Global Nurses Association of Tamilnadu

Global Nurses Association of Tamilnadu For the Nurses, by the Nurses.... Democracy for Nurses well-being

செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம் , தாயகத்தில் ஊதிய பிரச்சினை இது கேட்டு பழகி போன விஷயம்,அயலகத்திலும் ஊதிய பிரச்சினை இது பு...
22/10/2025

செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம் , தாயகத்தில் ஊதிய பிரச்சினை இது கேட்டு பழகி போன விஷயம்,அயலகத்திலும் ஊதிய பிரச்சினை இது புதிய பரிணாமம்.
மாலத்தீவு நாட்டில் செவிலியராக பணிபுரிய தாயகத்தில் குறைந்தபட்சமாக 2 வருடங்கள் பெரு மருத்துவமனைகளில் பணிபுரிந்த சான்றிதழோடு, ஆங்கில போட்டி தேர்வையும் முடித்து(IELTS/OET) , இந்த நாட்டு செவிலியர் குழுமத்தின் தேர்வையும் 6 மாதத்திற்குள்ளாக கட்டாயமாக முடித்து அங்கீகரிக்கப்பட்ட செவிலியராவது ஒரு பெரும் போராட்டம் அது இருகட்டும் ஒருபுறம் ,ஏஜென்சி செலவு மறுபக்கம் பல இலட்சங்கள் இவ்வளவு போராடி இங்கு வந்தால் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் சிக்கல். ஆம் இங்கு ஊதியம் மாலத்தீவு நாட்டு ருப்பியாவில் தான் கிடைக்கும் (Except Resorts) அது 1USD = 15.42 என்ற விகிதத்தில் கிடைக்கும். கிட்டத்தட்ட ₹125000 ஊதியம் ஒரு செவிலியர் பெறுவார், முன்பெல்லாம் மாலத்தீவு SBI வங்கி மூலம் 500 USD அனுப்பலாபம் ( அவசர தேவைகளுக்கு அதிகமாக அனுப்பலாம்) அது குறைக்கப்பட்டு 400 USD அதாவது இந்திய ரூபாய் ₹33000 அனுப்பலாம் என்றானது ,இப்போது 150 USD அதாவது ₹13000 தான் அனுப்ப இயலும் சட்ட பூர்வமாக, இந்த செயலால் பெரும்பான்மை மாலத்தீவு வாழ் இந்தியர்கள் சட்ட விரோத பணபரிவர்த்தனை (ஹவாலா) செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், இதில் பண இழப்பு சராசரியாக ஒரு செவிலியர் மாத ஊதியத்திலிருந்து சுமார் ₹ 30000 வரை தற்போதுள்ள சூழலில் இழக்க நேரிடுகிறது, இது போக பலர் ஹவாலாக்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.

இதில் மாலத்தீவு மருத்துவமனை நிர்வாகங்கள் தாங்கள் கூறிய ஊதியத்தை சரியாக வழங்குகிறது, நிர்வாகங்களை துளிகூட குறை கூற இயலாது . அரசு மற்றும் நாட்டின் பணவிக்கத்தால் இத்தகைய நிலைமை என்பது நாமறிந்த தகவல்.

கடின உழைப்பை மாதந்தோறும் தோராயமாக ₹ 30000 வரை ஹவாலாக்களுக்கு கப்பம் கட்டுவதுதான் வேதனை.
யாரை குறை கூறுவது என தெரியவில்லை நிலைமை எப்போது சரியாகும் என தெரியவில்லை, சரியாகும் என நம்பவும் இயலவில்லை (coz year by year economically country is going down and down)

இந்திய அரசு தலையிட்டால் சில சமயம் புது வழி பிறக்கலாம்.
இதை பார்கும் போது வளைகுடா நாடுகளுக்கு செல்வது தான் ஞானம் என தோன்றுகிறது.

12/06/2025

BREAKING | ஏர் இந்தியா விமான விபத்து - இதுவரை தகவல்கள்

✈️ அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.17 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது

✈️ பிற்பகல் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

✈️ கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது

✈️ விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இருந்துள்ளார்.

✈️ உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவு

✈️ விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

✈️ மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

✈️ விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம்.

✈️ விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்.

✈️ விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்

12/06/2025

இந்தியர்களுக்கான சவூதி வேலைவாய்ப்பு வீசா - புதிய தகவல்கள் (ஜூன் 2025)
வேலைவாய்ப்பு வீசா நிலை

சவூதி அரேபியா, இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான "பிளாக் வேலை வீசா" (Block Work Visa) வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த முடிவு மே 2025-இல் எடுக்கப்பட்டது மற்றும் ஹஜ் யாத்திரை (Hajj) முடியும் வரை, குறைந்தது ஜூன் 30, 2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் கட்டுமானம், ஹாஸ்பிடாலிட்டி, மற்றும் வீட்டு வேலை போன்ற துறைகளில் இந்த வீசாவை பயன்படுத்துகிறார்கள்.

இடைநிறுத்தத்தின் காரணம்

இந்த தற்காலிக தடை, வேலை வீசாவை தவறாக பயன்படுத்தி ஹஜ் யாத்திரை செய்யும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், சிலர் வேலை வீசாவில் சவூதி வந்தபின் ஹஜ் யாத்திரை செய்தனர், இது கூட்டம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுத்தது. இதைத் தடுக்க, ஹஜ் காலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாகும்.

தடை வரம்பு

இந்த தடை பிளாக் வேலை வீசா, குறுகிய கால e-வீசா, குடும்ப/சுற்றுலா வீசாக்களையும் பாதிக்கிறது.

இந்தியா மட்டுமல்லாமல், பங்களாதேஷ், பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய வேலைவாய்ப்பு வீசா கோரிக்கைகள், ஏற்கனவே ஒப்புதல் பெற்ற வீசாக்கள் ஆகியவை தாமதமாகவோ, நிராகரிக்கப்படவோ வாய்ப்பு உள்ளது.

செல்லும் திட்டமுள்ளவர்கள் கூட, அனுமதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

அதிகாரப்பூர்வ விளக்கங்கள்

இந்திய அரசு இந்த தடை ஹஜ் காலத்தில் மட்டும் நடைமுறையில் இருப்பதாகவும், ஹஜ் முடிந்ததும் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவித்துள்ளது.

சவூதி மனிதவள அமைச்சும் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. ஹஜ் முடிந்ததும் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்பு

சவூதி நிறுவனங்கள் மற்றும் இந்திய வேலை தேடுபவர்கள் அனைவரும் இந்த தற்காலிக தடையால் பாதிக்கப்படுகிறார்கள்.

வேலை தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

வேலை தேடும் செவிலியர்களே பயப்பட வேண்டாம் , Prepare well, Write Exam, Get Licence and wait.... Hopefully This month end will Get a Positive Update .

14/05/2025
12/05/2025
கன்னியாகுமரி செவிலியர்கள் நல அறக்கட்டளை உலகை காக்கும் கருணை கைகளை மகிழ்விக்க TARGET NURSES ACADEMY-டன் இணைந்து இந்த NURS...
08/05/2025

கன்னியாகுமரி செவிலியர்கள் நல அறக்கட்டளை உலகை காக்கும் கருணை கைகளை மகிழ்விக்க TARGET NURSES ACADEMY-டன் இணைந்து இந்த NURSING EXCELLENCY AWARD -2025, MAY 15 Target nurses academy head office-ல் வைத்து நடத்தப்படுகிறது.கீழுள்ள இணைப்பில் உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்காக தேவையான விபரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள், விண்ணப்பிக்க கடைசி நாள் 12.05.2025 மாலை 6 மணி .

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd3-NlBya7lmEbvoBGKnYvaTxM_fUMlcTI6HQrQSqiZa4jTgA/viewform?usp=sharing

28/04/2025
12/10/2024
வன்மையாக கண்டிக்கிறோம்
12/10/2024

வன்மையாக கண்டிக்கிறோம்

அரசு மருத்துவரின் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Govt doctor Madan Kumar s*x torture Nurse

03/10/2024

Address

Nerkundram
600107

Alerts

Be the first to know and let us send you an email when Global Nurses Association of Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Global Nurses Association of Tamilnadu:

Share