Oliravan Foundation

Oliravan Foundation OLIRAVAN FOUNDATION {Govt REG NO:243/12}
is a Tiruvarur,(TN,India)

Make the world a better place.

OUR MOTTO:Women Empowerment, Public Awarness, Rural Education & Sports Development, Rural Health Awarness Programme & Agrobased Industrial Renaissance...WE ARE MAKING GREEN AND CLEAN CITY...
OUR FUTURE GOAL:Free Education School for Physically Disabled Student

13/01/2026
நம் முப்படைகள் ஏன் வெவ்வேறு மாதிரி சல்யூட்(salute) செலுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியுமா ???நம் முப்படைகள் ஏன் வெவ்வ...
13/01/2026

நம் முப்படைகள் ஏன் வெவ்வேறு மாதிரி சல்யூட்(salute) செலுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியுமா ???

நம் முப்படைகள் ஏன் வெவ்வேறு மாதிரி சல்யூட்/வீரவணக்கம்(salute) செலுத்துகிறது என்று காண்போம்.


நம் முப்படைகளான இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கப்பற்ப்படை ஆகியவற்றின் உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும்,அவர்களின் போர் முறையும் ஒன்றுகொன்று வித்தியாசமானது,அவர்களின் பதவிகளின் தரமும் (Rank) வெவ்வேறாக இருக்கும், அது மட்டும்மில்லாமல் அவர்கள் வீரவணக்கம் செலுத்தும் முறையும் வெவ்வேறாக இருக்க காரணம் என்ன என்று வாருங்கள் பார்க்கலாம்.

சல்யூட் அடிப்பது என்பது மரியாதை செலுத்துவதாகும்,இந்த சல்யூட் ஒரு தனிமனிதனுக்காக அளிக்கப்படவில்லை,அந்த நபரின் சாதனைகளுக்காகவும்,அவர் அணிந்திருக்கும் உடையின் மதிப்பிற்கும்,அவருடைய பதவியின் பெருமைக்காகவும் அளிக்ககூடிய ஒரு சிறப்பான அங்கீகாரம் ஆகும்.இந்தியாவின் ஒவ்வொரு படையிலும் எவ்வாறு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் வரலாற்றையும் காண்போம்.


இந்திய இராணுவம்
உள்ளங்கை திறந்த நிலையில் முனோக்கி இருக்க வேண்டும்

எப்படி:
அனைத்து விரல்களும் ஒன்றுடன் ஒன்று கட்டைவிரலுடன் இணைந்திருக்க வேண்டும், நடுவிரல் கண் புருவத்தை தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

காரணம்:
போர் சமயத்திலும் இயற்க்கை பேரிடர்களின் போதும் தங்கள் இன்னுயிரையும் கொடுக்கும் உன்னத வீரர்களை கொவ்ரவப்படுத்தவும் அதுமட்டுமின்றி சல்யூட் அடிக்கும் போது தான் எந்தவிதமான தீய எண்ணத்துடனும் இல்லை மற்றும் நான் என் கையில் எந்த வித ஆயுதங்களையும் மறைத்து வைத்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும் இந்திய இராணுவத்தில் இவ்வாறு சல்யூட் அடிக்கப்படுகிறது.


இந்திய கடற்படை:
உள்ளங்கை திறந்த நிலையில் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

எப்படி:
கையை திருப்பிய நிலையில் உள்ளங்கை தோள்பட்டையை
நோக்கி இருக்குமாறு தலைக்கு 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாக இருக்க வேண்டும்.

காரணம்:
அந்த காலத்தில் கப்பலில் வேலை செய்யும் பணியாளரின் கைகளில் கிரீஸ், எண்ணெய்க்கறை போன்றவை படிந்திருக்கும்.அந்த கறையோடு தன் உயரதிகாரிக்கு சல்யூட் அடித்தால் அது அவரை அவமதிப்பதாகும்.எனவே தான் சல்யூட் அடிக்கும்போது இந்திய கடற்ப்படை வீரர் தன் உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்துள்ளார்.

இந்திய விமானப்படை:
உள்ளங்கை திறந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக தரையை நோக்கி இருக்க வேண்டும்.

எப்படி:
கைகளை திறந்த நிலையில் ஒன்றோடு ஒன்று இணைத்து 45 டிகிரி கோணத்தில் தரையை நோக்கி இருக்க வேண்டும்.இந்திய விமானப்படை சல்யூட் மற்றும் இந்திய கப்பற்ப்படையின் சல்யூட்டிற்கு இடையில் இருக்க வேண்டும்.

காரணம்:
பண்டையகாலத்தில் இந்திய விமானப்படை நம் இராணுவத்தின் சல்யூட் அடிக்கும் முறையையே பயன்படுத்தி வந்தது. ஆனால் விமானப்படை தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று மார்ச் 2006 இந்த புதிய முறையை பின்பற்ற தொடங்கியது.

பதிவு பயன்உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்..நம் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ள இந்த செய்தியை share செய்யுங்கள்..
#ஜெய்ஹிந்த்

2026 ல் இருந்து திருவாரூர் ரயில் சந்திப்பில் மாற்றம் பெரும் புதிய இரயில் நேர அட்டவனை.
02/01/2026

2026 ல் இருந்து திருவாரூர் ரயில் சந்திப்பில் மாற்றம் பெரும் புதிய இரயில் நேர அட்டவனை.

02/01/2026

சிகரெட் மீது கூடுதல் வரி - பிப்ரவரி 1 முதல் அமல்

சிகரெட் மீது கூடுதல் கலால் வரியை விதித்த‌ மத்திய நிதி அமைச்சகம்

1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிப்பு

40% ஜிஎஸ்டி மீது கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு

கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

09/12/2025

URGENT:
A+ Blood Donor Needed!

A patient need of A positive (A+) blood at the Government Medical College and Hospital, Thiruvarur. Your donation can save a life.

Blood Group Required: A +ve (A positive)
Hospital: Government Medical College and Hospital, Thiruvarur (Collectorate Campus, Vilamal)

Patient Name: Mani.R

Attending Contact Person:Rajesh
Contact Numbers:8072384147

இன்று சர்வதேச தொண்டு தினம்.
05/12/2025

இன்று சர்வதேச தொண்டு தினம்.

 #ஆரோக்கியமே_ஆனந்தம்!யோகப் பயிற்சியை நாள்தோறும் பழகவும் அதனால் ஏற்படும்நன்மைகள் அறிவோம்  #ஆரோக்கியமான_பழக்கவழக்கங்கள்: ந...
04/12/2025

#ஆரோக்கியமே_ஆனந்தம்!
யோகப் பயிற்சியை
நாள்தோறும் பழகவும்
அதனால் ஏற்படும்
நன்மைகள்
அறிவோம்

#ஆரோக்கியமான_பழக்கவழக்கங்கள்: நினைவாற்றல், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் பிற உடற்பயிற்சிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கிறது.
#அறிவாற்றல்_செயல்பாடு: அறிவாற்றல் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்துகிறது மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துகிறது.
#ஆன்மீக_வளர்ச்சி: உடல் தகுதியுடன் ஆன்மீக ஞானத்தையும் வளர்க்க உதவுகிறது.

ஒளிரவன் யோக மையம்
துர்க்காலயா ரோடு திருவாரூர்.
97887 72591

29/11/2025

வணக்கம் ...இரவு நேரத்தில் பலத்த
காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால்,

1.நம்முடைய வீட்டில் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லாமல் காலியாக வைக்காதீர்கள்.
தண்ணீரை நிரப்பி வைக்கவும் மதியம் மாலை நேரத்தில் ( அனுபவம் கஜா புயல்..) முன் எச்சரிக்கையுடன் தண்ணீர் தொட்டியை நிரப்பவும்.

2.மின்சாரம் இல்லாமல் இருந்தால் ...,
முன் எச்சரிக்கையுடன் மெழுகுவர்த்தி,
விளக்குகள் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

3.தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

4.தங்களது அலைபேசியில் full charge நிரப்பி வைக்கவும் ( ஆனால்,
கண்டதையும் பார்த்து charge யை குறைத்து விட வேண்டாம்.).
5. வீட்டுக்கு தேவையான பால் மற்றும் உணவுக்கு தேவையான பொருட்களை இரண்டு மூன்று நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கம் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
6. மழை விட்டிருக்கும் நேரத்தில் தேவையான அளவு தேங்கி இருக்கும் நீரையும் இடைச்சலாக உள்ள மரக்கிளைகளை பாதுகாப்புடன் வெட்டி விடவும்.
7. தங்கள் உதவிக்கு தேவையான தொடர்பு எண்களை ஒரு பேப்பரில்
குறித்து வைத்துக் கொள்ளவும்.
இவன்
கராத்தே🥋குணா..........................................

மேலும் உதவிக்கு
மாஸ்டர் இரா.குணசேகரன் நிறுவனர்/ தலைவர்
ஒளிரவன் பவுண்டேஷன்
78,துர்காலயா ரோடு திருவாரூர்.
97887 72591

இதன் பெயர் plumeria, frangipani என்பது.மிக்க நறுமணம் கொண்டது. மலாய் மொழியில் இதன் பெயர் பூங்கா கெம்போஜா (bunga kemboja)....
25/11/2025

இதன் பெயர் plumeria, frangipani என்பது.
மிக்க நறுமணம் கொண்டது.
மலாய் மொழியில் இதன் பெயர் பூங்கா கெம்போஜா (bunga kemboja).
இலையை பறித்தால் பால் வடியும். Apocynaecea குடும்பத்தை சேர்ந்தது.

21/11/2025

எதுவும் நிரந்தரமல்ல
ஆகவே
எதற்காகவும்
மன உளைச்சல்
அடையாதீர்கள்...

சூழ்நிலை
எத்தனை மோசமானதாக
இருந்தாலும்
அது மாறும்...

மாற்றம் ஒன்றே மாறாதது
என்பதே
இயற்கையின் நியதி

நமக்காக,
நாளைக்காக.

மகிழ்வாய் இருப்போம்!
மகிழ்வித்து இருப்போம்!!

நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது மனம்.மனமே புத்தி;புத்தியே மனம்.பொறாமை கொள்ளும் போது மனம்.அது தவறு என்பது புத்தி.ஆசை கொள்...
05/10/2025

நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது மனம்.
மனமே புத்தி;
புத்தியே மனம்.

பொறாமை கொள்ளும் போது மனம்.
அது தவறு என்பது புத்தி.

ஆசை கொள்ளும் போது மனம்.
அது தவறு என்பது
புத்தி.

கோபம் கொள்ளும் போது மனம்.
அது தவறு என்பது புத்தி.

தீய சொற்களைப் பயன்
படுத்தும் போது மனம்.
அது தவறு என்பது புத்தி.

இவ்வாறு மனதை ஆய்ந்து தீயவற்றை
நீக்க உண்டாவதே
மனத்தூய்மை.

Address

78, Durgalaya Road
Tiruvarur
610001

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5:30pm

Telephone

+919788772591

Alerts

Be the first to know and let us send you an email when Oliravan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Oliravan Foundation:

Share