24/05/2026
குர்பானிப் பிராணியின் தோல் உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதைத் தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.
அறிவிப்பவர் : அலீ(ரலி).
நூற்கள் : புகாரி (1716), முஸ்லிம் (2320)
தோல்கள் ஏழைகளுக்குச் சேரவேண்டியது என்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை கூலியாகக் கொடுப்பதைத் தடுத்து தர்மம் செய்யுமாறு கட்டடையிட்டுள்ளார்கள்.மதரஸா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் இதை வழங்காமல் இருப்பது நல்லது. இது அல்லாத மற்ற பணத்தை அவற்றிற்கு வழங்கலாம்.
நம்பிக்கைக்குரிய இயக்கம் ஏழைகளுக்குத் தருவதாகக் கூறி தோல்களை வாங்கினால் அவர்களிடத்தில் தோல்களை ஒப்படைப்பது தவறல்ல.
இறைவனின் கிருபையால் கடந்த ஏழு வருடமாக குர்பானியின் தோல் மற்றும் எலும்பு மூலம் பெறப்பட்ட தொகையானது ஏழை எளிய மக்களின் மருத்துவ மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.
இந்த வருடமும் ஏழைகளின் மருத்துவ உதவிக்காக தோல் தர விரும்பும் சகோதரர்கள் மட்டும் நமது தாருல் இல்ம் வாழ்வியல் பயிற்சி மையத்தில் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நெல்லை மாவட்டம்
டவுண் கிளை
8778875509
9445674866
9092654002