08/11/2023
தவமாய் தவமிருந்து படத்துல ஒரு காட்சி வரும், தீபாவளிக்கு எப்படியும் நம்ம அப்பா நமக்காக புது துணியும் , வெடியும் வாங்கி வந்துருவாருனு தெருவுல தீபாவளி கொண்டாடுற மத்த பிள்ளைங்கள எல்லாம் சோர்ந்த முகத்தோட பாத்துட்டு இருப்பாங்க அந்த பசங்க.
தன் குடும்பத்தோட சேர்ந்து தீபாவளியை எல்லார போல நாமளும் கொண்டாடிரனும், அந்த பசங்க முகத்துல உருவாகுற ஒரு ஏக்கம்
இங்க நிஜ வாழ்க்கையில, பல ஆயிரம் குழந்தைகள் அனுபவிக்குற ஒன்னு.
தீபாவளி திருநாள் ஏதோ ஒரு மதம் அது சொல்லும் அசுர வதம் போன்ற கதைகள் சார்ந்து உருவாகி இருந்தாலும்.
இந்த விழா இன்று மத சார்பற்ற எல்லோரும் கொண்டாடும் ஓர் மகிழ்வின் கொண்டாட்டமாகவே மறு உருவெடுத்துள்ளது, குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்வின் நாள் அவ்ளோதான்.
இந்த ஒரு நாளின் கொண்டாட்டம் வாய்ஸ் இல்லம் ரேவதிக்கும் சரி , Bells Ground வின்சிகும் சரி, நகம்மையார் இல்லம் குழந்தை பானுவுக்கும் கிடைக்கனும்ன்றதுதான் நம்ம PSR தொடர்ச்சியா முன்னெடுத்து வர "சிறார் தீபாவளியின்" முக்கிய நோக்கம்.
10 , 15 குழந்தைகள்ள ஆரம்பிச்ச இந்த மகிழ்வின் ஒளியின் பயணம், தன்னுடைய 12 வது ஆண்டு கிட்டதட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள ஒரே இடத்தில் ஒன்று கூட வைச்சு மகிழ்விச்சுருக்குனு நினைக்குறப்ப மனசு மத்தாப்ப மிளிருது.
இந்த மகிழ்வின் விழா ஒரு திருவிழாவ இன்னைக்கு மாற காரணம், ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பாவா , அம்மாவா , அண்ணனா, அக்காவா நாங்க இருக்கோம்னு பொருப்பெடுத்து பங்களித்த மக்களாகிய நீங்க தான்.
ஆமாங்க,
இது சாத்தியமானது உங்களால் மட்டுமே.
ஆயிரம் குழந்தைகளுக்கு பொருப்பெடுத்து ஒரு குழந்தைக்கு 1300 ரூபா செலவு பன்ன போறோம்னு ஆரம்பத்துல யோசிக்குறப்ப , மலைப்பா தெருஞ்ச விசயம்
ஆயிரம் தானே விடு அதுல 10 என்ட கொடு , 20 என்ட கொடுனு ஆளாளுக்கு தங்களோட பங்களிப்ப தந்து அவங்க அவங்க குடும்ப விழாவ நினைச்சதோட விளைவு
மலைப்பா தெரிஞ்ச விசயத்த , மொத்த மலைகோட்டை மாநகருக்கே தெரியும் படி ஒரு மாபெரும் திருவிழாவா மாற்றி அமைச்சுருக்கு.