16/06/2026
முதலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் கன்னியாகுமரி இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காளிகோசம் பகுதியிலும் அதுபோல கீழ்கோதையாறு , மேல்கோதையாறு ஆற்றுப்படுக்கை பகுதிகளிலும் , இராஜாக்கமங்கலம் , மணக்குடி சதுப்புநில காடுகளிலும் முதலைகள் விடப்பட்டு பாதுகாக்க பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது !
காட்டில் புலி எப்படியோ அதே போல தான் ஆற்றில் ஆற்றின் இயற்கை சமநிலைக்கு முதலையின் பங்களிப்பு உள்ளது !
பண்டை காலகட்டத்தில் ஆற்றின் கரைகள் கரையோரபகுதிகள் அடர்ந்த காடுகளாக இருந்தது அதன் பிறகே அதன் வாழிடங்கள் அழிக்கப்பட்டு உணவுக்காக வேட்டையாடப்பட்டு பல உயிரினங்கள் அழிவை கண்டது
இப்போது ஆற்றின் முகத்துவரம் வரை DTCP அப்ரூவல் பிளாட்கள் போடப்பட்டு விற்பனை செய்யப்செய்யப்பட்டு வருகிறது
மனிதனின் சுய நலனுக்காக காடுகள் ஆற்றின் கரையோர காடுகள் , மலைகள் , பள்ளதாக்குகள் , இப்படி அனைத்துமே அழிக்கப்பட்டு வருகிறது ! மனித இனம் என்பே பிற உயிரினங்களை பாதுகாக்க படைக்கபட்ட இனம் என்று தான் வேதம் சொல்லுகிறது ஆனால் சமீப காலங்களாக மனித இனத்தால் தான் பிற உயிரினங்கள் இயற்கை காவு வாங்கப்பட்டு வருகிறது !
எல்லாம் சேர்ந்தது தான் உலகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில மாதங்களாக கோதையாற்றில் முதலை என்ற செய்தி அதன் video கள் வைரல் ஆகி வருகிறது அது அதன் வாழிடத்தில் தான் வாழுகிறது அதை அதே இடத்தில் வாழ விட வேண்டும் இல்லாத பட்சத்தில் பிடித்து குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அப்பர்கோதையாறு ஆற்று படுக்கை வனப்பகுதி , மேல்கோதையாறு அணை பகுதி , கீழ் கோதையாறு ஆற்று படுக்கை வனப்பகுதி , காளிகேசம் ஆற்றுபடுக்கை வனப்பகுதி போன்ற இடத்தில் திறந்து விட்டு அந்த பகுதியில் முதலை பாதுகாக்க பட்ட வன உயிரின பகுதி என்ற அங்கீகாரம் அளிக்கபட வேண்டும் ! அதுபோல இப்போது அந்த முதலை தென்பட்ட கோதையாற்ற்றின் பகுதியிலே அது அதன் வாழிட பகுதியில் வாழ குறிப்பிட்ட சில கிலோமீட்டர் தூரத்தை பாதுகாக்கப்பட்ட ஆற்றுப்பகுதி வன உயிரின வாழிடமாக தரம் உயர்த்தி பாதுகாக்கபட வேண்டும் !
இராஜாக்கமங்கலம் ,மணக்குடி,வள்ளியாறு போன்ற சதுப்புநில காடுகள் கொண்ட ஆற்றுப்படுக்கை வனப்பகுதியை முதலைகள் மறு வாழ்வு பகுதியாக பாதுகாக்கப்பட்டு அந்த பகுதியை மற்றும் இயற்கையை பாதுகாக்க பட வேண்டும் ! ஆரல்வாய்மொழி பொய்கை அணையை தேர்வு செய்ய வேண்டும் பூமி என்பது நமக்காக படைக்கப்பட்டது என்று எதுவும் இல்லை காரணம் பூமி சூரியனை சுற்றி வருகிறது சந்திரன் பூமியை சுற்றி வருகிறது ! சூரியன் MilkeyWay galaxy யை சுற்றி வருகிறது சூரிய குடும்பம் பூமி உட்பட இந்த MilkeyWay galaxy யை இதுவரை 22 முறை தான் முழுமையாக சுற்றி உள்ளது அப்போ பாருங்கள் இந்த பேரண்டம் எவ்வாறு பெரியது
இதில் சூரியன் 21 முறை MilkeyWay galaxy யை சுற்றிய போது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் கூட இங்கே இல்லை டைனோசர் தான் இருந்து டைனோசர் கள் அழிக்கப்பட்டு தான் மனித இனம் உருவானது
நம் பூமி உட்பட இந்த சூரிய குடும்பம் 23 வது முறை MilkeyWay galaxy யை சுற்றி வரும் போது அடுத்த பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு இங்கு மனித இனம் இருக்கமா என்பதை கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று தான் எதுவும் இந்த பூமியில் நிரந்தரம் இல்லை
இயற்கையை பாதுகாக்க பட வேண்டும் அவ்வளவு தான்