"New Life Society Trust" is a Public Charitable Trust founded by Bro. Mohan C Lazarus
06/10/2024
இன்று (06.10.24) மியான்மார் தேசத்தில் உள்ள Thanlian என்ற இடத்தில் உள்ள Full gospel Church வளாகத்தில் வைத்து 400 ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்கள் சகோதரர். மோகன் சி லாசரஸ் மற்றும் டாக்டர். அன்பு ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.
Dapon-என்ற இடத்தில் உள்ள 65 ஏழை குடும்பங்களுக்கு இயேசு விடுவிக்கிறார் குழுவினர் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.
06/09/2024
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் மற்றும் புதுவாழ்வு சங்கம் அறக்கட்டளை சார்பாக கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு பேரிடர் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக கடந்த மாதம் 20 நபர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான பண உதவிகள் செய்யப்பட்டது.
இந்த மாதம் செப்டம்பர் 4, 5ம் தேதிகளில் உயிர்ச்சேதங்களையும், வீடு சேதங்களையும் அடைந்த சுமார் 85 குடும்பங்களுக்கு பண உதவிகள் செய்யப்பட்டது.
18/05/2024
தூத்துக்குடி மாவட் டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், நாலுமாவடி புதுவாழ்வு சங்கமும் இணைந்து பெண்களுக்கான 2 ஆம் ஆண்டு கோடை கால இலவச கபடி பயிற்சி முகாம் நாலுமாவடி ஏலீம் கார்டன் வளாகத்தில் மே 9 முதல் 18ம் தேதி வரை நடந்தது. இப்பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 112 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 6 சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கபடி பயிற்சி அளிக்கப்பட்டது.
நாலுமாவடியில் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு அமைச்சர் அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.
10/01/2024
திருநங்கைகளுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த "ஓட்டுநர் பயிற்சி வாகனம்" வழங்கி சமூக சேவை
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கம் சார்பில் அறக்கட்டளை நிறுவனமான புதுவாழ்வு சங்கம் சார்பில் அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் அன்பு ராஜன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் திருநங்கை சுபப்பிரியாவுக்கு ஓட்டுநர் பயிற்சி வாகனத்தை நன்கொடையாக வழங்கினார்.
இந்த பயிற்சி வாகனம் மூலம் திருநங்கைகளுக்கும் ஏழை எளிய பெண்களுக்கும் ஓட்டுநர் பயிற்சி வழங்கி அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஓட்டுநர் பயிற்சி பணிக்கு வேலை வாய்ப்பு பெற்று தர உதவி செய்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல இந்த நற்பணியை செய்வதாகவும் இதன் மூலம் வாழ்க்கையின் அடித்தட்டில் தனது சொந்த குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள் முன்னேறி அவர்களும் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வர ஏதுவாக இருக்கும் எனவும் இதுபோன்று திருநங்கைகளுக்கும் ஏழை எளிய பெண்களுக்கும் தொழில் தொடங்க பல்வேறு உதவிகளை தூத்துக்குடியில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் இதுபோன்று செய்ய வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்
மேலும் இதுபோன்று திருநங்கைகளுக்கு கடந்த 15 வருடங்களாக பல்வேறு நலத்திட்டங்கள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கத்தின் சார்பில் செய்து வருவதாகவும் அறங்காவலர் டாக்டர் அன்பு ராஜன் தெரிவித்தார்
இந்த உதவியை பெற்றுக் கொண்ட திருநங்கை சுபப்பிரியா தான் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக மின்சார உறுதி இயக்கும் பணியாளராக பணியாற்றி வருகின்றேன் தற்போது என்னை போன்ற திருநங்கைகள் வாழ்வில் உயர்வதற்கு அவர்களும் என்னை போன்று ஓட்டுனர்களாகி பல்வேறு பணிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவியை நாலுமாவடி ஏசு விடுகிறார் ஊழிய நிறுவனத்திடம் கேட்டேன் அவர்கள் தற்போது எனக்கு இந்த வாகனத்தை தந்துள்ளார்கள் இதன் மூலம் என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு ஓட்டுனர் பயிற்சி அளித்து அவர்களை மாநகராட்சி மற்றும் பல்வேறு பணி இடங்களுக்கு பணி செய்ய உதவிகள் வாங்கிக் கொடுப்பேன் எனவும் இதன் மூலம் என்னைப் போன்ற திருநங்கைகள் வாழ்வில் உயர வழிவகை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
இந்த பயிற்சி வாகனத்தின் சாவியை புதுவாழ்வு சங்கத்தின் அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திருநங்கை சுபப்பிரியாவிடம் ஒப்படைத்தார்
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செய்தி தொடர்பு அலுவலர் ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் மேலாளர் செல்வகுமார் சிறப்பாக செய்திருந்தார்.
16/12/2023
6500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி ! | இயேசு விடுவிக்கிறார் | Good Samaritan▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬For 24*7 ...
Be the first to know and let us send you an email when New Life Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
New Life Society is a charitable, social and non-profitable organization working towards the upliftment of the poor and needy in the society with a focus to help them with Social Assistance (Assistance of medical, educational humanitarian aids to the affected) and Social Action (Training and employment) along with a patriotic vision to sow seeds in the young minds for the preparation of a prosperous and bright Nation - India.
Founder’s Desk
Founded by Bro. Mohan C Lazarus with the zeal to contribute to the empowerment of the destitute, The New Life Society, the social service wing of Jesus Redeems Ministries rose to action. It started with the Christ-Centred vision as written in the book of Matthew 25:40 “..whatever you did for one of the least of these brothers and sisters of mine, you did for me”. The society works vehemently towards showcasing the love of God, by extending support to the poor and needy in all ways possible
Vision
To provide health care, educational support, disaster relief and various other social help to the needy, thereby, positively impact the lives of millions of underprivileged.
Mission
To be the front-runner in supporting the needy and downtrodden by helping them live a happy life.
To empower our beneficiaries towards growth and mould them into a source of change to help their neighbourhood and society.