10/08/2026
சில நேரங்களில் நம்மை சுற்றியிருப்பவர்களே நம்மை புறக்கணிக்கலாம்… நம்மை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். 💔
தாவீதையும் அவன் சொந்த குடும்பம் புறக்கணித்தது. ஆனால் மனிதர்கள் பார்க்காத இடத்தில்கூட தேவன் தாவீதை பார்த்துக்கொண்டிருந்தார்! 🙏
“வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.” — சங்கீதம் 118:22
நீ இன்று தள்ளப்பட்டதாக உணர்ந்தாலும், உன் கதை இன்னும் முடியவில்லை! மனிதர்கள் உன் மதிப்பை தீர்மானிக்க முடியாது. தேவன் உன்னைத் தேர்ந்தெடுத்திருந்தால், சரியான நேரத்தில் உன்னை உயர்த்துவார். 👑❤️