13/08/2026
,இரவோடு இரவாக அகற்றப்பட்டது விதிமீறிய சிக்னல் விளம்பர போர்டுகள்.
*திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் போராட்டம் எதிரோலியாக அதிரடியில் இறங்கி அகற்றிய நெடுஞ்சாலைத்துறை*
*இரண்டு ஆண்டுகள் 60க்கும் மேற்பட்ட புகார்கள்*
*ஆட்சி மாறியது காட்சியும் மாறியது*
திருப்பூர் மாவட்டம், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள சாலைகளில் நீதிமன்ற உத்தரவை மீறி சாலை சிக்னல் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்ச்சியாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஈ.பி.அ.சரவணன் 60க்கும் மேற்பட்ட புகார் மனு அளித்தார்.
ஆனால் மாநகராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை துறை, உள்ளிட்ட துறைகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால், 13-ம் தேதி முதல் நுகர்வோர் அமைப்பே களமிறங்கி அவற்றை அகற்றும் என போலீசாரிடம் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 12ம் தேதி கோட்ட செயற்பொறியாளர் மற்றும் உப கோட்ட செயற்பொறியாளர் ஆகியோர் விதிமீறிய விளம்பர பலகைகளை முழுமையாக அகற்றுவதாக உறுதியளித்தனர்.
அதிகாரப்பூர்வ உறுதியை ஏற்று, நுகர்வோர் அமைப்பினர் தங்களின் போராட்ட முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் 12ம் தேதி இரவு முழுவதும் திருப்பூர் பகுதிகளிலுள்ள ஊத்துக்குளி சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை சிக்னலில் வைக்கப்பட்டிருந்த அனுமதியில்லாத விதிமீறிய விளம்பர போர்டுகளை கிரைன் வாகனம் மூலமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஈ.பி.அ.சரவணன் கூறுகையில் "எங்களுடைய சங்கம் சார்பாக தொடர்ச்சியாக விதிமீறிய சாலை சிக்னலில் ஆபத்தை ஏற்படுத்தும் வகைகள் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை முழுமையாக அகற்ற வேண்டுமென புகார் மனு அளித்து வந்த நிலையி்ல் எங்களுடைய சங்கம் சார்பாக 12ம் தேதி முதல் சிக்னல் விளம்பர போர்டுகள் அகற்றும் போராட்டம் அறிவித்த நிலையில் இரவோடு இரவாக அதிரடியாக விளம்பர போர்டுகளை அகற்றி வருகின்ற நெடுஞ்சாலை துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" இவ்வாறாக அவர் தெரிவித்தார்.
- நன்றி Saran Tneb.