29/03/2022
#உழைப்போம்! #ஒன்றிணைவோம்!
#உரிமையை_வென்றெடுப்போம்!!
#மயிலாடுதுறையில் SDTU தொழிற்சங்கம் சார்பில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு SDTU தொழிற்சங்கம் மாவட்டத் தலைவர் #சாகுல்_ஹமீது தலைமை வகித்தார். தொழிற்சங்க மாவட்ட த துணை செயலாளர் #மஜ்கர்தீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். CITU மாவட்ட துணைச் செயலாளர் தோழர் #ராமானுஜன் அவர்களும், SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஆத்தூர் #பைசல் ரஹ்மான் அவர்களும், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் #சுப்பு மகேஷ் அவர்களும், தொ மு ச மாவட்ட கவுன்சில் தலைவர் #பொன்_நக்கீரன் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் #சஃபிக் அஹமது அவர்களும் கண்டன உரையாற்றினர்.
#பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்து!
#திருத்தப்பட்ட_தொழிலாளர் நலச் சட்டத்தை திரும்பப்பெறு! உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் #ஜெகபர் அலி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
வெளியீடு:-
SDTU தொழிசங்கம்
மயிலாடுதுறை மாவட்டம்.