03/06/2026
இன்று (03.06.2026) கருணைக்கடல் அறக்கட்டளை கடையம் மற்றும் விஸ்வதர்ம வர்த்தினி டிரஸ்ட், திருநெல்வேலி இணைந்து நடத்திய கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா மிகுந்த மகிழ்ச்சியுடனும், சிறப்புடனும் நடைபெற்றது.
மாணவர்களின் முகங்களில் தெரிந்த புன்னகையும், பெற்றோர்களின் மனநிறைவும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் வாழ்த்துக்களும் எங்களது சேவைப் பயணத்திற்கு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளன.
இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்கள் பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு குழந்தையின் கல்விக்கு வழங்கப்படும் சிறிய உதவியும், அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த உயர்ந்த பணியில் எங்களுடன் கைகோர்த்த ஒவ்வொருவரும் இந்த நற்செயலின் நண்பர்கள்
எங்களது சமூக நலப் பணிகள் தொடர்ந்து வளரவும், மேலும் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றவும் தங்களது அன்பும் ஆதரவும் என்றும் தொடர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
"கருணை கொண்ட இதயங்கள் இருக்கும் வரை, மனிதநேயம் வாழும்..."
🌹 மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்! 🌹
அன்புடன்
கருணைக்கடல் அறக்கட்டளை கடையம்