KAIFA

KAIFA KAIFA kadaiMadai Area Integrated Farmers Association, Lake conservation, Environment protection.

26/07/2026

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்
சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாநாடு.

நாள்:30-07-2026,வியாழக்கிழமை,
நேரம்: காலை 11.00 மணி,
இடம்: வெங்கடேஷ்வரா திருமண மண்டபம்,ரெட்டவயல்.






22/07/2026

பெறுநர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு

பொருள்: வைகை நதியை மூன்று கட்டங்களாக சமூகப் பங்களிப்புடன் மீட்டெடுக்கும் திட்டத்திற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பம்.

மதிப்பிற்குரிய ஐயா,

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜீவநதிகளில் ஒன்றான வைகை நதி, தற்போது மிகக் கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேகமலை, வெள்ளிமலை மற்றும் வருஷநாடு மலைத்தொடர்களில் தோன்றும் வைகை நதி, தென்மேற்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக பல இடங்களில் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இது நதியை அறிவியல் அடிப்படையில் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது.

கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கமான (KAIFA)
நாங்கள், 2023ஆம் ஆண்டு முதல், வைகை நதி சீரமைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report - DPR) தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை மற்றும் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்து, அதனை விளக்குவதற்கான வாய்ப்பை தொடர்ந்து கோரி வந்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களது திட்டத்தை விளக்குவதற்கான சந்திப்பு வாய்ப்பு கிடைக்கவில்லை.

KAIFA அமைப்பு, உவகை ஆராய்ச்சி அறக்கட்டளை , தென்மாவட்ட விவசாயிகள் சங்கம், வைகை நதி மக்கள் இயக்கம் ,
287 கிலோமீட்டர் நீளமுள்ள வைகை நதியை, 5 மாவட்டங்களை உள்ளடக்கி, மூன்று ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக சீரமைக்கும் முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.

இந்தத் திட்டத்திற்காக அரசிடம் நிதி உதவி எதையும் நாங்கள் கோரவில்லை. திட்டத்தை செயல்படுத்த தேவையான அரசின் அனுமதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு மட்டுமே வேண்டுகிறோம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், வைகை நதியின் ஒவ்வொரு 10 கிலோமீட்டர் இடைவெளியிலும் உள்ளூர் விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைத்து, 287 கிலோமீட்டர் முழுவதும் மக்கள் பங்களிப்புடன் செயல்படும் வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எங்களது திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

• அறிவியல் முறையில் நதியை சீரமைத்து அதன் நீரேற்றத் திறனை அதிகரித்தல்.
• நீரோட்டத்தைத் தடுக்கின்ற தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.
• வரத்து வாய்க்கால்கள் மற்றும் வெள்ளப்பரப்புகளை மீட்டெடுத்தல்.
• நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு.
• உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் நீண்டகால பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு.

இந்த ஆண்டிலேயே முதல் கட்டப் பணிகளை தொடங்குவது மிகவும் அவசியமாகும். மேலும் காலதாமதம் ஏற்பட்டால், வைகை நதியின் இயற்கை அமைப்பும், விவசாயமும், நிலத்தடி நீர் வளமும் மேலும் பாதிக்கப்படும்.

எனவே, எங்களது விரிவான திட்ட அறிக்கையை அரசின் முன் விளக்குவதற்கான ஒரு சந்திப்பு வாய்ப்பையும், அதன் பின்னர் வைகை நதி சீரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை உடனடியாக தொடங்குவதற்கான அரசின் அனுமதியையும் தாழ்மையுடன் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் நீர்வள பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால தலைமுறையின் நீர் பாதுகாப்பிற்காக, அரசுடன் இணைந்து பணியாற்ற KAIFA உறுதிபூண்டுள்ளது.

நன்றி.

மரியாதையுடன்,

நவீன் ஆனந்தன்
நிறுவனர்
கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (KAIFA).

Note:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கு,

நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்களைச் சந்திப்பதற்காக நீங்கள் நேரம் ஒதுக்குவதை நாங்கள் தவறாகக் கருதவில்லை. ஆனால் அதே நேரத்தில், எந்தவித தனிப்பட்ட லாபமும் எதிர்பார்க்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் சீரமைப்பு மற்றும் நதிகள் மீட்பு போன்ற பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

வைகை நதி மீட்புத் திட்டம் தொடர்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அரசையும் நீர்வளத்துறையையும் அணுகி வருகிறோம். முழுமையான திட்ட அறிக்கையுடன், அரசிடம் நிதி உதவி எதையும் கோராமல், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அனுமதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்பை மட்டுமே கேட்டு வருகிறோம்.

ஆனால் பொதுநலனுக்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும், எதிர்கால தலைமுறைகளின் நீர் பாதுகாப்பிற்காகவும் பணியாற்றும் எங்களைச் சந்திப்பதற்குக்கூட நேரம் வழங்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

பிரபலங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் சந்திப்பு வாய்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நதி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறையாகவே தோன்றுகிறது.

நடிகர்களையும் பிரபலங்களையும் சந்திப்பது முக்கியமாக இருக்கலாம்; ஆனால் வறண்டு கொண்டிருக்கும் நதிகளையும், பாதிக்கப்படும் விவசாயிகளையும், நீர் இழந்து நிற்கும் கிராமங்களையும் காப்பாற்றப் போராடுபவர்களைச் சந்திப்பது அதைவிட முக்கியமானது.

எங்களது கோரிக்கை மிகவும் எளிமையானது:

வைகை நதி மீட்புத் திட்டத்தை விளக்குவதற்காக எங்களுக்கு ஒரு சந்திப்பு வாய்ப்பை வழங்குங்கள்.

நாங்கள் அரசிடம் நிதி கேட்கவில்லை. நதியை மீட்டெடுப்பதற்கான அனுமதியையும், அரசின் ஒத்துழைப்பையும் மட்டுமே கேட்கிறோம்.

பொதுநலத்திற்காக உழைப்பவர்களுக்கும் உரிய நேரம், மரியாதை மற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம்.










KAIFA  ஒரு புதிய அத்தியாயம் – பெங்களூரு ஏரிகள் மீட்பு பயணம்சிஸ்கோ (Cisco) நிறுவனத்தின் CSR ஆதரவுடன், கர்நாடக மாநிலம், பெ...
18/07/2026

KAIFA ஒரு புதிய அத்தியாயம் – பெங்களூரு ஏரிகள் மீட்பு பயணம்

சிஸ்கோ (Cisco) நிறுவனத்தின் CSR ஆதரவுடன், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஏரி சீரமைப்புப் பணியை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

நகர்ப்புற நீர்நிலைகளை மீட்டெடுத்து, நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்து, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நகரங்களை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

தமிழகத்தில் நீர்நிலைகள் சீரமைப்புப் பணியை தொடங்கிய கைஃபா (KAIFA), இன்று கர்நாடகத்திலும் தனது சுற்றுச்சூழல் மற்றும் நீர் பாதுகாப்பு பயணத்தை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த உயரிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் Cisco CSR மற்றும் அனைத்து கூட்டாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏரிகளை மட்டும் அல்ல; நீர் வளம், இயற்கைச் சூழல், விவசாயம் மற்றும் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தையும் நாம் மீட்டெடுக்கிறோம்.

எங்கள் இலக்கு:
ஆரோக்கியமான ஏரிகள் • நீர் பாதுகாப்பான நகரங்கள் • நிலையான எதிர்காலம்

Team KAIFA



Proud to be part of a virtual CSR volunteering event for KAIFA (Kadaimadai Area Integrated Farmers Association) as part of cisco's volunteering initiative! Our theme:Creative for a cause-"save our lakes" 🌊 A heartfelt thanks to Naveen Anandan Dr.P. Balathandayuthabani PhD (Sweden) and team for in...

15/07/2026

திட்டம் – 297 | நீர்நிலைகள் சீரமைப்பு பணி நிறைவு

தேதி: 04.07.2026

கைஃபாவின் 297வது நீர்நிலைகள் சீரமைப்பு பணி வெற்றிகரமாக நிறைவு

அனைவருக்கும் வணக்கம்.

கைஃபா (கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்) சார்பில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், கொலையூர் ஊராட்சியில் அமைந்துள்ள புதிய பல்லவன் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இந்த வரத்து வாய்க்கால் 2.5 கிலோமீட்டர் நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகும். 04.07.2026 அன்று தொடங்கப்பட்ட இப்பணி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 35 மணி நேரம் JCB இயந்திரம் பயன்படுத்தப்பட்டு, வரத்து வாய்க்கால் 100% முழுமையாக சீரமைக்கப்பட்டது.

பணிச் செலவு விவரங்கள்

- பயன்படுத்தப்பட்ட டீசல்: 250 லிட்டர்
- டீசல் செலவு: ₹25,170
- ஓட்டுநர் ஊதியம் (5 நாட்கள்): ₹5,000
- மொத்த செலவு: ₹30,170

இப்பணிக்கான டீசல் செலவை ஆடிட்டர் திரு. சந்தானகிருஷ்ணன் அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு கைஃபாவின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இப்பணிக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய கொலையூர் கிராம பொதுமக்கள், இளைஞர் மன்றம் மற்றும் இப்பணிக்கான பணி ஆணை வழங்கிய தமிழ்நாடு அரசிற்கும் எங்களது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

JCB இயந்திர உதவி: Milky Mist CSR

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை பணிகளில் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வரும் Milky Mist நிறுவனத்திற்கு கைஃபாவின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

TEAM KAIFA
கைஃபா – கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்

#நீர்நிலைகள் #நீர்மேலாண்மை #நீர்பாதுகாப்பு #மயிலாடுதுறை #சுற்றுச்சூழல்பாதுகாப்பு

07/07/2026
05/07/2026

KAIFA – Project 297

Ongoing Pirattiyur Biodiversity Lake Restoration

Location: Pirattiyur Biodiversity Lake, Trichy
Lake Area: 110 Acres

Project Partners

- Trichy Young Indians (Yi)
- Rotary Club
- KAIFA
- Exnora
- KRG
- Milkymist

Ex*****on: KAIFA

Scope of Work

- Establishing 1.5 km lake boundary.
- Removal of invasive Karuvela (Prosopis juliflora) vegetation.
- Supporting restoration of the lake's biodiversity.

Background

Pirattiyur Biodiversity Lake has been severely impacted by illegal and excessive sand mining. Around 40 locations within and around the lake have been excavated beyond the permissible depth, causing ecological degradation, loss of natural habitat, and disturbance to the lake's hydrology.

Restoration Measures

- Identification and restoration of over-excavated areas.
- Refilling excessively mined pits with sand wherever required to restore the original terrain.
- Strengthening lake boundaries to prevent further encroachment.
- Conserving and restoring the lake ecosystem for long-term biodiversity protection.

Together, we are restoring ecosystems, protecting biodiversity, and securing water resources for future generations.

KAIFA – Marching Towards 300 Water Bodies Restored.

27/06/2026

தும்பி ( தட்டான் )- நோய் பரப்பும் பூச்சிகளை உண்பதன் மூலம் ஒரு இயற்கையான பூச்சிக் கட்டுப்பாட்டாளராகச் செயல்படுவதுடன், வனவிலங்குகளுக்கு ஒரு முக்கிய உணவு ஆதாரமாகவும் விளங்குகிறது. மேலும், உள்ளூர் நன்னீர் வாழ்விடங்களின் தூய்மையைக் குறிக்கும் முக்கிய உயிரிக் குறிகாட்டிகளாகவும் இது செயல்படுகிறது.

சுற்றுச்சூழல் உயிரிக் குறிகாட்டிகள்: தும்பிகள் நீரில் முட்டையிடுவதாலும், அவற்றின் நீர்வாழ் லார்வாக்கள் மாசுபடுத்திகள் மற்றும் ஆக்சிஜன் மாற்றங்களுக்கு அதிக உணர்திறன் கொண்டிருப்பதாலும், அவை சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் சிறந்த கண்காணிப்பாளர்களாகச் செயல்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையைக் கண்காணிப்பது, நீர் மற்றும் நிலத்தின் தரத்தை மதிப்பிட விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

Dragon fly - A natural pest control by consuming disease-carrying insects, serve as a vital food source for wildlife, and act as key bioindicators that signal the purity of local freshwater habitats.

Environmental Bioindicators: Because dragonflies lay their eggs in water and their aquatic larvae are highly sensitive to pollutants and changes in oxygen, they serve as excellent sentinels of environmental health. Monitoring their populations helps scientists assess water and land quality.





Project Num:295Date:17.06.2026கடைமடை பகுதி ஒருங்கிணைந்த  சங்கத்தால் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா,  கொழையூர்  ஊ...
18/06/2026

Project Num:295
Date:17.06.2026

கடைமடை பகுதி ஒருங்கிணைந்த சங்கத்தால் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கொழையூர் ஊராட்சியில் அமைந்துள்ள 3- ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் ஏரி தூர்வாரும் பணி தொடங்கிய மகிழ்ச்சியான தருணம்... இதற்கான டீசல் பங்களிப்பு கொழையூர் ஊர் பொதுமக்கள் வாகன உதவி ஹிட்டாச்சி மில்கி மிஸ்ட் Milky Mist நிறுவனம்....



Address

Peravurani Aranthang Road
Peravurani
614804

Alerts

Be the first to know and let us send you an email when KAIFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KAIFA:

Shortcuts

Share