19/03/2026
துளி துளியாய் செய்வோம்…!!!
நிகழ்வு - 507
நாள் - 08/03/2026
நமது துளி இலவச TNPSC பயிற்சி வகுப்பு வாழப்பாடி ஸ்ரீ தியாகராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 9:00 to 11:00 வரை தேர்வுகள் நடைபெற்றது. திருப்புதல் பயிற்சி மாணவர்களுக்கு 9:00 to 12:00 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது.
அனைத்து மாணவ மாணவிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை வகுப்புகள் நடைபெற்றது...
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடப்படும் இடைவேளையில் (Snacks Time Break) தேநீருடன் பஜ்ஜி தின்பண்டமும் சேர்த்து வழங்கப்பட்டது...
துளி இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு - இன்றைய தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டி ஊக்குவித்து பரிசுகள் வழங்கப்பட்டன... இன்று மகளிர் தினம் என்பதால் நமது துளி குழு அன்பர் வாழப்பாடி கவுன்சிலர் திருமதி லட்சுமி அவர்கள் நேரடியாக நமது வகுப்பிற்கு வந்து மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, நமது குழுவிற்கு ₹ 2000/= நன்கொடை வழங்கினார்... அவருக்கு நமது துளி அறக்கட்டளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்....
இன்றைய தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 7 மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வாழ்த்தி வழங்கப்பட்டது...
அனைத்தும் முற்றிலும் இலவசமே!...
தாங்களும் துளி குழுவில் இணைந்து சேவைகளில் பங்கு பெற விரும்பினால் 9790397100 என்று எண்ணிற்கு தங்களது பெயர், பணி விவரம் மற்றும் முகவரி ஆகியவை அனுப்பி whatsapp குழுவில் இணைந்து கொள்ளலாம்... மற்ற விவரங்கள் தங்களது எண்ணிற்கு whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும்
#துளி #துளி_அறக்கட்டளை #அறம் #சிறுதுளி #பெருவெள்ளம் #கல்வி #சேவை #டிஎன்பிஎஸ்சி ிற்சி