10/05/2026
*தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!*
*தேசிய கோரிக்கை தினம் – 2026 மே 12*
*அன்புத் தொழிலாள தோழர்களே, பொதுமக்களே!*
*மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான ஒடுக்குமுறைகளைக் கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை அறைகூவலுக்கிணங்க, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*
*1.*
*தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும், விதிகளையும் உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.*
*2.*
*விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ,26,000வழங்கிட வேண்டும்.*
*3.*
*வட இந்தியாவில் நியாயமான ஊதிய உயர்வு கோரிப் போராடி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.*
*4.*
*நிரந்தரத் தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த முறையை ஒழித்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.*
*5.*
*சட்டப்படியான 8 மணி நேர வேலை மற்றும் கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.*
*6.*
*சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தி ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்க வேண்டும்.*
*நாள்: 12-05-2026 (செவ்வாய்க்கிழமை)*
*நேரம்:காலை 10 மணி*
*இடம்:: சுதேசி மில் அருகில் , புதுச்சேரி.*
*உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க அணிதிரண்டு வாரீர்!*
*இப்படிக்கு,*
*AITUC, CITU, LLF, AICCTU, NDLF, MLF, அனைத்து தொழிற்சங்கம்*
*புதுச்சேரி.*