03/01/2026
" "
மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாகச் செயற்பட்டு வரும் Al Amanath English Academy - ன் 20வது "Eloquent Speaker Awards - 2025 விழா" கடந்த 30.12.2025 செவ்வாய்க்கிழமை அன்று மேலப்பாளையம் நபி நகரில் உள்ள அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது.
இறைமறை வசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. Al Amanath English Academy-யின் Language Trainer "S.M.காஜா முகைதீன்" English Khaja அவர்கள் தலைமை தாங்கினார். "ஆங்கிலப் புலமையை வளர்ப்பதில் நவீன தொழிற்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்து தலைமையுரை ஆற்றினார்.
அஸ்மத் நர்சரி & பிரைமரி பள்ளியின் தாளாளர், "பொறியாளர். N.M.மஜீத்" அவர்களும், சென்னை புதுக் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவரும் அல்-அமானத் இங்கிலீஷ் அகாடமியின் ஆலோசகருமான "டாக்டர். M.S.A. ஜபருல்லாஹ் கான்" அவர்களும் முன்னிலை வகித்தனர்.
மஜீத் சார் அவர்கள் குட்டி கதை மூலம் தன்னம்பிக்கையூட்டும் சிற்றுரை வழங்க, சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையை ஜபருல்லாஹ் சார் வழங்கினார். சென்னை புதுக் கல்லூரியின் பேராசிரியர்கள் FEED ASSOCIATION FOR EDUCATION AND EMPOWERMENT என்ற அமைப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊர்களில் கல்வி சேவைகள் செய்யும் தன்னார்வ அமைப்புகளை கண்டறிந்து அவர்களின் சேவைகளுக்கு மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். அவர்களின் முதலாம் ஆண்டு விருது நமது Amanath English Academy க்கு தான் வழங்கப்பட்டது என்பதை ஜபருல்லாஹ் சார் அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்.
சென்னை புதுக் கல்லூரியின் student affairs Dean மற்றும் உதவிப் பேராசிரியருமான Dr. M. அன்சார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் (Chief Guest) கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார். அல் அமானத்தின் சேவையை வெகுவாக பாராட்டியதுடன் இது போன்ற சேவைகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார். நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறும் எளிய வழிமுறையினை உதாரணத்துடன் விளக்கி ஊக்கப்படுத்தினார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையினை கண்டு வியந்து பாராட்டியதுடன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாணவரின் புலமையை பாராட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடையை அந்த மாணவனுக்கு அணிவித்து உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியாக அமைந்தது.
மாணவர்களின் சமயோசித அறிவை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்திருந்த Instant Topics Session ல் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் சிறப்பு விருந்தினர் கொடுத்த தலைப்பில் எவ்வித முன்தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசி அசத்தினர். மாணவர்களின் திறமையைக் கண்டு சிறப்பு விருந்தினர் வெகுவாக வியந்து பாராட்டினார்.
அதில் Junior பிரிவில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவி "A. Mydheen Sunaitha" அவர்களுக்கு Eloquent Speaker Award ம், Senior பிரிவில் மிகச் சிறப்பாக பேசி அசத்திய மாணவர் "R. Mohamed Uvaise" அவர்களுக்கு Proficient Speaker Award ம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நமது Academy-யில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனியார் நிறுவனத்தில் Software Developer ஆக பணிபுரியும் E. விக்னேஷ், Associate Consultant ஆக பணிபுரியும் M. சதிஷ்குமார் ஆகிய முன்னாள் மாணாக்கர்கள் Guests of Alumini-யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆங்கிலத்தின் முக்கியத்தும் குறித்தும், Al Amanath English Academy யில் பயிற்சி பெற்றது தங்கள் நேர்முகத் தேர்வுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது என்ற தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
Readers Academy ல் Reading பயிற்சி முடித்த குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் அல்-அமானத் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அல்- அமானத் வெல்ஃபர் அசோசியேசன் நிர்வாகியும், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி உதவிப் பேராசிரியருமான சகோ. V.P. அசன் நாகூர் மீரான் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசும் அழகைக் கண்டு பெருமிதம் கொண்டனர்.
நிறைவாக நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
புகழனைத்தும் இறைவனுக்கே!