10/05/2026
*நன்றி அறிவிப்பு!*
"மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்!" - நபிமொழி
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நெல்லை மாவட்டம் சார்பாக
உணர்வாய் உன்னை மாணவ,மாணவிகளுக்கான 11 நாள் வாழ்வியல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25 முதல் மே 5 வரை நடைபெற்றது.
இந்த நன்மையான பணிகளுக்காக உதவிகளை செய்யுமாறு உங்களிடம் கேட்டு இருந்தோம்.படைத்த இறைவனிடம் நன்மையை எதிர்பார்த்த வண்ணம் நீங்கள் அனைவரும் உங்கள் பங்களிப்பை செய்து இருந்தீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.....
மாணவச் செல்வங்களுக்கும்,
மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுக்கும்,
ஆசிரியர்களாக பணியாற்றிய சகோதர, சகோதரிகளுக்கும்,
பொருளாதாரமாக வழங்கி உதவிய நல்ல உள்ளங்களுக்கும்,
மாணவ, மாணவிகளுக்கான கிப்ட் திருக்குர்ஆன் தமிழாக்கம் வகைக்காக உதவிய உள்ளங்களுக்கும்,
உணவுப் பொருட்களாக வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,
இது போன்று பல வகைகளில் (உடலாலும்,பொருளாலும்,
பொருளாதாரத்தாலும்) உதவிகளை செய்த அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! இம்மையிலும் மறுமையிலும் நம் அனைவருக்கும் நற்கூலியை வழங்குவானாக!
நீங்கள் செய்த உதவிகளின் மூலமாக பல நன்மையான காரியங்களை மாணவ,மாணவிகளுக்கு கற்றுத்தர நம்மால் முடிந்தது என்பதை இறைவனுக்கு நன்றி கூறியவர்களாக தெரிவித்து கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹ் ஃகைர்!
இப்படிக்கு,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நெல்லை மாவட்டம்