26/12/2025
மத்திய அரசு நலத்திட்டத்தில் இன்று பெண்களுக்கான திட்டம் :
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா ( PMMUV ) திட்டம் :
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிரமத்தை குறைக்க மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதல் குழந்தைக்கு 5000 ரூபாய் உதவித்தொகை, இரண்டாவது குழந்தைக்கு 6000 உதவித்தொகை.
எவ்வாறு பதிவு செய்வது :
அங்கன்வாடி மையத்தில் படிவம் 1 A பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால்
https://www.wcd.gov.in/pmmvy-dashboard
இந்த இணையதளத்தில் பதிவிடலாம்.
தேவையான ஆவணங்கள் :
1. தாய், சேய் பாதுகாப்பு அட்டை ( MCP Card )
2. ஆதார் கார்டு
3. ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு
4. Post office A/c
5. இரண்டாவது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்
இதனை பயன்படுத்தி மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.