17/06/2026
சென்னை மாங்காடு ஶ்ரீகாமாட்சியம்பாள் ஆலய அர்ச்சகர் சிவஶ்ரீ. மணிகுருக்கள் ஶ்ரீமதி உமா தம்பதிகளின் செல்வக்குமாரத்தி சௌபாக்கியவதீ. துர்க்கா@காமாட்சிக்கும் சிறுவாபுரி ஶ்ரீமுருகன ஆலயம் சிவஶ்ரீ. ஶ்ரீராம்குருக்கள் சௌ. விசாலாட்சி தம்பதிகளின் செல்வக்குமாரன் சிரஞ்சீவி. விஜய்@ விஸ்வபதி சர்மாவிற்கும் விவாஹசுபமுகூர்த்தம் சென்னை மாங்காடு கல்யாணி திருமண மண்டபத்தில் இனிது நிகழ்ந்தது. மாங்காடு ரவி சிவாசாரியார், முடிச்சூர் வேதசிவாகம பாடசாலை முதல்வர் சிவஶ்ரீ. ஷண்முகம் சிவாச்சாரியார் திருவான்மியூர் கணேச சிவாச்சாரியார் உள்ளிட்ட ஆதிசைவ சிவாச்சாரியார்கள் குலப்ரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஶ்ரீஶ்ரீஶ்ரீ குருநாதர் அவர்கள் மாங்காடு ஶ்ரீகாமாட்சியம்மனை தரிசித்து புதுமணத்தம்பதிகளுக்கு ஶ்ரீமஹாஸதாசிவப்ரசாதம் வழங்கி ஆசீர்வதித்தார்கள். உடன் லண்டன் ஈலிங் ஶ்ரீகனகதுர்ககையம்மன் ஆலய அர்ச்சகர் சிவஶ்ரீ வேலூர் பாலா உள்ளிட்ட சென்னைப்பகுதி சிவபுரம் குருகுலத்துச்சீடர்கள் கலந்து கொண்டனர்.
மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை