10/08/2026
மக்கள் கண்காணிப்பகம் மற்றும் அய்டியாஸ் மையம் இணைந்து நடத்தும் சமூக வளர்ச்சி திட்டத்தின் சமுதாய வளர்ச்சி மையங்களில் முனைவர் வே.வசந்தி தேவி வாசிப்பு இயக்க மன்ற துவக்க விழா முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமிகு பாலமுருகன் தலைமையில் 08.08.2026 நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்துக்கொண்டு பத்து வாசிப்பு மன்றங்களுக்கு 30 வாசிப்பு கதை புத்தகம், மன்ற பெயர் பதாகை, மன்ற பதிவேடு மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு தனபால் (மத்திய மண்டலம்) திருமிகு பேச்சியம்மாள் (தெற்குமண்டலம்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு வெண்ணிலா மற்றும் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் திருமிகு கணேசன், அய்டியாஸ் மையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு முனியாண்டி ஆகியோர் கதை உருவாக்குதல், வாசிப்பு முக்கியத்துவம், மன்றத்தில் வாசிப்பு பயிற்சியை கொண்டு செல்வது குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
மக்கள் கண்காணிப்பகம் செயல் இயக்குனர் திருமிகு ஹென்றி திபென் அவர்கள் சமுதாய பணியாளர்கள் வாசிப்பு பயிற்சியை மையத்தில் சிறப்பாக கொண்டு செல்வதில் சமுதாயப் பணியாளர்கள் மற்றும் அலைகுடி மக்கள் உரிமைகள் இயக்க கிளை பொறுப்பாளர்களின் பங்கு குறித்து பேசினார். சமூக வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு பிரபு வரவேற்றார் வழக்கறிஞர் திருமிகு பாண்டியராஜன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் 7 மாவட்டங்களை சார்ந்த அலைகுடி மக்கள் உரிமைகள் இயக்க கிளை பொறுப்பாளர்கள் மற்றும் சமுதாய வளர்ச்சி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.