870 பேரல்கள் இறக்கு மதியாயின.

அதுவே ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு 3,77,620 பேரல்கள் எல்பிஜி மட்டுமே வந்தன.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதுஅமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொ டுத்ததை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி ஏப்ரல் மாதத்தில் நாளொ ன்றுக்கு 1,73,000 பேரல்களாகக் குறைந் துள்ளது.

இது பிப்ரவரி மாத அளவை விட 75 சதவிகிதம் சரிவாகும்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததாகக் கூறப்பட்டாலும் நாளொன்றுக்கு வெறும் 75,000 பேரல் கள் மட்டுமே உயர்ந்துள்ளது.

இது அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதல்ல.

ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, சிலி ஆகிய நாடுகளி லிருந்து எரிவாயுவை இந்தியா வாங்கி யுள்ளது.

ஆனால், கடந்த மாதத்தில் இந்த நான்கு நாடுகளிலிருந்தும் நாளொ ன்றுக்கு 43,000 பேரல் எல்பிஜி மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற வரு டாந்திர வணிக உச்சிமாநாட்டில் பேசிய ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, “எந்தவொரு நெருக்கடியும் இல்லை” , கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகளுடன் சேர்த்து, இந்தியா விடம் “45 நாட்களுக்குத்” தேவையான எல்பிஜி இருப்பு உள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு ஒவ்வொன்றும் 69 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் தான் கெப்ளர் தரவுகள் இந்தியாவின் பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து வெறும் 5-6 நாட்களில் எரிபொருட்கள் இந்தியா வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 20 நாட்களும், சிலி மற்றும் அமெரிக்கா விலிருந்து எரிபொருட்கள் வர 35 முதல் 45 நாட்கள் வரையும் கால தாமதம் ஆகிறது.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மின்சார வசதி இல்லைநிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ...
09/05/2026

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மின்சார வசதி இல்லை

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தி யாவில் உள்ள பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள் குறித்த கவலைக் குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில்,“நாட்டில் சுமார் 98,500 பள்ளிக ளில் மாணவிகளுக்கான தனி கழிப் பறை வசதி இல்லை. இதேபோல், 61,540 பள்ளிகளில் எவ்விதமான பயன்பாட்டிற் குரிய கழிப்பறை வசதிகளும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளில் மின்சார வசதி 55 சதவீதத்திலிருந்து 91.9 சதவீதமாக மேம்பட்டிருந்தாலும், ஏறத்தாழ 1.19 லட்சம் பள்ளிகளில் இன்றும் செயல்படும் நிலையில் உள்ள மின் இணைப்புகள் இல்லை.14,505 பள்ளிகளில் இன்றும் போதுமான குடிநீர் வசதி இல்லை. 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை. அரசு மேல் நிலைப் பள்ளிகளில் 51.7 சதவீதம் மட்டுமே அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன” என அறிக்கையில் நிதி ஆயோக் கூறியுள்ளது.

ஆம் ஆத்மியின் கடிதத்திற்கு பதில் அளிக்காமல் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் மாநிலங்களவை தலைவர்ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய...
29/04/2026

ஆம் ஆத்மியின் கடிதத்திற்கு பதில் அளிக்காமல் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படும் மாநிலங்களவை தலைவர்

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலை வர்களில் ஒருவரும், பஞ்சாப் மாநி லத்தின் செயல் தலைவர் (ஆம் ஆத்மி) அந்தஸ்தில் பணியாற்றியவருமான ராகவ் சதா மற்றும் அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.,க்கள் வெள்ளியன்று திடீரென பாஜக வில் இணைந்தனர். இவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக மாநி லங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதில் அளிக்க கூட மறுத்துவிட்டார். ஆனால் 7 எம்.பி.,க்களும் தாங்கள் பாஜகவின் சட்டமன்றக் குழுவில் இணைவதாக அளித்த கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வதாக மாநிலங்க ளவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்க ளன்று அறிவித்திருக்கிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இனி பாஜகவின் ஒரு பகுதியாகவே கருதப்படுவார்கள்.

எம்.பி.,க்களை விலைக்கு வாங்குவதன் மூலம், 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங் களவையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக மாறியுள்ளது. அதே போல பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவையில் பெரும் பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 13 எம்.பி.,க்கள் கூடுதலாக உள்ளனர்

ஆம் ஆத்மி கண்டனம்

மாநிலங்களவைத் தலைவரின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவுக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில்,”பாஜகவுடன் இணைந்த 7 உறுப்பினர்களின் முடிவு அப்பட்ட மான கட்சித்தாவல் ஆகும்.

இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங் கப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, அந்த 7 உறுப்பி னர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அவைத்தலைவரிடம் மனு அளித்துள் ளேன். ஆனால் அவைத்தலைவர் இந்த இணைப்பிற்கு அங்கீகாரம் அளித்துள்ளார். நான் அளித்த தகுதிநீக்க மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பது தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“No Other Choice” “வேறு வழியில்லை”ஏஐ எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தின் நவீன வடிவமே, “மனிதரில்லா இருளில் தானாக இயங்குகின்...
26/04/2026

“No Other Choice” “வேறு வழியில்லை”

ஏஐ எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தின் நவீன வடிவமே, “மனிதரில்லா இருளில் தானாக இயங்குகின்ற தொழிற்சாலைகள் அமைப்பு”(Lights out system).இது, ஆலைகளை மட்டுமின்றி, தொழிலாளர்களின் குடும்பத்தையும் இருட்டில் தள்ளிவிட்டது என்பதை, கருப்பு நகைச்சுவையில் பேசுகின்ற தென் கொரியப் படமே, “No Other Choice”. சியோலில் உள்ள ஒரு மனநல மையத்தில், கார்பரேட் கொடூரத்தால் (Corporate Cruelty)வேலை இழந்த தொழிலாளிகளுக்கு மனநல ஆலோசனைகள் மூலம் நேர்மறை எண்ணங்கள் அளிக்கப்படுகிறது.

அவர்கள், தங்களது எதிர்கால நடத்தை குறித்து முன்கூட்டியே கூறுகின்ற”சுய பரிந்துரை”(Auto Suggestion) என்ற சிகிச்சைக்காக, வட்டமிட்டு அமர்ந்துள்ளனர்.ஒவ்வொருவரும், வலதுகை ஆட்காட்டி விரலை நெற்றிப்பொட்டில் தட்டிக்கொண்டே அவர்களுடைய நம்பிக்கைகள், கனவுகளை சொல்கின்றனர். அவர்களில் ஒருவன் மான்-சூ. அவனோ, “நான் 25 ஆண்டுகள் சோலார் காகித ஆலையில் அடிமை போல உழைத்தேன்!ஆனால் நிர்வாகம், வேலையை திடீரெனப் பறித்தது.

பணியை இழக்க வேண்டும் என்பது எனது தெரிவு அல்ல!குடும்ப தலைவனான நான் நல்ல மனிதன். நான் மறுபிறவியெடுத்து, புதிய வாய்ப்புகளைத் தேடும் போது, என் அன்பான குடும்பம், என்னை முழுமையாக ஆதரிக்கும்.எனது, இப்புதிய அவதாரத்தில், குடும்பத்தை காப்பதற்காக, எதுவும் செய்வேன். மிகச் சிறப்பாக என்னை இத்தருணத்தில் உணர்கின்றேன். எப்படியும் மூன்று மாதங்களில் மீண்டும் வேலையில் அமர்வேன்!” என்கிறான்.

ஆனால், பதின்மூன்று மாதமாகியும் மான்-சூக்கு வேலை கிடைக்கவில்லை.சிறப்பு குழந்தையான அவனது மகள் ரீயோன்-க்கு, செலோ(Cello) இசைப்பயிற்சிக்கு மாதாந்திர கட்டணம், மகன் சியோனுக்கு நெட்பிளிக்ஸ் மாதாந்திர கட்டணம், மற்றும் வீட்டு கடன் தவணை ஆகிய எதுவும் செலுத்த முடியவில்லை. மனைவி மிரி-க்காக, புதிய டென்னிஸ் ராக்கெட்டும் வாங்க முடியவில்லை. செல்ல நாய்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. வீட்டை விற்கக்கூடிய சூழலும் எழுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தால் தானியங்கிமுறைக் காகித ஆலையில் கண்காணிப்பு வேலைக்கு ஒருவர் தேவை என்பதை மான்-சூ அறிகிறான்.ஆலை மேலாளரை சந்தித்து வேலை கேட்கிறான்.

மேலாளர் அவனை இகழ்ந்து அனுப்பி விடுகிறார். விரக்தியடைந்த மான்-சூ, அதே ஆலையில், வேலைக்கு ஆள் தேவை என்ற போலியான நேர்காணலுக்கு ஏற்பாடு செய்கிறான்.வந்த மனுக்களில் இருவர் மட்டும் இவனை விட திறமைமிக்கவர்கள்.இவர்கள் இருக்கும்வரை மான்-சூக்கு வேலை கிடைக்காது.எனவே, குடும்பத்திற்காக எதையும் செய்யத் துணிந்த மான்-சூ, இவ்விருவருடன் அவனை இகழ்ந்தனுப்பிய ஆலை மேலாளரையும் கொலை செய்கிறான்.பழியைப் பிறர்மேல் சுமத்தி, அந்த வேலையில் அமர்வதே கதை. வேலையிலிருந்து விரட்டிய ஆலையில், மான்-சூ Line Manager ஆக வேலை பார்க்கையில், ஆலைத் தொழிலாளிகளிடம், தலைக்கவசம் அணிந்து பணியாற்ற வலியுறுத்துகிறான்.

உயரமான இடத்தில் வேலை பார்க்கும் வயதான தொழிலாளிக்கு குடிநீர் கொடுக்கிறான்.உற்பத்தியாகி, பெருஞ்சுருளாக வரும் காகிதக் கட்டை இவன், ஒரு சிறிய தடியால் தட்டி அதன் தரத்தை சரிபார்க்கிறான். ஆலையின் தாரக மந்திரத்தின் படி, இயந்திரத்தை நிறுத்தி, ஆய்வு செய்து பின்னர் செயல்படுத்துகிறான். ஆனால் ஏஐ பயன்பாடு வந்த ஆலையிலோ, இருட்டிலே எந்திரங்கள் இயங்குகின்றன. மான்-சூ, அதனை விளக்கை போட்டு பார்க்கிறான். ஏனென்றால், தொழிலாளிகள் இல்லாத ஆலையில் தானியங்கி இயந்திரங்களுக்கு வெளிச்சம் தேவையில்லை.ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும், ஏஐ தானாக சரி செய்கிறது.

உற்பத்தியான காகிதச் சுருளை ஓட்டுநர் இல்லா ரோபாட்டிக் வண்டி, யார் மீதும் மோதாமல் எடுத்துச் செல்கிறது. உற்பத்தியான நீண்ட பெரிய காகிதம், பெருஞ் சுருளாக வர, அதனை ரோபோ, ஏஐ உதவியோடு ஒளிக்கதிர்களை செலுத்தி, தரத்தை சரிபார்க்கிறது. காகித தயாரிப்பின் மூலப் பொருளான மரங்கள் ரோபோடிக் இயந்திரத்தால் வெட்டி, கிளைகள், இலைகளை கழித்து, பின்னர் துண்டு துண்டாக வெட்டுகிறது.இதில், எதிலுமே மனித உழைப்பு இல்லை.

ஆலை முழுதும் மனித வாடையற்ற தானியங்கி இயந்திரங்கள். ஆக, Lights out System-மனிதனை “வேலை இல்லாதவன்”என்பதோடு மட்டுமின்றி”வேறு வழி இல்லாதவன்” என்ற நிலைக்கும் தள்ளுகிறது. காகிதத்தின் தரத்தை தட்டிப் பார்த்து மதிப்பிடுவது போல், ஏஐ-ன் பாதிப்பிற்கு உள்ளானவன், தன் எதிர்காலத் திட்டத்தை நெற்றிப் பொட்டில் தட்டி தன்னை மனித நெறியற்ற வாழ்வுக்கு தயாராகும் ஒரு சந்தை சரக்காக மாற்றிக் கொள்கிறான் என்பதே படத்தின் கரு.

தொழிற்சங்கம் ஆரம்பிக்காமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் வேலை தருவதாக நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது.ஆனால், 25 வருடத்திற்குள் வேலை நீக்கம் செய்தது.இதனை மான்-சூ, சக தொழிலாளிகளிடம் மனம் நொந்து பேசுகின்ற வசனம், கார்பரேட் தொழிலாளர்களின் இன்றைய சங்கம் இல்லாத அவல நிலையை பட்டவர்த்தனப்படுத்துகிறது. மனைவி தோட்டத்தில் பிணத்தை தோண்டுவது கணவனின் உண்மையை அறிய; கணவன் மற்றொரு இடத்தில் பிணம் புதைப்பது தன் ரகசியம் யாருக்கும் தெரியாதிருக்க.இதே நேரத்தில், மகனுடைய கனவில், போன்சாய் மரத்தடியில் அவன் அமர்ந்திருக்கையில், தந்தை அவனை கண்காணிப்பது அவனுக்கு பிடிக்காத கட்டுப்பாட்டை காட்டுகிறது.

இம்மூன்று நிகழ்வுகளையும் Cross Cutting முறையில் இணைத்து, மூவரின் உள் மனநிலையை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளனர். பச்சை வனாந்திரத் தோட்டத்தில் மான்-சூ-வின் வீடு. இலையுதிர்கால நீலவானில் மேகங்கள்.உதிர்ந்த இலைகள் தென்றலில் பறந்து, மான்-சூ முகத்தை வருடுகின்றன. சோக செலோ இசை பின்னணியில் முதல் காட்சி. பட முடிவில், புதிய வேலை கிடைத்த மான்-சூ வீட்டில், மகள் தனது இசைக் குறிப்புகளின்படி செலோ வாசிக்கிறாள்.

அதே இசை அடுத்த குடும்பக் காட்சிகளுக்கும் தொடர்கிறது.இரு காட்சிகளிலும் குடும்பம் மகிழ்ச்சியாகத் தெரிந்தாலும், முன்னது உண்மையான உள்ளக் கிளர்ச்சி; பின்னது குற்றமனதின் போலி மகிழ்ச்சி.இதை சாம்பல் நிற பின்புலம் சரியாக உணர்த்துகிறது. ஒட்டுமொத்த படத்தின் சிறப்பான ஒளிப்பதிவுக்கும்(ஹிம் வூ ஹீங்), இசைக்கும் (ஷோ யங் வூக்) மற்றும் படத்தொகுப்பிற்கும் (கிம் ஷாங் பியோம்)படத்தின் ஆரம்ப மற்றும் இறுதி காட்சித் தொகுப்புகள் சரியான சான்றுகள்.

படத்தில் வரும் போன்ஷாய் மரம், ஈல் மீன், மான்-சூவின் பூச்சிப்பல், உள்ளிட்டவைகள் இயல்பான குறியீடுகளாக வருகின்றன. Squid Game டிவி தொடரின் மூலம் பிரபலமான லீ ப்யுங்-ஹுன், மான்-சூ பாத்திரமேற்று, மிகவும் நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மான்-சூவை போலீஸ் விசாரிக்கையில், கணவனின் மனசாட்சியாக பின்புறம் நின்று, எங்கு கணவன் மாட்டிருவானோ! என்ற பதைபதைப்பில் கவனிக்கும் மனைவி பாத்திரமேற்றுள்ள ஷன்யெஜின் பண்பட்ட நடிப்பை தந்துள்ளார். Decision to Leave உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள தென்கொரியாவின் புகழ்பெற்ற பார்க் சான் வூக்கே இப்படத்தையும் இயக்கியுள்ளார். 2025-இன் உலகின் குறிப்பிடத்தக்க படங்களில் இதுவும் ஒன்று.வெனீஸ் உலகத் திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் கலந்துள்ளது.முபியில் உள்ளது.

சமையலறையில் புகுந்து ‘பொருளாதார தாக்குதல்’! ஒன்றிய பாஜக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – கார்த்திக் – கோவை, மார்ச் 9- சர்வ...
10/03/2026

சமையலறையில் புகுந்து ‘பொருளாதார தாக்குதல்’! ஒன்றிய பாஜக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

– கார்த்திக் – கோவை, மார்ச் 9- சர்வதேச அரசியல் சூழலை சாக்குப்போக்காக கூறி, சாமானிய மக்களின் சமையலறையில் மீண்டும் ஒரு பொருளாதார தாக்கு தலை தொடுத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள தால், சாமானிய இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள் ளனர். ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தை காட்டி, கச்சா எண் ணெய் விலையை காரணம் காட்டி இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்க ளின் லாபத்திற்காகவே மக்களின் தலை யில் இந்தச் சுமை ஏற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். விலை உயர்வை அறி வித்தது மட்டுமன்றி, 21 நாட்கள் இடை வெளி இருந்தால்தான் அடுத்த சிலிண் டர் என ‘கட்டுப்பாடு’ என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது ஒன்றிய அரசு. இந்த விலை உயர்வு குறித்து கோவை பகுதியைச் சேர்ந்த இல்லத் தரசிகள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவர் கூறுகையில், “ஏற்கனவே அத் தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. இப் போது ஒரே அடியாக 60 ரூபாயை உயர்த்தியிருக்கிறார்கள். எங்கேயோ நடக்கும் போரை காரணம் காட்டி எங்க ளிடம் பணத்தைப் பறிப்பது எந்த வகை யிலும் நியாயம் இல்லை. ஏழை, நடுத்தர மக்கள் எப்படி வாழ முடியும்? அடுப்பு எரிவதை விட எங்கள் வயிறுதான் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் எரிகிறது. பாஜக அரசுக்கு மக்கள் நலனில் துளிக் கூட அக்கறை இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றார். இதேபோல உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா கூறுகையில், “21 நாட்கள் இடைவெளி இருந்தால்தான் சிலிண்டர் தருவோம் என்பது மக்களை பதுக்கல் பேர்வழிகளாக சித் தரிக்கும் செயல். சிலிண்டர் தட்டுப்பாடு வரும் என்று வதந்தியை பரப்பி விட்டு, இப்போது விலையையும் ஏற்றி எங்களை வதைக்கிறார்கள். தேர்த லுக்கு ஒரு முகம், தேர்தல் முடிந்த பின் ஒரு முகம் என மக்களை ஏமாற் றுவதே பாஜக அரசின் வாடிக்கையாகி விட்டது. இந்த விலை உயர்வு சாதாரண குடும்பங்களின் பட்ஜெட்டை அடி யோடு சிதைத்துவிட்டது என வேதனை யோடு குறிப்பிட்டார். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், மானிய விலையில் சிலிண்டர் வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் பரவலாக எழுந்துள் ளன. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங் கும் மோடி அரசு, சாமானியப் பெண்க ளின் சமையலறைப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் குரலாக இருக்கிறது.

குடிநீர் திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாதுசேலம், மார்ச். 9- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் விநியோக...
10/03/2026

குடிநீர் திட்டத்தை தனியார்மயமாக்கக் கூடாது

சேலம், மார்ச். 9- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் திங்களன்று சேலம் கோட்டை மைதானத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சியில் தடை யற்ற குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், பராமரிப்பு மற்றும் விநியோகப் பணி களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு தனி யார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர் வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 4,132 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை தனியா ருக்குத் தாரை வார்த்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவ சியத் தேவையாக இருக்கும் குடிநீர் விநியோகம் சீர்குலையும். கட்டண உயர்வு ஏற்படுவதுடன், முறையான விநியோகம் இருக்காது. எனவே, மாந கராட்சி நிர்வாகம் இந்த முயற்சியை உட னடியாகக் கைவிட்டு, குடிநீர் திட்டத்தை தொடர்ந்து மாநக ராட்சியே நேரடியாக நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக் கங்கள் தொடர்ந்து போராடி வருகி றது. இதன்ஒருபகுதியாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் முன்னெடுக் கப்பட்டது. சங்கத்தின் சேலம் கிழக்கு தலைவர் பிரபாகர் தலைமை ஏற்றார். இதில், மாவட்டத் தலைவர் குமார், பொருளாளர் கவின்ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

04/03/2026

ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம்!

பல்வேறு ஊழல் அல்லது முறைகேடுகளில் சிக்கியவர்களின் குடுமி பாஜக-விடம் இருக்கும் பொழுது, அவர்கள் ராஜாவை விடச் சிறந்த ராஜவிசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். அப்படி ஓர் அதீத ராஜவிசுவாசத்தைத் திருவாளர் டி.டி.வி. தினகரன் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஞாயிறன்று மதுரையில் நடந்த என் டி ஏ பொ துக்கூட்டத்தில் பேசிய மேற்படி தினகரன், “களப்பிரர்க ளின் இருண்ட ஆட்சியிலிருந்து மீட்ட கடுங்கோன் பாண்டியன் போல, திமுக-வின் இருண்ட ஆட்சியிலி ருந்து தமிழகத்தை மீட்க வந்தவர் மோடி” எனக் கூறினார்.

அவருக்குத் தளபதிகளாகத் தானும் எடப்பாடி பழனிசாமியும் உள்ளதாகவும் அவர் கூறிக்கொண்டார். எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பதைவிடத் தூக்கில் தொங்கிவிடுவேன் எனப் பேசிய தினகரன், இப்போது அந்தர் பல்டி அடித்துப் பேசுகிறார். இவர்களின் குடுமி பாஜக-வின் கையில் இருக்கும் பொழுது வேறு எப்படிப் பேச இயலும்? எனினும் களப்பிரர்களின் ஆட்சியை இருண்ட ஆட்சி எனக் குறிப்பிடுவது இவருக்கு வரலாறு தெரியவில்லை என்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்தி விட்டது. மேலும், தமிழ்நாடு குறித்த மோடியின் அக்கறை யின்மையைத் திட்டமிட்டே தினகரன் போன்ற கூட்டாளிகள் இதன் மூலம் மறைக்க முயல்கின்றனர் என்பதே உண்மை.

மோடியின் அக்கறையின்மை: விடைதெரியா கேள்விகள் மதுரைக்கே கூட மோடி அரசின் அக்கறையின்மை எவ்வளவு குரூரமானது என்பதை மக்கள் அறிவர். பல ஆண்டுகள் கடந்தும் மதுரை எய்ம்ஸ் ஏன் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை? மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது? மதுரை விமான நிலையம் அத்துணை தகுதிகள் இருந்தும் ஏன் சர்வதேச தரத்திற்கு அங்கீகரிக்கப்படவில்லை? மதுரைக்கும் அதற்கு அப்பால் உள்ள தென் பகுதிக ளுக்கும் ஏன் ஒரு மத்திய பொதுத்துறை ஆலை கூட மோடி அரசால் இதுவரை தொடங்கப்படவில்லை? ஏன் சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டது? ஏன் கீழடியும் ஏனைய தொல்லியல் ஆய்வுகளும் திட்ட மிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன? திருப்ப ரங்குன்றம் பிரச்சனையை முன்வைத்து ஏன் மத மோ தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன? திண்டுக்கல்லில் ஏன் அபிராமி அம்மன் சிலையை முன்வைத்து மத மோதல்கள் திட்டமிடப்படுகின்றன? இப்படிப் பல கேள்விகள் பதில் தெரியாமல் உள்ளன.

மேலும், கோவைக்கு ஏன் மெட்ரோ நிராகரிக்கப் ட்டது? அன்னூரில் வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை ஏன் குஜராத்திற்கு மடைமாற்றப்பட்டது? இந்தித் திணிப்பை மறுத்தால் ஏன் கல்வி நிதி மறுக்கப்படுகிறது? தமிழ்நாட்டிலிருந்து பெறும் வரிகளுக்கும் தரப்படும் நிதி ஒதுக்கீடுக்கும் ஏன் அதீத இடைவெளி? நிதி ஆணையம் ஏன் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் 170-க்கும் அதிகமான இஸ்லாமிய மற்றும் கிறித்தவ வழிபாட்டுத் தலங்கள் கைப் பற்றப்பட வேண்டும் என ஏன் சங் பரிவாரத்தினர் பட்டி யலிடுகின்றனர்? இப்படி மோடியின் அக்கறை யின்மைக்கும் சங் பரிவாரத்தினரின் மோசமான நடவடிக்கைகளுக்கும் ஏராளமான உதாரணங்கள் இருந்தும், மோடியைக் கடுங்கோன் பாண்டியனுடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பது ராஜாவைவிடச் சிறந்த ராஜவிசுவாசமின்றி வேறு என்ன? களப்பிரர்கள் ஆட்சி இருண்ட காலமா? வரலாற்று உண்மை என்ன? களப்பிரர்கள் ஆட்சி இருண்ட காலம் எனச் சொல்வ தன் மூலம் தனது வரலாற்று அறியாமையைத் தினகரன் வெளிப்படுத்தியுள்ளார்.

களப்பிரர்கள் நேர்மையான போர் முறைகளைக் கடைப்பிடிக்காமல் கொரில்லா முறை மூலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைத் தோற்கடித்தனர் எனத் தினகரன் குற்றம் சாட்டுகிறார். மண்ணுக்கும் பொன்னுக்கும் நடந்த போர்களில் மன்னர்கள் எழுதப்படாத தார்மீக நெறிகளைக் கடைப்பிடித்ததைவிட அவற்றை புறக் கணித்த உதாரணங்கள் தான் மிக அதிகம். எந்தச் சாம்ராஜ்யமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கொரில்லா போர்முறை அல்லது மறைந்திருந்து தாக்கும் போர் முறை தடைவிதிக்கப்பட்ட ஒன்று அல்ல. சிறந்த போர் முறைகளும் அர்ப்பணிப்பு மிக்க வீரர்களும் இல்லாமல் வீரமிக்க சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வீழ்த்தி சுமார் 300 ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தமிழ் மண்ணில் ஆட்சி புரிந்தது களப்பிரர்களுக்கு எளிதல்ல! களப்பிரர்கள் ஆட்சி குறித்து ஏன் பரவலாகத் தரவுகள் இல்லை? களப்பிரர்கள் வருவதற்கு முன்பே தமிழ் மண்ணில் சமணத்திற்கும் பிராமணியத்திற்கும் முரண்பாடுகள் உச்சத்தில் இருந்தன.

‘தென்னிந்திய சமணம் குறித்த ஆய்வுகள்’ (Studies in South Indian Jainism) எனும் நூலில் ஆய்வாளர்கள் எம்.எஸ். ராமசாமி அய்யங்காரும் சேஷகிரி ராவும் குறிப்பிடு வது போல, கி.பி. மூன்றாவது மற்றும் நான்காவது நூற்றாண்டுகளில் பிராமணிய மற்றும் ஏனைய இந்து ஆவணங்கள், சமண சமயம் என்ற ஒன்று இருந்தது என்பதையே புறக்கணித்தன. நான்காவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில் பிராமணியம் மிகவும் வன்மமான அணுகுமுறையைச் சமண சமயத்திற்கு எதிராக வெளிப்படுத்தியது. இந்த முரண்பாடுகள் எந்த அளவுக்கு இருந்தன எனில், சமண சமயத்தைச் சார்ந்த வஜ்ர நந்தி என்பவரின் பெரு முயற்சியால் தனியாக ஒரு “திராவிட சங்கத்தை” உருவாக்கும் அளவுக்கு இருந்தது. களப்பிரர்கள் வலுவாகச் சமணத்தை முன்னெ டுத்தனர்; பௌத்தம் மற்றும் ஆசீவகத்தையும் ஆதரித்தனர். அதே சமயம் சைவ, வைணவப் பிரி வினருக்கு எதிராகச் சில நடவடிக்கைகளையும் எடுத்தனர்.

குறிப்பாகப் பிராமணர்களுக்கு “பிரம்மதே யம்” எனும் பெயரில் தரப்பட்ட நிலக்கொடைகளைப் பறித்து அரசுச் சொத்துக்களாக மாற்றினர். இத்த கைய செயல்கள் காரணமாகவே பின்னாட்களில் மீண்டும் புத்துயிர் பெற்ற சைவமும் வைணவமும் அவர்களை ஆதரித்த மன்னர்களும் களப்பிரர்களின் ஆட்சி குறித்த தரவுகளை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்தனர். இலக்கியமும் பொருளாதாரமும் செழித்த காலம் களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம் மகத்தான வளர்ச்சி பெற்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய பதினோரு நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம் பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை எனக் கருதப்படுகிறது. மேலும் களப்பிரர்கள் காலத்தில் நீர் நிலைகளைப் பாதுகாக்க நவீன முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், பூமிக்கடியில் மழை நீரைச் சேகரிக்கும் முறைகளை உருவாக்கினர் எனவும், இயற்கையை மதிக்கத்தக்க நடைமுறைகள் உருவாக்கப்பட்டன எனவும், அரிக்க மேடு துறைமுகம் வழியாகப் பரவலான வர்த்தகம் நடந்தது எனவும் ஆய்விதழ்கள் குறிப்பிடுகின்றன.

நவீன தொழில்நுட்பங்கள் உருவானதும் இலக்கி யங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தையும் எப்படி இருண்ட காலம் என அழைக்க முடியும்? அது இருண்ட காலம் அல்ல; சைவத்தையும் வைணவத்தையும் எதிர்த்த காரணத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம்! எனவே இப்போதும் தமிழ்நாடு இருண்ட காலத்திலும் இல்லை; மோடி தமிழ்நாட்டை மீட்க வந்த கடுங்கோன் பாண்டியனும் இல்லை. நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தல்கள் மதவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையே நடக்கும் போர். தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நடக்கும் போர். மோடியையும் அவரது ராஜவிசுவாசிகளையும் தோற்கடிக்கும் போர்.

Feb 12 அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் உடுமலைப்பேட்டை LIC அலுவலகம் முன்பு.
12/02/2026

Feb 12 அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் உடுமலைப்பேட்டை LIC அலுவலகம் முன்பு.

Address

Gudimangalam
Udumalpet

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Gudimangalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share