05/05/2026
சேவைக்கு வரவேற்கிறோம் – இணைந்து சாதிப்போம்!
அன்பு நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும், சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்களுக்கும் வணக்கம்.
MSSC EEHAI FOUNDATION சார்பாக பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்:
நோயாளிகளுக்கு உதவி (குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள்)
இரத்ததான முகாம்கள்
கல்வி தொடர முடியாத மாணவர்களை கண்டறிந்து உதவி
ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டி வழங்குதல்
வருடந்தோறும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோட் புத்தகங்கள், பைகள், கல்வி உபகரணங்கள் வழங்குதல்
கல்லூரி மாணவர்களுக்கு கட்டண உதவி
அதோடு மட்டும் அல்லாமல்:
போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள்
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க வழிகாட்டுதல்
விளையாட்டுப் போட்டிகள் நடத்தி திறமைகளை ஊக்குவித்தல்
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பண்டிகை நாட்களில் சமூக நலத் திட்டங்கள்
ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்குதல்
பசியால் வாடும் உறவுகளுக்கு உணவளித்தல்
இவ்வாறு பல நல்ல செயல்களை செய்து வருகிறோம்.
இந்த சேவைகள் தொடர்ந்து நடைபெற பல நல்லுள்ளங்கள் தங்கள் உதவிகளை வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களின் உதவியே எங்களின் பலம்
இன்னும் பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற,
நல்ல மனம் கொண்ட நண்பர்கள்,
சிறந்த நிலைமையில் இருக்கும் நபர்கள்,
வேலைவாய்ப்பில் இருப்பவர்கள் அனைவரும்
👉 பணமாகவோ அல்லது பொருளாகவோ உதவி செய்ய முன்வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் சிறிய உதவி கூட ஒரு மாணவனின் எதிர்காலத்தை மாற்றும்…
ஒரு குடும்பத்தின் வாழ்வில் நம்பிக்கையை உருவாக்கும்…
உதவி செய்ய:
MSSC EEHAI FOUNDATION
A/C No: 120035209557
IFSC: CNRB0016181
Bank: Canara Bank
Branch: Karinkal
மனதில் நிற்கும் ஒரு உண்மை:
“நாம் சேர்ந்து செய்கிற சேவை, பலரின் வாழ்க்கையை உயர்த்தும்.”
https://www.mssceehaifoundationindia.site/
🙏 நன்றி | வாழ்க வளமுடன் 🙏
MSSC EEHAI Foundation