மக்கள் பாதை புதுக்கோட்டை

மக்கள் பாதை புதுக்கோட்டை இது திரு உ சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் வழ? Company Overview
Makkalpathai is a social reformation organisation for Tamilnadu.

Social reformation for Tamil Community

General Information
Makkal Pathai is formed under the guidance of Mr. Sagayam IAS and it is run by group of socially responsible people in the aim of bringing positive and good change in the Tamil Society.

13/07/2025

13/07/2025 பதிவு
வணக்கம் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து . சமூக செயற்பாட்டளர் பொன்னுசாமி

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த வயதான அக்கா தம்பி பார்வையற்ற மாற்று திறனாளிகள் உதவி கேட்டு சகோதரர் கரம்பக்குடி விஜயராஜா அவர்களை தொடர்பு கொண்டு எங்கள் இருவரின் வாழ்வதாரத்துக்கு ஏதாவது உதவி செய்ய கேட்டு கொண்டதன் அடிப்படையில் அந்த குடும்பத்தை நேரில் சந்திப்பதற்காக சென்றோம் . அப்போது தார்ப்பை போத்திய குடிசை வீட்டில் பார்வை இல்லா வயதானா அக்கா தம்பி இருவரும் வசித்து வருகின்றனர் அவர்களிடம் உங்களுக்கு என்ன மாதிரியானா உதவி வேண்டும் என்று கோட்டோம் .

அவர்கள் அரசு கொடுக்கும் உதவி தொகை மாதம் 1500 இருவருக்கும் வருகி றது . அது சாப்பாட்டுக்கும் மருத்துவ தேவைக்கும் போதுமானதாக இல்லை. அதனால் அடுத்தவரின் உதவியை எதிர்பாக்கும் சூழளுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் நிறந்தரமா ன வாழ்வாதாரதிற்கு எங்களுக்கு ஆடுகள் கொஞ்சம் வாங்கி கொடுத்தால் அதை அருகில்
உள்ளவர்களின் உதவியோட நாங்களும் அதை பராமரித்து எங்கள் வாழ்வதாரத்தை பெருக்கி கொண்டு. வாழ வழி கொடுங்கள் என்று கேட்டார்கள்.
அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உங்களால் இயன்றதை செய்து உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டு காணொளி வாயிலாக மற்றும் உள்ள அலைபேசி எண் கொண்டு உதவியை சமூக வலைத்தில் மற்றும் நண்பர்கள். உறவுகள்.மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னோடு பயணிக்கும் அன்பு சகோதர சகோதரிகள். மற்றும் மக்கள் பாதை இயக்க உறவுகள் கட்சி சார்ந்து. சாரதா இயக்க தோழர்கள். அனைவரின் உதவிகளோடு. இன்று அவர்களுக்கு ஆடுகள் வாங்கி கொடுத்ததில் . மிகவும் சந்தோசமா கவும். முழு திருப்தியும் உள்ளது. இந்த உதவி உங்களால் தன் அவர்களுக்கு சென்றடைந்துள்ளது உறவுகளே.
என்றும் உங்களோடு ஒருவனாய் பயணிப்பதில் பெருமையாகவும்.. உள்ளது.

*பார்வையில்லா மாற்று திறனாளிகளுக்கு துணை நின்ற அனைவர்க்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்*

*பிறருக்கு உதவும் உயர்ந்த உள்ளம் உள்ளவர்கள் இருக்கும் வரை ஏழை எளியவர்களின் வாழ்வு சிறக்கும் என்பதில் மாற்றம் இல்லை இந்த பூமியில்.*

*இயன்றதை செய்வோம்* *இல்லாதவர்க்கும். இயலாவர்களுக்கும்*

நன்றியுடன்
பொன்னுசாமி
புதுக்கோட்டை மாவட்டம்
6369696715

02/07/2025

01//07/2025 பதிவு
வணக்கம் அனைவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில இருந்து . சமூக ஆர்வலர் பொன்னுசாமி

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றியம் குழந்திரான்பட்டு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த வயதான அக்கா தம்பி பார்வையற்ற மாற்று திறனாளிகள் உதவி கேட்டு சகோதரர் கரம்பக்குடி விஜயராஜா அவர்களை தொடர்பு கொண்டு எங்கள் இருவரின் வாழ்வதாரத்துக்கு ஏதாவது உதவி செய்ய கேட்டு கொண்டதன் அடிப்படையில் அந்த குடும்பத்தை நேரில் சந்திப்பதற்காக சென்றோம் . அப்போது தார்ப்பை போத்திய குடிசை வீட்டில் பார்வை இல்லா வயதானா அக்கா தம்பி இருவரும் வசித்து வருகின்றனர் அவர்களிடம் உங்களுக்கு என்ன மாதிரியானா உதவி வேண்டும் என்று கோட்டோம் .

அவர்கள் அரசு கொடுக்கும் உதவி தொகை மாதம் 1500 இருவருக்கும் வருகி றது . அது சாப்பாட்டுக்கும் மருத்துவ தேவைக்கும் போதுமானதாக இல்லை. அதனால் அடுத்தவரின் உதவியை எதிர்பாக்கும் சூழளுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் நிறந்தரமா ன வாழ்வாதாரதிற்கு எங்களுக்கு ஆடுகள் கொஞ்சம் வாங்கி கொடுத்தால் அதை அருகில்
உள்ளவர்களின் உதவியோட நாங்களும் அதை பராமரித்து எங்கள் வாழ்வதாரத்தை பெருக்கி கொண்டு. வாழ வழி கொடுங்கள் என்று கேட்டார்கள்.
அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உங்களால் இயன்றதை செய்து உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.. மேற்கண்ட காணொளியில் உள்ள அலைபேசி தொடர்பு கொண்டு உதவி செய்யலாம். அதில் GPay நம்பர் பதிவு செய்யப்பட்டுள்ளது உறவுகளே

*உங்களால் முடிந்த சிறு சிறு உதவி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும்*

நன்றியுடன்
பொன்னுசாமி
புதுக்கோட்டை மாவட்டம்
6369696715

தமிழ்நாட்டில் தொடரும் படுகொலைகள்  கொள்ளையர்கள் வேறு தமிழ்நாட்டின் முதல்வர் வேறு அல்லபுதுக்கோட்டையில் கனிம கொள்ளைக்கு எதி...
20/01/2025

தமிழ்நாட்டில் தொடரும் படுகொலைகள்

கொள்ளையர்கள் வேறு தமிழ்நாட்டின் முதல்வர் வேறு அல்ல

புதுக்கோட்டையில் கனிம கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி படுகொலை

இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் கொள்ளயர்களுக்கும் போதை பொருள் வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் ஆளும் கட்சியினர்
இவைகளை வேடிக்கை பார்த்துகொண்டு *பொம்மை முதல்வராக செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்கள்*

ஊழல் பணத்தில் முதல்வரின் குடும்பத்திற்கு பங்கு கொள்ளை அடிக்கும் மாபியாக்களுடன் மறைமுக கூட்டணி வேறென்ன காரணமாக இருக்க முடியும்

தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு! மாபியாக்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஒரு படுகொலை!

மணல் மாபியாக்களுக்கு எதிராகப் போராடி, அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி அவர்கள் நேற்று 17.01.2025) மண் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், காட்டுப்பாவா பள்ளிவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யபுரம், துலையானூர், லெம்பலாக்குடி பகுதியில் மண்ணையும், மலைகளையும், அரசு அனுமதியின்றி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து எம்.சாண்ட் / ஜல்லி என அந்தப் பகுதி முழுவதையும் தொடர்ந்து சட்டவிரோதமாக பாழாக்கி வருகிறது கனிம மாஃபியா கும்பல்.

இந்த சட்டவிரோத கும்பல்களுக்கு மறைமுகமாக காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழுக்க உதவி செய்து வருகின்றனர். இதை எதிர்த்து தொடர்ந்து மெய்யபுரம், துலையானூர் லெம்பலாக்குடி பகுதியில், சட்ட ரீதியாக செயல்பட்டு வந்தவர் சமூக ஆர்வலர் ஜகபர் அலி அவர்கள் கடந்த 10-01-2025 அன்று கூட கோட்டாட்சியரை சந்தித்து கனிம கொள்ளை தொடர்பான விரிவான ஆதாரங்களுடன் மனு கொடுத்துள்ளார்.

இதனால் சட்ட விரோத கனிம மாபியா கும்பலுக்கு தொடர்ந்து நெருக்கடியாக இருந்து வந்தார்.

இதனை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வெறும் விபத்தாக வழக்கினை முடித்துவிடாமல் முறையான விசாரணை நடத்தி இவரது படுகொலைக்கு காரணமான மணல் மாபியா கும்பல் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தமிழ்நாட்டில் சமூக நலனில் அக்கறையுள்ள அனைத்து மக்கள் இயக்கங்களும் இதுகுறித்து கண்டனங்களை தெரிவித்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைக்க வேண்டும்.

10-09-2022 அன்று சட்ட விரோத மணல் குவாரியை புகார் கொடுத்து மூடியதற்காக, விவசாயி கரூர் குப்பம் ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை!

2022-ல் ஆதாரங்களுடன் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியதற்காக, ஈரோடு மாவட்டம், சென்னிமலை தமிழ்ச்செல்வன் மீது கூலிப்படை வைத்து கொலைவெறி தாக்குதல்!

2022-ல், நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில், தொடர்ந்து சட்ட விரோத கல் குவாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த சமூக செயல்பாட்டாளர் மணி டிப்பர் லாரி ஏற்றி படுகொலை!.
விபத்து என மூடி மறைப்பு!

கடந்த ஆண்டு சட்ட விரோத கல்குவாரியை மூடியதற்காக, 12-05-2024 அன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில், விவசாயி வெண்கல பாளையம் நடராஜன் மீது வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி!!

சென்ற மாதம் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கச்சைகட்டி சமூக செயல்பாட்டாளர் ஞானசேகரன் மீது கல்குவாரி அடியாட்கள் கொலை வெறித் தாக்குதல்!

நேற்று 17-01-2025 அன்று, சட்ட விரோத கனிம மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்ததற்காக, புதுக்கோட்டை திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி அவர்கள் வாகனம் ஏற்றி படுகொலை!!!

தமிழ்நாட்டில் திமுக அரசின் நிர்வாகம் கனிம கொள்ளை விசயத்தில் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மிகவும் மெத்தனமாக இருப்பதுடன், புகார்தாரர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடத்தவும், கொலை சம்பவங்களில் ஈடுபடவும் விசயங்களை மூடி மறைத்து ஆதரவாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

லட்சம் கோடி கனிம கொள்ளை ஊழல் முறைகேட்டை மூடி மறைக்க நடைபெறும் கொலை சம்பவங்கள் தடுக்க இயற்கை காப்பாளர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும்!

மண் காக்க உயிர் நீத்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நீதி கிடைக்க போராடுவோம்!
Chief Minister of Tamil Nadu M. K. Stalin

Address

தெற்கு 2ம் வீதி கிழக்கு, புதுக்கோட்டை
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் பாதை புதுக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மக்கள் பாதை புதுக்கோட்டை:

Share